MIRACAL

Saibaba

Saibaba's Miracle

Miracle-1     Miracle-2     Miracle-3     Miracle-4     Miracle-5     Miracle-6     Miracle-7     Miracle-8     Miracle-9     Miracle-10    

Miracle-11   Miracle-12   Miracle-13   Miracle-14   Miracle-15   Miracle-16   Miracle-17   Miracle-18   Miracle-19   Miracle-20  

Miracle-21   Miracle-22   Miracle-23   Miracle-24   Miracle-25   Miracle-26   Miracle-27   Miracle-28   Miracle-29   Miracle-30  

Miracle-31   Miracle-32   Miracle-33   Miracle-34   Miracle-35   Miracle-36   Miracle-37   Miracle-38   Miracle-39   Miracle-40  

Miracle-41   Miracle-42   Miracle-43   Miracle-44   Miracle-45   Miracle-46   Miracle-47   Miracle-48   Miracle-49   Miracle-50  

Miracle-51   Miracle-52   Miracle-53   Miracle-54   Miracle-55   Miracle-56   Miracle-57   Miracle-58   Miracle-59   Miracle-60  

Miracle-61   Miracle-62   Miracle-63  

Miracle : 1

சாய் ராம். நான் எவ்வளவோ கோவில்களுக்கு சென்றுள்ளேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் மைலாப்பூர் பாபா கோவில் உள்ளே நான் கால் வைத்த உடன் என் உடல் முழுவதும் ஒரு சிலர்ப்பு (vibration) ஏற்பட்டது. என்னால் அந்த இடத்தை விட்டு அகல முடியவில்லை. இதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. சற்று நேரம் அப்படியே நின்று கொண்டு இருந்தேன். எந்த கோவிலிலும் கிடைக்காத அனுபவம். நேராக பாபாவிடம் சென்று அவர் கால்களை பிடித்து கொண்டு கண்களில் நீர் மல்க, பாபா இப்போது என் உயிரை தங்களிடம் ஒப்படைத்து விட்டேன். இனி என் உயிர் உங்களுடையது என அவரிடம் என்னை ஒப்படைத்து விட்டேன். தொடரும்.......

Miracle : 2

சாய் ராம். பாபாவினால் என் வாழக்கையில் நடந்த அற்புதம். என் மகன் விஷால் 10 ம் வகுப்பில் படிக்கிறான். 10 ம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் 12 ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் பிப்ரவரி மாதம் 1 ம் தேதி பள்ளி சென்ற என் மகன் பள்ளியில் கீழே விழுந்து கீழே அழுத்தமாக கை வைத்ததில் வலது கையில் சுண்டு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவர் தேர்வு எழுத முடியாதென தெரிவி்த்து விட்டார். இருப்பினும் எனக்கும் என் மகனுக்கும் பாபாவிடம் இருந்த நம்பிக்கை குறைய வில்லை. நம்பிக்கையுடன் பாபா வை வழிபட்டு வந்து இந்நிலையில் அரசாங்கத்தால் தேர்வு எழுத 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கபட்ட நிலையில், தேர்வுக்கு முன் 75% மட்டுமே குணமடைந்த நிலயில் ஒருநாள் காலை 7 மணி அளவில் நாங்கள் எதுவும் செய்யாத நிலையில் என் மகன் நெற்றியில் நிறைய உதியுடன் என் எதிரில் நின்றான். நெற்றியில் உள்ள உதி குறி்த்து கேட்ட போது அவனுக்கும் அது தெரியவில்லை. இது பாபா அவனை ஆசிர் வசித்து அவரது கையால் வைத்த உதி என தெரிந்து கொள்ள முடிந்தது. பாபா வின் ஆசியுடன் அற்புதமாக தேர்வு எழுதி திரும்பினான் என் மகன். பாபா எப்பொழுதும் எங்களுடன் இருந்து ஆசி வழங்குகிறார் என்பதை மன பூர்வமாக உணர முடிகிறது. பாபாவே எங்கள் கண் கண்ட தெய்வம். சாய் ராம். Jeyanthi sai, saidapet

Miracle : 3

பாபா கையால் அவரே என் நெற்றியில் உதி வைத்த சம்பவம். சாய் ராம். பாபா தன் பக்தர்களின் கனவில் பகலில் அல்லது இரவில் எந்த நேரத்தில் எந்த ரூபத்தில் வந்தாலும் அது உண்மையே. ஒருநாள் இரவு 2.30 மணியளவில், எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் நான் ஒரு கோவிலுக்கு செல்கின்றேன். அங்கு 10 அடி உயரத்தில் ஒரு அம்மன் சிலை இருந்தது அம்மனை வணங்கி விட்டு கோவிலில் சுற்றி வரும் போது அங்கு பக்க வாட்டில், துவார கமாய் பாபா சிலை இருப்பதை பார்த்தேன். 6 அல்லது 7 படிகள் ஏறினால் பாபாவின் தலைக்கு மேலே ஒரு அடி உயரம் தான் உள்ளது. குனிந்தபடி உள்ளே சென்று பாபாவின் பாதத்தை வணங்கி அவர் காலடியில் உள்ள உதியை பூசிக் கொண்டு குனிந்த படியே வேறு ஒரு பக்கம் வெளியில் வர வேண்டும். அனைவரும் வரிசையில் நின்றனர். முதலில் ஒரு பெண் உள்ளே சென்று பாபா வை வணங்கி உதி வைத்து வெளியில் வந்தார். பிறகு மற்றொரு பெண் இது போல செய்தார். மூன்றவது ஒரு மனிதர் உள்ளே செல்ல ஒரு செகண்ட் தாமதம் செய்தார். அதற்குள் நான் உள்ளே சென்று விட்டேன். பாபா வின் பாதத்தை தொட கை நீட்டிய போது, பாபா தத்ரூபமாக மாறி விட்டார். என்னை பார்த்து நீ என்ன உனக்கு முன் இருப்பவர்களை எல்லாம் கடந்து முன்னால் வருகிறாய் உனக்கு என்ன திமிர். நீ அவ்வளவு பெரிய ஆளா? என கண்டபடி திட்டினார். என்னால பேச முடியவில்லை. பாபாவை பார்த்தபடி அப்படியே நின்று விட்டேன். பிறகு பாபா கலகலவென சிரித்தபடி, பயந்து விட்டாயா என்று கேட்டபடி அங்கிருந்த உதியை அவர் கையால் எடுத்து என் நெற்றியில் பூசி விட்டார். பாபா வின் கையால் நமக்கு உதி வைப்பதா? நமக்கு எவ்வளவு பெரிய பாக்கியம் என அப்படியே சிலிர்த்து விட்டேன் இதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம். வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவம். ஜெய் ஜெய் சாய் ராம்.

Miracle : 4

பாபா கோவில் பிரசாத்தின் மகிமை. உணர்த்திய பாபா. ஓரு நாள் நான் சனிக்கிழமையன்று பாபா கோவிலுக்கு சென்று இருந்தேன். பாபாவின் பாதம் பணிந்து வணங்கிவிட்டு கோவிலில் சுற்றி வந்தேன். பிறகு ஓரிடத்தில் அமர்ந்தேன். அப்போது என் எதிரில் பெரிய வரிசையில் ஆண்களும் பெண்களும் பிரசாதம் பெறுவதற்காக நின்று இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரசாதம் அவர்கள் வாங்கி கொள்ள வேண்டும். என நினைத்து நாம் போகலாம் என்று வந்து விட்டேன். வீட்டிற்கு வந்தவுடன், எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவர் ஊசி, மருந்து எல்லாம் கொடுத்தும், வீட்டு வைத்தியம் செய்தும் என் வயிற்று வலி தீரவில்லை. அடுத்த சனிக்கிழமையும் வலியுடன் கோவிலுக்கு சென்றேன், வழக்கம் போல பாபாவின் பாதம் பணிந்து வணங்கிவிட்டு கோவிலில் சுற்றி வந்தேன். அன்று அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்தேன். அப்போது அனைவரும் பிரசாதம் பெற வரிசையில் நின்றனர். அப்போது என் மனதில், சென்ற வாரம் பிரசாதம் வாங்கவில்லை. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வயிற்று வலி. எனவே பாபா இன்று நான் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று கொள்கிறேன், பிரசாதம் சாப்பிட்டதும் வயிற்று வலி சரியாகிவிடும் படியாக அருள் பாலிக்கும் படி வேண்டி கொண்டேன். என்ன ஆச்சர்யம் கோவிலில் இருந்து வெளியில் வருவதற்கு முன்பே வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. அன்று முதல் எந்த கோவில் சென்றாலும். பிரசாதம் கொடுத்தால் வாங்காமல் வருவது இல்லை. இது பாபா எனக்கு உணர்த்தியது. ஜெய் ஜெய் சாய் ராம்.

Miracle : 5

பாபா தென் ஷிர்டி சாய் பாபா கோவில் கட்ட பாபா செய்த அற்புதம். ஓரு நாள் நான் பாபா கோவிலுக்கு சென்று பாபா வின் எதிரில் அமர்ந்து தியானம் செய்து முடிந்து கோவிலில் சுற்றி வந்து வணங்கியபின் வெளியில் வந்தேன். என் நண்பர் ஒருவர் என்னிடம், நான் மதுராந்தகம் அருகில் கருங்குழி எனும் ஊரில் ஒரு இடம் (Land) பார்க்க போகிறேன் தாங்கள் என்னுடன் வர முடியுமா? என கேட்டார் நானும் சரி போகலாம் என்று Madhuraantakam அருகே கருங்குழி ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள கத்திரி சேரி எனும் கிராமம் சென்று அங்குள்ள நிலத்தை பார்த்து விட்டு வந்த பின்னர் பத்து தினங்கள் கழித்து ஒரு நாள் நான் பாபாவை கண் மூடி மவுனமாக தியானம் செய்யும் போது மூடி இருந்த என் கண் முன்னால் நாங்கள் பார்த்து விட்டு வந்த நிலம் தெரிந்தது. உடனே என் செவிகளில் அங்கு போய் கோவில் கட்டு என்ற வார்த்தை விழுந்தது. எனக்கு கண்களில் நீர் வழிய அப்படியே அதிர்ந்து உட்கார்ந்து விட்டேன். ...... தொடரும் தொடர்ச்சி....... அங்கு போய் கோவில் கட்டு என்ற வார்த்தை காதில் விழுந்ததும் கண்களில் தாரை தாரை யாக கண்ணீர் வடிய பாபாவை பார்த்தபடியே அமர்ந்து இருந்தேன் பின்னர் இது உண்மையாக இருக்குமா? அல்லது நமக்கு ஏற்பட்ட கற்பனையா? என்று நினைத்தேன். எப்படி இருந்தாலும் சரி, பாபா தங்கள் விருப்பம் அதுவானால் அதன் படியே நடக்கட்டும் என்று கூறி விட்டேன். அடுத்த ஒரு வாரத்தில் அந்த நிலத்தின் உரிமையாளர் எனக்கு போன் செய்து, அன்று நீங்கள் பார்த்து சென்ற நிலத்தை பத்திர பதிவு செய்து கொள்ளலாமா என்று கேட்டார். அப்போதுதான் ஒருவேளை பாபா சொன்னது உண்மையாக இருக்குமோ என நினைத்தேன். எப்படி இருந்தாலும் சரி என்று என்னிடம் இருந்த பணத்துடன் கொஞ்சம் கடன் வாங்கி அந்த நிலத்தை பதிவு செய்து 26,01.2015 குடியரசு தினத்தன்று வாஸ்து நாள் என்பதால் அன்று பூமி பூஜை நடந்தது. அதில். நடிகர் திரு. பாண்டு அவர்கள் மற்றும் பித்துகுழி முருகதாஸ் அவர்களின் பிரதம சீடர் திரு. அனந்தராமன் அவர்கள் எங்கள் குடும்பத்தினர் உற்ற நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.........தொடரும். Sai Prakash. தொடர்ச்சி பூமி பூஜையை கிழ‌க்கு தாம்பரத்தில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவில் குருக்கள் நடத்தி வைத்தார். அன்றே கோவில் பணி பாபாவின் பூரண ஆசிர்வாதத்துடன் துவங்க பட்டது. ஏதோ ஒரு கோவில் கட்ட போகிறேன் என்று தான் நினைத்தேன். ஆனால் பாபா ஒவ்வொரு கட்டத்திலும் அவரின் விருப்பபடி தான் கோவில் பணி நடைபெற்றது. முதலில் துவாரகாமாய் கட்டும் பணி நடைபெற்று முடிந்தது.

Miracle : 6

கோவில் கட்ட ஆரம்பிக்கும் முன்பாக பாபா என்னிடம் நீ பாபா கோவில் கட்டுகிறேன். என்பதை மட்டும் அனைவரிடமும் சொல். ஆனால் கோவில் கட்டுவதற்காக யாரிடமும் பணம் கேட்க வேண்டாம். கோவில் கட்டும் பணியில் பங்குபெற வேண்டும் என்றால் அதற்கு ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். அப்படிபட்ட வர்களை நான் அனுப்புகிறேன். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதை அறிந்து அந்த பணியை அவர்கள் செய்ய அனுமதிக்கலாம் என்று கூறினார். அதன்படியே பாபா வினால் அனுப்பபட்ட வர்களிடம் பொருட்களை அல்லது அவர்கள் செய்யும் பணியை எற்றுக் கொண்டேன்..ஒரு நாள் பாபா என்னிடம், பல முறை செங்கல் மற்றும் மணல் முதலிய பொருட்களை வழங்கிய ஒரு பக்தரிடம் துனி (Dhuni) கட்டும் பணியை ஒப்படைக்கும்படி பாபா என் கனவில் தெரிவித்தார். இதை அந்த பக்தர் இட‌ம் தெரிவித்தவுடன், பாபாவின் அருளாசி பெற்ற அந்த பக்தர் உடனே அதை ஏற்று அப்பணியை சிறப்பாக நடத்தி கொடுத்தார். பாபா தன் சத் சரிததில் ஒருவர் பாபாவுக்கு செய்யும் உதவியை பத்து மடங்காக திரும்ப வழங்க தான் கடமை பட்டுள்ளதாக தெரிவி்த்துள்ளார். Sai Prakash.

Miracle : 7

சாய் ராம் நண்பர்கள் இருவருக்கு திருமண பாக்கியம் அருளிய பாபா. நண்பர்கள் இருவர் தொழில் செய்பவர்கள். இருவரும். பாபா கோவிலுக்கு உண்டான பணிகளையும் செய்து வந்தனர். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. நீண்ட காலமாக முயற்சி செய்தும் எந்த வரனும் அமைய வில்லை. இந்நிலையில் பாபாவிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது. நானும் பாபாவிடம் அவர்களுக்காக வேண்டிகொண்டேன் பாபாவின் அருளால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருவருக்கு திருமணம் மிக சிறப்பாக நடந்தது. தற்போது ஒருவருக்கு பாபாவின் திருவருளால் நல்லவிதமாக திருமண நிச்சய தாம்பூலம் நடைபெ‌ற்றது. பாபா தன்னை முழுவதுமாக நம்பும் பக்தர்களின் கோரிக்கைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் இருந்ததில்லை. பாபா ஒரு முறை தன்னை நம்பிய பக்தர்களின் நல்ல கோரிக்கைகளை நிறைவேற்றில்லை என ஒரு பக்தராவது சொல்ல முடியுமா? என்று கேட்கிறார். Sai Prakash. பாபா உயிருடன் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் அவர் எதிரில் பக்தர்கள் அமர்ந்து இருந்தனர். அப்போது ஒரு ஏழை பக்தர் ஒருவர் வந்து பாபாவின் காலில் விழுந்து ஆசிர் வாதம் பெற்றார்.பாபா அவரை அருகில் நிறுத்தி இவர் நேற்று இரவு முழுவதும் என்னை தூங்க விடவில்லை. எனென்றால் இரவு புகை வண்டியில் வரும் போது சாய் ராம் சாய் ராம் என என்னை அழைத்த படியே வந்தான். அவன் குரல் என் காதில் விழுந்த படியே இருந்ததால் என்னால் தூங்க முடியவில்லை என்று கூறினார். இதில் இருந்து நாம் சாய் ராம் சாய் ராம் என்று சொல்லி கொண்டு இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பாபாவின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பதை அறியலாம். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. பாபாவின் உத்தரவு இல்லாமல் ஷிர்டி உட்பட எந்த பாபா கோவிலுக்கும் போய் வர முடியாது. அவ்வாறு போய் வந்தால் ஒரு மாற்றம் தெரியும். இல்லையென்றால் நமது துன்பத்தின் தாக்கமாவது நிச்சயம் குறையும். உ‌ரிய நேரம் வந்தவுடன் பல மடங்காக நமக்கு நன்மைகள் நடந்து விடும். ஜெய் ஜெய் சாய் ராம்.

Miracle : 8

பல ஆண்டுகளுக்கு பின் குழந்தை பாக்கியம் அருளிய பாபா ஒரு கணவன், மனைவி இருவருக்கும் திருமணம் நடந்த அடுத்த ஆண்டே குழ‌ந்தை உருவானது. அது கற்பபை செல்லும் வழியிலேயே வளரத் துவங்கியது. அதை கண்ட மருத்துவர் இந்த இடத்தில் குழந்தை வளர்ந்தால் ஃபர்ஸ்ட் (Burst) ஆகி விடும். பெரிய உயிருக்கு ஆபத்து என்று சொல்லி உடனடியாக சிசேரியன் செய்ய வேண்டும் என கூறி அவ்வாறே செய்து விட்டனர். அதன் பிறகு பல மருத்துவர்களை சந்தி்த்தும், பல்வேறு கோவிலுக்கு சென்றும் 12 ஆண்டுகளாக மகப்பேறு பாக்கியம் கிடைக்கவில்லை. ஒரு நாள் நான் அவர்களுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது இந்த விஷயம் என் கவனத்திற்கு வந்ததது. கொஞ்சம் இருங்கள் என்று பாபாவிடம் நான் வேண்டினேன். உடனே யார் சொன்னது உங்களுக்கு குழந்தை இல்லை என்று, நிச்சயம் உங்களுக்கு குழந்தை பிறக்கும். நீங்கள் பாபாவை வணங்கு வீர்களா? என கேட்டேன். இ‌ல்லை என்றார்கள். இன்று முதல் நம்பிக்கையுடன் பாபாவை வழிபடுங்கள் என்று கூறி அவர்களிடம் பாபா படம் இல்லாததால் என் பாக்கெட்டில் இருந்த பாபா படத்தை கொடுத்து நம்பிக்கையுடன் வழிபடுமாறு சொன்னேன். அவ்வாறு குழந்தை உருவானதும் பாபாவின் பெயரில் எதாவது ஒரு காப்பகம் ஒன்றில் விஜய தசமியன்று ஒரு வேளை அன்னதானம் செய்ய வேண்டும் என்ற கூறி அனுப்பினேன். அடுத்த 15 தினங்களில் என்னை தேடி வந்து நாட்கள் கடந்து விட்டதாக தெரிவித்தார்கள்.மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஸ்கேன் செய்து பார்த்ததில் குழ‌ந்தை கர்ப்பபையில் ந‌ன்றாக உருவாகி இருந்தது தெரிய வந்தது. அவர்களால் சந்தோஷதை தாங்க முடியவில்லை. உடனே அன்னதானம் செய்ய என்னையும் வரும்படி அழைத்தனர், நானும் அவர்களுடன் சென்றேன். இ‌தி‌ல் ஆச்சர்யம் என்னவென்றால் அதற்க்கு அடுத்த நாள் விஜயதசமி. பாபா செய்த மறக்க முடியாத அற்புதம். ஜெய் ஜெய் சாய் ராம். அந்த தம்பதியினர் தற்போது தங்கள் குலத்தை யுடன் சந்தோஷமாக பாபா விடம் தீவிர பக்தியுடன் வாழ்ந்து வருகின்றனர். Sai. Prakash.

Miracle : 9

சாய் பாபாவை கோவிலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தல் துவாரகாமாய் கட்டிட பணி நிறைவு பெற்ற நிலையில். பாபாவின் மார்பில் (Marble) சிலை ஷிர்டியில் உள்ளது போல 5'.6'' அடி உயரத்தில் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு சென்னையில் பாபா சிலை கிடைக்கும் இடங்களில் எல்லாம் சென்று பார்த்தும். விலை அதிகம் என்பதை விட என் மனதிற்கு பிடித்த மாதிரி இல்லை. மேலும் இங்குள்ள சில சிலைகள் பல பாகங்களாக செய்யப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டு இணைப்பு தெரியாமல் பாலீஸ் செய்ய ப‌ட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த மார்பில் சிலைகள் எங்கே உருவாக்க படுகிறது. என அறிய முற்பட்ட போது பாபாவின் அருளால் அச்சிலை ராஜஸ்தான் மாநிலதில் ஜெய்பூரில் சாமி சிலைகள் அனைத்தும் செய்ய படுவதாக அறிந்து நா‌ங்க‌ள் மூன்று பேர் இங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் சென்று அங்கு கிட்ட தட்ட 200 பாபா சிலைகளுக்கு மேல் பார்த்தும் என் மனதிற்கு எதுவும் பிடித்த மாதிரி இல்லை. மீண்டும் குழப்பம். இந்நிலையில் பாபாவின் விருப்பபடி அந்த ஊரில் சிலை செய்வதில் திறமையான சிற்பி யாரென அறிந்து அவரிடம் சென்று எங்களுக்கு 5'.6'' அடி உயரத்தில் பாபாவின் மார்பில் சிலை உதட்டில் சிரிப்புடன் ஒரே கல்லில் கண்களில் அருள் பாளிக்குமாறு செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதில் அவர் சொன்னார். சாய் ராம். ஒரு குரூப் சிறப்பி களை வைத்துதான் நாங்கள் சிலைகளை செ‌ய்‌தாலும் அனைத்து சிலைகளிலும் பாபாவின் முகம் ஒன்றாகவே வருவதில்லை. பாபா எந்த இடத்திற்கு செல்கிறார் என்பதை பொருத்து அவர் விருப்பப்படியே அந்த முகம் அமையும், இது தவிர பாபா சிலையை வாங்க வருபவரின் மனதிற்கு ஏற்ற வகையில் பாபாவின் முகம் அமையும் என்றும் அவர் கூறினார். நான் அவரிடம் எனக்கு பாபாவின் முகம் நான் நினைத்தபடியே அமையும் என்று கூறி அவரிடம் பாபா சிலை செய்யும் பணியை ஒப்படைத்து விட்ட மகிழ்ச்சியுடன். மீண்டும் சென்னை திரும்ப பாபா அருள் புரிந்தார். Sai Prakash.

Miracle : 10

செ‌ன்னை வந்தவுடன் நாங்கள் பிரதான மண்டபம் கட்டும் பணியை துவக்குவதற்க்கு முற்பட்டு பணி துவக்கப்பட்டது. நாங்கள் சாதாரணமாக சிறியதாக ஒரு கோவில் கட்ட லாம் என்றுதான் பணி துவக்கப்பட்டது. ஆனால் பாபாவின் விருப்பம் வேறு மாதிரியாக இருந்தது. பின்னர் அவர் உத்தரவு படியே பணிகள் நடைபெற்றது. பிரதான மண்டபம் 110'*40' அடி என்றபடி அமைக்குமாறு வடிவமைக்கப்பட்டது. பாபாவின் ஆசியுடன் தரைத்தளம் (Base ment) வரை பணி முடிவுற்ற நிலையில், ஒருநாள் இரவு, பாபா இவ்வளவு பெரிய வேலையை என்னிடம் ஒப்படைத்து விட்டீர்களே என்னால் முடியுமா? நான் எப்படி முடிக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை. என நினைத்து பாபா விடம் புலம்பினேன். அதற்க்கு அவர் என்னிடம், உனக்கு முன்னர் வாழ்ந்த சந்ததியினர் (தற்போது உயிருடன் இல்லாதவர்கள்) என்ன சொல்கிறார்கள். என்று அறிந்து அதன்படி செய். என்று கூறி விட்டார். எனக்கு ஒரே குழப்பம். இறந்து விட்டவர்களை நான் எங்கே போய் தேடி அவர்களிடம் இருந்து எப்படி கேட்பேன். பாபா ஏன் இப்படி என்னை குழப்புகிறார் என்று எண்ணினேன். இரண்டு நாட்கள் கடந்தன முன்றாம் நாள் கனவில் கோவிலில் கட்டப்பட்ட( Base ment ) மீது ஒரு சிறுவன் கையை பிடித்தபடி நடந்து வருகிறேன். கோவில் கட்டப்படும் இடம் முழுவதும் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை காக்கைகள் இங்கும் அங்கும் மாறி மாறி பறந்து அமர்ந்தபடி இருந்தன. அப்படியே நான் கண் விழித்து விட்டேன். அப்போதே பாபாவிடம் பாபா காகம் சனீஸ்வரனின் வாகனம். இப்போது நீ அனுபவிப்பது பற்றாது இன்னும் நிறைய துன்பம் பாக்கி இருக்கிறது என்று கூறுகிறீர்களா? என கேட்டேன். அதற்கு பாபா என்னிடம் அமாவாசை அன்று யாருக்கு நீ உணவு படைக்கிறாய்? எனக்கு முன் வாழ்ந்து மறைந்தவர் களுக்காக . காக்கைக்கு என்றேன். உடனே பாபா, அவர்கள் அனைவரும் நமக்கெல்லாம் கிடைக்காத கோவில் கட்டும் பாக்கியம் இவனுக்கு கிடைத்து உள்ளது. எப்போது இப்பணியை முடிப்பான் என உனக்காக கோவில் கட்டும் இடத்தில் காத்திருக்கிறார்கள். இப்போது சொல் பணியை முடிக்கிறாயா? என கேட்டார். அப்படியே அசந்து விட்டேன் நான்.. இதற்க்கு மேல் பாபா வை பற்றி என்ன சொல்ல? மேலும் தொடரும். சாய் Prakash.

Miracle : 11

பாபாவின் அழைப்பு. பாபா தத்ரூபமாக வந்து என் நெற்றியில் உதி வைத்த போது. நான் உன்னை எவ்வளவு துன்ப படுத்த முடியுமோ அவ்வளவு துன்பத்தை கொடுப்பேன். அப்போது உன் முகம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை பார்த்து நான் ரசிப்பேன். அது போலவே மீண்டும் உன் கோரிக்கைகளை நிறைவேற்றி அப்போது உன் முகம் சந்தோஷத்தில் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை பார்த்து நான் அதையும் ரசிப்பேன். என்று கூறினார். பின்னர் அதன் படியே எவ்வளவு சோதனைகளை கொடுக்க முடிந்த அளவுக்கு கொடுத்தார். கொடுக்கிறார். இதற்கிடையில் 9 மாதங்களில் பாபா சிலை செய்து முடிந்து விட்டதாகவும். தங்கள் விருப்பபடியே சிலை அமைந்துள்ளது. உடனே வந்து பாருங்கள் என்ற செய்தி ஜெய்பூரில் இருந்து வந்தது. நாம் நம்முடைய பாபா வை பார்க்க வேண்டும் என்று நினைத்து சந்தோசமாக உடனடியாக புறப்பட்டு சென்று பாபாவை பார்த்து கண்களில் நீர் வழிய அப்படியே பாபா காலில் விழுந்து கட்டி பிடித்தது கொண்டேன். பாபாவின் அருளால் பணி முடிந்த மன நிறைவுடன்,திரும்ப முற்பட்ட பொது நமது கோவிலில் துவாரகா மாயியில் பாபா சிலையாக உட்கார போவதாக தெரிவித்தார்.எனவே மீண்டும் துவாரகா மாய் பாபா, தத்தாத்தரேயர், மற்றும் வலம்புரி விநாயகர் ஆகிய சிலைகளையும் செய்யுமாறு சொல்லி விட்டு விரைவில் வந்து பாபாவை அழைத்து செல்கிறேன் என்று கூறி விட்டு சென்னை வந்து சேர்ந்த நேரத்தில். அடுத்து அவர் நடத்த போகும் நாடகத்தை நாங்கள் அறிந்திருக்க வில்லை. அடுத்த miracle தொடரும். Sai Prakash.

Miracle : 12

நாங்கள் சென்னை வந்ததும் நமது கோவிலுக்கு வரவுள்ள பாபாவை பார்த்து வந்த சந்தோஷதில் இருந்த கவலைகள் எல்லாம் மறந்து விட்டது. மறுபடியும் பிரதான மண்டபம் கட்டும் பணி துவக்கப்பட்டது. 500 ஆண்டுகள் அல்லது அதற்க்கு மேலும் இருக்க வேண்டிய கோவில் கட்டிடம் எ‌ன்பதால் கட்டிடம் கட்டும் பணி மிகவும் சிரத்தையுடன் மேற் கொள்ளபட்டது. காற்று அதிகமாக வரும் வகையில் அதற்க்கு ஏற்றார் போல ஜன்னல்கள் அமைக்க பட்டன அந்த மண்டபத்தில் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் மன நிறைவுடன் பாபாவை வணங்கும் வகையில் மண்டபத்தின் உட்பக்கம் தூண்ககள் இ‌ல்லாம‌ல் வடி வமைக்க பட்டது. மேலும் ஷிர்டியில் உள்ளது போல வெளிப்புறம் இருந்து ஜன்னல் வழியாக பாபாவை தரிசனம் செய்வது போலவும் அமைக்கப்பட்டது. இவை யாவும் பாபாவின் அறிவுறுத்தலின்படி யே நடை பெற்றது. இதை எழுதும் போது பாபாவின் வண்டி வாசலில் வந்து நின்று பாட்டிசைகிறது. ஒரு நாள் பாபா என் கனவில் வந்து அடுத்தவாரம் என்னை வந்து அழைத்து வந்து விடு என்று கூறினார். இன்னும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியுள்ளது என்று சொன்னதும்,உனக்குதான் நான் பாபா சிற்பிக்கு நான் விலை பொருள், யாராவது இந்த சிலை நன்றாக உள்ளது மேலும் கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். என்றால், வேறு சிலை செய்து கொள்ளலாம் என நினைத்து விடலாம் அப்படி ஒரு நிலை உருவாகிறது. எனவே அடுத்த வாரமே என்னை வந்து அழைத்து வந்து விடு என கூறினார். உடனே நான் பலபேரிடம் கடனாக பணம் கேட்க முற்பட்ட போது, அடுத்து ஒரு சோதனை வர போகிறது என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. Miracle தொடரும்......... Sai Prakash.

Miracle : 13

குழைந்தை உயிர் காத்த பாபா.
தென் ஷிர்டி சாய் பாபா கோவில் சம்பந்தமான செய்திகளை அனைத்து சாய் பக்தர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து, பாபாவின் ஒப்புதலின் பேரில் கருங்குழி சாய் பாபா டெம்பிள். என வாட்ஸ் ஆப் பில் ஒரு குரூப் ஒன்று துவக்கி அதில் பாபா மற்றும் தெய்வங்கள் தவிர வேறு எந்த செய்தியும் பதிவு செய்ய வேண்டாம் என்ற நிபந்தனையுடன் துவக்கப்பட்டது. இதில் பாபாவின் பக்தர்கள் அனைவரும் இணைக்கப்பட்டனர். பாபாவை ஜெய்பூரில் இருந்து அழைத்து வர ஏற்பாடு செய்த நிலையில், நமது பாபா குரூப்பில் ஒரு தம்பதியினர் இருந்தனர். அவர்களுக்கு திருமணமாகி நீண்ட காலத்திற்கு பிறகு பாபாவின் அருளால் பிறந்த பெண் குழந்தைக்கு தற்போது மூன்று வயது. அந்த குழைந்தைக்கு திடீர்ரென டெங்கு காய்ச்சல் வந்துவிட்டது. அருகில் இருந்த மருத்துவ மனையில் குழைந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவி்த்வித்தவுடன், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ மனையில் உள்ள மருத்துவர்களும் குழந்தை, ஆபத்தான நிலையில் உள்ளதை உறுதி செய்தனர். இரவு 11:00 மணிக்கு பெரிய டாக்டர் வந்தவுடன் குழந்தையை காட்டுமாறு தெரிவி்த்துள்ளனர். அந்த தாய் அழுதபடியே இருந்துள்ளார். அப்போது அவர் தன் நண்பருடன் அவரும் பாபாவிடம் மிகுந்த பக்தியுள்ள பெண்மணி. அவர் அந்த தாயிடம் நீங்கள் சாய் ராமுக்கு போன் செய்து பாருங்கள் அவர் மூலம் எதாவது தீர்வு கிடைக்கலாம். எ‌ன்று எனது போன் நம்பரை கொடுத்த உடன் அந்த தாய் அழுத படியே எனக்கு போன் செய்து முழு தகவலும் கூறினார். நான் அவரிடம் கொஞ்சம் லைனில் இருங்கள் என்று சொல்லிவிட்டு, பாபாவிடம் வேண்டினேன். பாபா என்னிடம் நான் பார்த்து கொள்கிறேன். என்று பதில் அளித்தார். நான் அந்த தாயிடம் தைரியமாக இருங்கள். பாபா பார்த்து கொள்வார். என்று கூறி விட்டேன். அன்று இரவு 11.30 மணியளவில் எனக்கு மறுபடியும் போன் செய்தார்கள். பெரிய டாக்டரும் ஆபத்தான நிலையில் தான் உள்ளது என்று கூறியுள்ளார். என்று சொன்னார்கள். என‌க்கு மிகவு‌ம் சங்கடம் ஆகி விட்டது. நான் இரவெல்லாம் கண்விழித்து, காலை 5.00 மணிக்கு குளித்து முடித்து, பூஜை அறைக்கு சென்று பாபா நீங்கள்தான் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினீர்கள். அடுத்த வாரம் கத்திரிசேரி வர இருக்கும் நிலயில் இதுவரை நான் உங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்க வில்லை. இதுவே என் முதல் கோரிக்கை அடுத்த வாரம் தாங்கள் இங்கு வந்ததும் விஜயதசமி அன்று முதல் பூஜை நடைபெற உள்ளது. நீங்கள் என்ன செய்வீர்கள் என்று எனக்கு தெரியாது. அன்று அந்த குழந்தை தன் தாயுடன் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். என கேட்டு கொண்டேன். நான்தான் பார்த்து ​ கொள்கிறேன். என்றேன் அல்லவா? என்று பதில் பாபாவிடம் இருந்து கிடைத்து. காலை 7,00 மணிக்கு அந்த தாய்க்கு போன் செய்து நீங்கள் எக்காரணம் கொண்டும் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டாம்.குழந்தை யுடன் அங்கேயே இருங்கள் பாபா பார்த்து கொள்வார். என்று கூறினேன். சரி என்று அழுது கொண்டே இருந்தார்கள். அதன் பிறகு மதியம் 2.30 மணியளவில் அந்த தாயிடம் இருந்து எனக்கு போன் வந்தது அப்போது அந்த தாய், சாய் ராம். என் குழந்தை அபாய கட்டத்தை கடந்து விட்டதாக கூறி விட்டார்கள் என்று தெரிவித்தார். என் சந்தோஷதிற்கு . அளவே இல்லை.. உடனே பூஜை அறை சென்று பாபா விற்கு எனது நன்றியை தெரிவித்தேன் பாபா செய்த அற்புதம் இது................ Miracle தொடரும். Sai Prakash. பாபா தற்போது அநேக பக்தர்கள் மன நிம்மதி இல்லாமல், உடல் நல குறைபாட்டாலும், பொருள் இல்லத்தில் இல்லாததால் திருமணம் முதலிய பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியாமலும், குழந்தைகளின் கல்விக்கான செலவு செய்ய முடியாத நிலையிலும், தங்களையே முழுவதுமாக நம்பிய படி உள்ளார்கள், சாய் ராம் பக்தர்கள் துன்பங்களை உணர்ந்து நல்வழி காட்டுங்கள், என் நெற்றியில் உதி வைத்த என் தெய்வமே சாய் ராம். நல் வழி காட்டுங்கள் எங்கள் பாபா. ஜெய் ஜெய் சாய் ராம். சாய் ராம். நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்ல காரியங்களும், பிறருக்கு செய்கின்ற நற்பலன்களும் மற்றவர்கள் பார்த்து பாராட்ட வில்லை என்றாலும், இறைவனின் டைரியில் தவறாமல் குறித்து வைக்கப்பட்டு அதற்கான நல்ல பலன்கள் உரிய நேரத்தில் பல மடங்காக நமக்கு திரும்ப வழங்கபடுகிறது. அது போலவே தீயவற்றை செய்தாலும், பிறருக்கு தீங்கு செய்தாலும் பிறகு அதற்கான தண்டனைகளும் தவறாமல் பல மடங்காக நமக்கு திரும்ப வழங்க படுகிறது. நாம் அனைவரும் நல்லதே செய்து நன்மையே அடையலாம். ஜெய் ஜெய் சாய் ராம். சாய் ராம். நம்மிடம் கடவுள் ஒருவரே நீங்கள் எந்த ரூபத்தில் வழி பட்டாலும் இறைவன் ஒருவரிடமே சேரும் என கூறியுள்ளார். இந்த உலகம் யாரோ ஒருவரால் படைக்கப்பட்டது. அந்த ஒருவரை தான் நாம் கடவுளாக வழி படுவது நமது வழக்கமாக உள்ளது. இதை நாம் இயற்கை சார்ந்த முறையில். படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும், ஒவ்வொரு தெய்வம் ஆக வழி படுவதை நம் முன் வாழ்ந்தவர்கள் மூலமாகவும் அறிந்து கொள்ள முடிந்தது. உதாரணமாக. மழையை வருண பகவான் எனவும் செல்வத்தை மகாலட்சுமி யாகவும், காற்றை வாயு பகவான் என்றும் சூரிய பகவான் உள்ளிட்ட அனைத்து கோல் களையும் தெய்வங்கள் ஆகவும், கல்விக்கு சரஸ்வதியாகவும், பூமியை பூமி தாயாகவும், கடல் சார்ந்தவை களை, கடல் அன்னையாக வும், உணவை அன்னலட்சுமியாக, ஒவ்வொரு இலட்சுமி யை யும் அஷ்ட லட்சுமி யாகவும், இயற்கை சார்ந்து படைக்கப்பட்ட அனைத்தையும் தெய்வங்கள் ஆக வணங்கி வருவதால், இவ்வாறு வணங்குவது இயற்கையுடன் இனைந்து படைக்கப்பட்டவை களை. வணங்கு வதன். மூலம் இந்த உலகம் முழுவதையும் படைக்க காரணமாக இருந்த அந்த கடவுளுக்கு நமது நன்றியை செலுத்த முடிவதால் நமக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. இவ்வாறு படைக்க பட்டது எதுவுமே இல்லை என்று யாராவது ஒப்புக் கொள்ள முடியுமா? இவை அனைத்துமே ஒருங்கிணைய பெற்றவரை தான் பாபா மூலமாக நாம். காணமுடிகிறது. ஜெய் ஜெய் சாய் ராம். . Sai Prakash.

Miracle : 14

சாய் ராம். பாபாவை ஜெய்ப்பூரில் இருந்து அழைத்து வர இங்கிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது, அங்கு சென்றதும் முதலில் ரூமுக்கு சென்று பைகளை வைத்து விட்டு சாப்பிட்ட பிறகு பாபாவை சென்று பார்க்கலாம் என்று நினைத்தபடி சென்ற போது ஜெய்ப்பூர் விமான நிலையம் செல்லும் போது இரவு 8.00 மணி ஆகிவிட்டது. சிற்பியிடம் இருந்து கார் வந்திருந்தது. நாங்கள் காரில் ஏறியதும் கார் நேராக பாபா இருக்கும் இடத்திற்கு வந்து விட்டது. நாங்கள் ஏற்கனவே பாபாவை ஷிர்டி அழைத்து சென்று பூஜை எல்லாம் செய்து விட்டு, கத்திரிச்சேரி கோவிலுக்கு அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்து இருந்ததால். பாபாவை பார்த்தவுடன் நமது பாபா தானா என்று சரிபார்த்தவுடன். உடனடியாக பாபா, விநாயகர், துவாரகா மாய் பாபா, தத்தாத்தரேயர் ஆகிய நான்கு சிலைகளும் பேக் செய்யப்பட்டு லாரியில் ஏற்றியவுடன் உடனடியாக ஷிர்டி நோக்கி புறப்பட்டார் பாபா. அப்போது இரவு மணி 12:00 ஆகிவிட்டது. எங்களை ரூமுக்கு கூட போக விடாமல் நேராக அவர் இருந்த இடம் அழைத்து வந்து, அவர் இங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டதும். இரவு 12.00 மணிக்கு பிறகு நாங்கள் உணவு சாப்பிட்டபின். ரூமுக்கு சென்று ஓய்வு எடுக்க முடிந்தது. ஜெய் ஜெய் சாய் ராம். Miracle...... தொடரும். Sai Prakash.

Miracle : 15

பாபாவின் அருளால் அவரது விருப்பபடி பாபா ஜெய்பூரில் இருந்து ஷீரடி புறப்பட்டதும்.இரவு 12:00 மணியளவில் உணவருந்தி உறக்கம் கொள்ள புறப்பட்டு சென்றதில் பாபா இங்கிருந்து நமது கோவிலை நோக்கி புறப்பட்டுவிட்டார். என்ற சந்தோஷத்தில் எனக்கு உறக்கமே வரவில்லை. அடுத்த நாள் காலையில் நாங்கள் ஷீரடி புறப்பட்டு மதியம் ஷீரடி சென்று சேர்ந்து, பாபா எப்போது வருவார் என்று எண்ணிய படியே காத்திருந்த வேளையில் அ‌ன்று மாலையே 5.30 ம‌ணியள‌வி‌ல் பாபா ஷீர்டி கோவில் வாசலில் வந்து நின்றார். அங்கிருந்த குருக்கள் மாலை 6.00 மணிக்கு மாலை ஆரத்தி உள்ளதால் 5.00 மணிக்கு மேல் பூஜை எதுவும் செய்வதில்லை. என்று கூறினார். நான் எதுவும் பேசவில்லை. ஆனால் என் மனதுக்குள் பாபா வுக்கேவா ? என்று நினைத்தேன். அடுத்த நிமிடம் அந்த குருக்கள் பூஜைக்காக உள்ள பொருட்களுடன் வேகமாக வந்து பாபாவுக்கான பூஜையை செய்து முடித்தார். அனைவரும் பாபாவை வாங்கியவுடன். ஷீரடி பாபாவுக்கான மாலை 6.00 மணி ஆரத்தி துவங்கியது. பிறகு பூஜை செய்து முடித்தவுடன் இரவு 7.30 மணியளவில் சென்னைக்கு அருகே உள்ள மதுராந்தகம் அருகில் கருங்குழி ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள கத்திரிசேரியில் உள்ள கோவிலுக்கு புறப்பட்டார் நமது பாபா. Miracle.... தொடரும். Sai Prakash.

Miracle : 16

பாபா கத்திரிச்சேரி வந்து சேரும் போது நடந்த அற்புதம். பாபா ஷீரடியில் இருந்து கத்திரிச்சேரி கோவிலுக்கு இரவு 7.30 மணியளவில் புறப்பட்டவுடன், அடுத்த நாள் இரவு சென்னை வருவதற்காக புனேயில் விமான டிக்கட் பதிவு செய்திருந்ததால் நாங்கள் நினைத்தபடி அதற்கும் அடுத்த நாள் காலை, 10.00 அல்லது 1!.00 மணியளவில் பாபா வந்து விடுவார். நாம் இரவே சென்னை சென்று அதி காலை கோவிலுக்கு சென்று பாபாவை வரவேற்க தயார் ஆகலாம் என நினைத்து எங்களை நாங்கள் தயார் படுத்தி கொண்டதால் அதன்படி விமான டிக்கட் பதிவு செய்யப்பட்டது. ஷீரடியில் மதியம் உணவு முடிந்து, காரில் புனே புறப்பட்டு சோர்வாக இருந்ததால் சற்று கண் அயர்ந்து தூங்கிய நேரத்தில் மாலை 4.00 மணியளவில் போன் வந்தது. அதில் பாபா கத்திரிச்சேரி கோவிலுக்கு வந்து விட்டார் என்ற செய்தியும் வந்தது . அனைவருக்கும், தூக்கி வாரி போட்டது. நம்பவே முடியவில்லை. அடுத்த நாள் காலையில் 10.00 மணிக்குமேல் எதிர் பார்க்கப்பட்ட பாபா இன்று மாலையே எங்களுக்கு முன் கோவிலுக்கு வந்து விட்டார். பாபா, என்னிடம் நீ வந்து என்னை வரவேற்க போகிறாயா? உனக்கு முன் உன்னை வரவேற்க நான் இங்கு வந்து விட்டேன். என்று சொல்வது போலிருந்தது. எங்களுக்கு ஒரே பட படப்பாக இருந்தது. இரவு சென்னை வந்ததும். அடுத்த நாள் காலையில் அவசர அவசரமாக கோவிலுக்கு ஓடி வந்தேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால். பாபாவை ஏற்றிவந்த வண்டியை ஒரு டிரைவர் மட்டுமே ஓட்டி வந்தார் அவருடன் யாருமே வரவில்லை. இரவு பகல் பாராமல் தொடர்ந்து வந்துள்ளார். 3000 கிலோ மீட்டர் எந்த ஒரு தடயங்களும் இல்லாமல் நல்லவிதமாக பாபாவை கோவிலில் கொண்டு வந்து சேர்த்தார். பாபா அவருக்கு துணையாக இருந்து அழைத்து வந்துள்ளார். ஜெய் ஜெய் சாய் ராம். Miracle...... தொடரும். Sai Prakash.

ஷீரடி வாழும் சீர் மிகு பாபா.
இந்த உலகம் முழவதும் உன் கையில்.
உன் காலடி மட்டும் என் பிடியில்.
அவசர கோலம் இல்லமால் அடி வைக்க அருளும் அன்னை நீ பாபா.
எங்கள் துன்பம் எல்லாம் நீக்கிடும் பாபா.
துயரம் எல்லாம் போக்கிடும் பாபா.
அன்பை அள்ளி தந்திடும் பாபா.
அனைவரும் விரும்பும் அற்புத பாபா.
நீரில் தீபம் ஏற்றிய பாபா.
நிம்மதி நல்கும் நின்முகம் பாபா.
நினைத்ததும் உடனே எதிர் வரும் பாபா.
நின் பாதகமலங்கள் பணிந்த நிலையில் தங்கள் பத மலர் சேர்ந்திட நின் அருள் தந்திட வேண்டும் பாபா.

Miracle : 17

குழந்தை உயிர்காத்து அழைத்து வந்த பாபா.
பாபா கத்திரிச்சேரி பாபா கோவில் வந்து சேர்ந்ததும் எங்களுக்கு பெரிய சாதனை புரிந்தது போல அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு கிரேன் வரவழைத்து பாபாவை பத்திரமாக அவர் துவாரகாமாயி யில் தற்காலிகமாக அவர் இருக்க வேண்டிய இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டார். பின்னர் துவாரகாமாயி பாபா, தத்தாத்தரேயர் மற்றும் வலம்புரி விநாயகர் அனைவரையும் தற்காலிகமாக அவரவர்களுக்கு ஆன இடத்தில் அமர வைத்து விட்டபின். அடுத்த இரண்டு தினங்களில் விஜயதசமி வந்ததால், பாபாவுக்கு முதல் பூஜை செய்வதற்க்கான பணிகளைச் செய்ய துவக்கப்பட்டது. 1000 பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மிக விமரிசையாக பணி துவக்க பட்டது. அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. என்னவென்றால். டெங்கு காய்ச்சலால். பாதிக்கப்பட்ட குழந்தை குணமடைந்து தன் தாயுடன் கோவிலுக்கு வந்து விட்டது. பாபா குழந்தையின் உயிரை காத்து எனது முதல் கோரிக்கையின்படி, அந்த குழந்தையை அதன் தாயுடன் விஜயதசமி அன்று கோவிலுக்கு வரவழைத்து விட்டார். இதுவே பாபா கோவிலுக்கு வந்தவுடன் செய்த முதல் அற்புதம். தென் ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள் (Miracles)........ தொடரும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash.

Miracle : 18

கோவில் பணி செய்தவரை பாம்பு கடித்தது. கருங்குழி அருகே உள்ள கத்திரி சேரி சாய் பாபா கோவிலில் முதன் முதலில் பாபா வந்தவுடன் விஜயதசமியன்று மிக விமரிசையாக பூஜை நடந்தபோது, பாபாவினால் உயிர் காக்கப்பட்ட குழந்தையின் தாயாருடன் வந்திருந்ததை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த தாய். தன்னால் முடிந்த அளவுக்கு பிரசாத்தை செய்து பாபாவுக்கு படைத்ததுடன் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அங்கு வந்தவர்களுக்கு வழங்கினார். கோவிலின் பிரதான மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அங்கு பணி புரியும் பணியாளர்கள். காலையில் எழுந்தவுடன் பணி துவக்குவதற்கு முன்பாக பாபாவை, வணங்கிய பின் தான் பணியைத் துவங்குவார்கள். அது போலவே மாலையில், பணி முடிந்தவுடன் மீண்டும் பாபாவை வணங்கிய பிறகு தான் ஓய்வு பெற செல்வார்கள். இது தொடர்ந்து நட‌ந்து வந்தது. அங்கு பணி புரியும் பணியாளர்கள் யாரேனும் சொந்த ஊர் செல்ல வேண்டும் என்று என்னிடம் கேட்டால் உடனே சரியென்று சொல்லி விடுவேன். அது போலவே அன்று ஒருவர் என்னிடம் ஊருக்கு போகவேண்டும் என கேட்டபோது அடுத்த வாரம் போகலாம் என சொல்லிவிட்டேன். அவரும் சரி என இருந்து விட்டார். அவர் ஊருக்கு புறப்படுவதற்கு ​ முதல் நாள், மாலை பணி முடிந்ததும் 7.00 மணியளவில் பாபாவை வணங்க சென்ற போது துவாரகாமாயி வாசலில் அவரை பாம்பு கடித்து விட்டது. தென் ஷிர்டி சாய் பாபா Miracle..... தொடரும். Sai Prakash.

Miracle : 19

பாம்பு கடிபட்டவரின் உயிர் காத்த பாபா.
பாம்பு கடித்தவுடன் அங்கிருந்த மற்ற பணியாளர்கள் காலில் ஒரு கட்டு போட்டு உடனடியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு அவருக்கு உடனடியாக ஊசி போடப்பட்டது. I ரத்தம் எடுக்கப்பட்டு லேப் பரிசீலனை செய்ய அனுப்பப்பட்டது. அதன் பிறகு தான் எனக்கு தகவல் தெரிவித்தனர். நான் சென்னையில் இருப்பதால் இங்கிருந்து செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகும். எனவே நான் மதுராந்தகத்தில் உள்ள ஒரு ஒப்பந்ததாரர் ஒருவருக்கு போன் செய்து மருத்துவமனைக்கு சென்று பார்த்து உடனே எனக்கு தகவல் தெரிவிக்க சொன்னேன். இது தவிர கத்திரிச்சேரி பஞ்சாயத்து தலைவருக்கும் போன் செய்து அவரையும் மருத்துவமனை சென்று பார்த்து விபரம் தெரிவிக்க சொன்னேன். இதனிடையில் நமது வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கு போன் செய்தேன். அவர் டூட்டியில் இல்லாததால், அவர் நண்பருக்கு போன் செய்து அவரிடம் நீங்கள் அந்த மருத்துவரை தொடர்பு கொண்டு ஹாஸ்பிட்டலில் நிலை என்ன என்பதை அறிந்து என்னை தொடர்பு கொள்ள தெரிவித்தேன். அடுத்த பத்து நிமிடங்களில் மருத்துவர் என் லைனில் வந்தவர் கவலை படும் படியாக எதுவும் இல்லை. என்று சொன்னார். அடுத்து அவர் சொன்னது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் நடந்தது என்ன வென்றால் பாம்பு கடித்து விட்டதை பார்த்தால் ஒன்று நல்ல பாம்பு அல்லது விரியன் பாம்பு கடித்திiருக்கும்.இரண்டும் மிகவும் விஷம் உள்ள பாம்புகள் கடித்த இடத்தில் ரத்தம் வந்துள்ளது. ஆனால் ரத்தம் ஆய்வு செய்ததில் ரதத்தில் விஷம் கலக்கவில்லை. . பாம்பு கடித்த இடத்தில் ரத்தம் வெளியில் வந்த நிலையில் ரதத்தில் விஷம் கலக்காமல் இருப்பது ஆச்சரிய மாக உள்ளது என தெரிவித்துள்ளனர். உடம்பில் ரதத்தில் விஷம் கலக்காமல் செய்து விட்டார் பாபா. இது தான் உண்மை. அந்த குறிபிட்ட நபர் அவர் நினைத்த நாளில் ஊருக்கு சென்று இருந்தால், அவருக்கு பெரிய ஆபத்து இருந்து இருக்கிறது. அதில் இருந்து அவரை காக்கவே பாபா ஒருவாரம் இங்கேயே தங்க வைத்து, அவரது கண்டத்தில் இருந்து அவரை காக்க பாம்பு கடிக்க வைத்து அதில் விஷம் ஏறாமல் தடுத்து அவரை காத்து இருக்கிறார். இது பாபா செய்த மற்றொரு அற்புதம். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்தேன். தென் ஷீரடி சாய்பாபா Miracle......தொடரும். Sai Prakash.

Miracle : 20

பாபா அருளிய தீர்க்க சுமங்கலி பவ. பாபாவை பிரதான மண்டபத்தில் அமர வைத்து பூஜை செய்யும் அளவுக்கு பணிகள் நிறைவு பெறாத நிலையில் அவ்வப்போது பூஜை செய்யும் பணியை நானே மேற்கொண்டேன். எதேனும் ஒரு பாபா கோவிலுக்கு சென்றால் தூரத்தில் இருந்து பாபாவை வணங்கி விட்டு வர வேண்டும். சில இடங்களில் பாபாவின் பாதத்தை தொட்டு வணங்க அனுமதிப்பார்கள். நமது கோவிலுக்கு பாபா வந்தவுடன். பாபாவின் உடல் முழுவதும் தொட்டு அபிசேகம் செய்யவும், அவரு‌க்கு அலங்காரம் செய்து ஆனந்தபடவும் ஆன பெரிய பாக்கியம் கிடைத்துள்ளது. எனக்குள் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். எந்த ஜென்மத்திலாவது, பாபா நடந்து செல்லும் போது, அவர் காலில் தூசியாக, ஒட்டி இருப்போம். அதனால் தான் நமக்கு இந்த பாக்கியம் கிடைத்துள்ளது, என நினைத்துக்கொண்டேன். ஒரு நாள் ஒரு குடும்பத்தினர் நமது பாபா கோவிலுக்கு வந்தனர். நல்ல வசதியுடன் உள்ளவர்கள் தான். ஆரத்தி காட்டி அவர்கள் பாபாவை, வழிபட்ட உடன் அவர்களுடன் வந்திருந்தவர், என்னிடம் காலில் விழுந்து ஆசி வாங்க எண்ணி என்னிடம் வந்த போது, நான் அவரிடம், நம் அனைவருக்கும் பெரியவர் பாபா தான். அவரிடம் நாம் அனைவரும் ஆசிர்வாதம் பெறலாம். பாபா வின் முன்னாள் வேறு யார் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் பெற கூடாது. இதை பாபாவும், சொல்லி இருக்கிறார். எனவே பாபாவின் முன்னாள் யார் காலிலும் விழ வேண்டாம் என்று கூறி விட்டேன். பாபாவை வணங்கி வெளியில் வந்ததும் நீங்கள் என்னை விட வயதில் பெரியவர் உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் என்று கோரி என்னிடம் ஆசீர்வாதம் பெற்றார். நல்லா இருங்கள் என்று கூறினேன். உடன் வந்தபெண்களையும் ஆசீர்வாதம் பெற சொன்னார்.இரண்டு, மூன்று பேருக்கு நல்லா இருங்கள் என்று ஆசீர்வாதம் செய்தேன். பின்னர் ஒரு அம்மா வந்து ஆசி பெறும் போது, தீர்க்காயுசாக, தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என ஆசீர்வாதம் வழங்க பட்டது. உடனே மற்ற பெண்கள் நகைத்து விட்டார்கள். மீதம் இருந்த இரண்டு பெண்கள் ஆசீர்வாதம்பெறவில்லை. நானும் இதை பாராத வாறு, இருந்து விட்டேன். எனென்றால் அந்த அம்மா கணவனை இழந்தவர். அவர்கள் சென்றவுடன், நான் பாபாவிடம், பாபா என்றைக்கு முதன் முதலில் தங்கள் காலில் விழுந்து இனி என் உயிர் உங்களுடையது என ஒப்படைத்துவிட்டபின். என்னிடம் இருந்துவரும்ஒவ்வொரு வார்த்தையும் தாங்கள் கூறும் வார்த்தைகளே. எனவே கணவனை இழந்த நிலையில் அந்தஅம்மையாருக்கு தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்று ஆசீர்வாதம் வழங்கியது ஏன்? என கேட்டேன். அதற்கு பாபா என்னிடம் வழங்கிய விளக்கம் என்னை அதிர்ச்சியும், ஆச்சரியமும் கொள்ள வைத்தது. நீங்கள் எல்லோரும் உடம்பு சம்பந்தபட்டதுதான், வாழ்க்கை முறை என நினைக்கிறீர்கள் அது தவறு. ஒரு ஆத்மாவுடன் மற்றொரு ஆத்மா இரண்டற கலந்து ஆத்மார்த்தமாக வாழ்வது தான் வாழ்க்கை அப்படி பட்ட வாழ்க்கை பல நூறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வாழ்ந்த கோடியில் ஒரு ஜோடிக்கு இருந்தது. அப்படிபட்ட ஒரு பெண்மணி தான் இந்த அம்மா. தன் கணவன் இறந்து விட்டாலும் அவருடைய ஆத்மா வுடன் இன்றும் அவர் வாழ்ந்து வருகின்றதாலும், அவர் கணவரின் ஆத்மாவும் இன்னும் இவரை விட்டு பிரியவில்லை. எனவே தான் அந்த ஆசீர்வாதம்அவருக்கு கிடைத்தது என கூ‌றினா‌ர். இதை நீ அனைவருக்கும் விளக்க வேண்டியது இல்லை. வழங்கப்பட்டஆசீர்வாதம் சரியானதே. தொடர்ந்து நீ உன் பணியை செய். என என்னை ஆசீர் வதித்தார். Miracle..... தொடரும். Sai Prakash.

Miracle : 21

ஆபத்து நீக்கிய பாபா. ஒரு முறை எனது வீட்டில் என் மனைவி முறுக்கு செய்வ தற்காக. கிட்ட தட்ட ஒன்றரை அல்லது இரண்டு லி‌ட்ட‌ர் எண்ணெய் யை கடாயில் விட்டு, முறுக்கு சுட்டு கொண்டு இருந்தார். அப்போது கொஞ்சம் தண்ணீர்கொதிக்கம் எண்ணையில் விழுந்து விட்டது. உடனே பாத்திரத்தில் இருந்த எண்ணைய் வெடித்து நாலா பக்கமும் சிதரி அடுப்படியில் இருந்த சுவற்றில் மேல் பகுதி வரை சிதறியதுடன், தீ பிடித்து ஏறிய ​ துவங்கியது. சட்டியில் இருந்த எண்ணைய் முழுவதும் காலியாகி விட்டது. இந்நிலையில் அடுப்புக்கும், எண்ணைய் பாத்திர திற்கும் அருகில் நின்று இருந்த என் மனைவியின் மேல் ஒரு ட்ராப் எண்ணைய் விழவி‌ல்லை. வேறு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. இது போல அற்புதத்தை பாபாவை தவிர யாராலும் நிகழ்த்த முடியாது. பாபாவின், Miracle...... தொடரும். Sai Prakash.

Miracle : 22

கண் பார்வை கொடுத்த கண்கண்ட தெய்வம் பாபா.
பாபாவின் அற்புதத்தை அறியாதவர்கள், அதை உணராத வர்கள். ஒரு பாபா பக்தர் கூட இருக்க முடியாது. ஒரு நாள் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தன் இரண்டு மகள் களுடன் வந்திருந்தார். அதில் ஒரு மகளுக்கு உடல் நலமின்மையால், மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். அன்று நாங்கள் மைலாப்பூர் பாபா கோவிலுக்கு புறப்பட்டு கொண்டு இருந்ததால், அந்த தாய் அவரது இன்னொரு மகளையும், கோவிலுக்கு வருகிறீர்களா? என்று கேட்டவுடன், அவர்களும் சரி என்றார்கள். எனவே அவர்களையும் பாபா கோவிலுக்கு அழைத்து சென்ற போது, நீங்கள் பாபாiவை வணங்குவீர்களா? என்று கேட்டபோது, இ‌ல்லை எ‌ன்று சொன்னார்கள். அப்படியானால் இன்று பாபாவிடம் ஏதாவது வேண்டி கொள்ளுங்கள். அது நிறைவேறியதும், கோவிலுக்கு வருவதாக வேண்டி கொள்ளுங்கள். என்று கூறினேன். பி‌றகு கோவிலுக்கு சென்று பாபாவை வழிபட்டு திரும்பி னேன். அவர்கள் என்ன வேண்டி கொண்டார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. பிறகு ஒரு வாரத்தில் போன் செய்து அந்த அம்மாவின் ம‌க‌ள் அழ ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவர், என் கணவருக்கு இருபது ஆண்டுகளாக ஒரு கண் தெரியாது. அன்று நான் என் கணவருக்கு கண் பார்வை வரவேண்டும் என்று பாபாவிடம், வேண்டி க்கொண்டேன். அடுத்த இரண்டு நாட்களில் பார்வை இல்லாத கண்ணில் தாங்க முடியாத வலியில் துடித்தார். உடனே கண் மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற போது, உடனடியாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அத‌ன் படி செய்யப் படும் போது. நான் வெளியில் இருந்தபடி சாய் ராம். சாய் ராம் என சொல்லி கொண்டே இருந்தேன். ஆப்பரேஷன் முடிந்ததும். கண் கட்டு பிரித்தவுடன். வலி சரியாகி விட்டது. மெஷின் வைத்து பார்த்தார்கள். கண் பார்வை வராது என்று கூறிவிட்டார்கள். அனால்,கண் நன்றாக தெரிவதாக என் கணவர் கூறினார். மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்ததும், ஒரு கண்ணை மூடிக் கொண்டு தெரியாமல் இருந்த கண்ணின் மூலமாக அங்கு வந்த வாகனத்தை பார்த்து அதில் எழுதி இருந்ததை படித்தார். உடனே நான் பாபா என அங்கேயே அழுது விட்டேன். என்னால் இனி பாபாவை மறக்கவே முடியாது என்று கூறி அன்று முதல் பாபாவின் பரம பக்தை ஆகிவிட்டார். அவர் குடும்பத்தினரும் பாபாவின் பக்தர்கள் ஆகி விட்டார்கள். பாபாவின், Miracle.....தொடரும். Sai Prakash. என்னை பெற்ற தாயே நீயே என் முதல் தெய்வம். இந்த உலகை எனக்கு காட்டியது நீ தான். அதன் பிறகு தான் நான் மற்ற தெய்வங்களை அறிவேன். இன்று என்னருகில் நீ இல்லாவிட்டாலும் என் உயிர் உள்ளவரை எனக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என் தாயே. அன்னையர் தினமான இன்று தங்கள் பாதம் பணிகிறேன் என்னை வாழ்த்துங்கள் என் அன்னையே.

Miracle : 23

நாம் நினைப்பது ஒன்று, பாபா நினைப்பது ஒன்று. நாம் அனைவருமே நமது துன்பங்களை அனுபவித்து அதிலிருந்து நம்மை, காக்குமாறு பாபாவிடம் நம் கோரிக்கைகளை வைத்து அதற்கு தீர்வு தேட முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் யாரும் விதி விலக்கு அல்ல. ஆனால் நம்மில் எத்துனைபேர். நம் கோரிக்கை நிறைவேறியதும், பாபாவுக்கு நன்றி சொல்கிறார்கள்? சென்னையை சேர்ந்த ஒரு குடும்பம் பணி நிமித்தம் காரணமாக வட இந்தியாவின் ஒரு பகுதியில் குடியேறி உள்ளனர். அவர்கள் யாரோ ஒருவர் மூலமாக என்னை தொடர்பு கொண்டார்கள்.பாபாவிடம் மிகவும் பக்தி உள்ளவர்கள். அந்த அம்மையாரின், கணவர் கொஞ்சம் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளவர். மிக நல்ல மனிதர், நல்ல நண்பர். அவரை நான் நேரில் பார்த்திரா விட்டாலும், அவர் ஒவ்வொரு நாளும் எனக்கு போன் செய்து என்னிடம் பேசாமல் இருக்க மாட்டார். அப்போது அவர் என்னிடம் கூறுவார். நான் தங்களுடன் பேசினால், எனக்கு ஒரு மன நிறைவும் சந்தோஷமும், ஏற்படுகிறது, என்று கூறியுள்ளார். எனவே அவர் தினசரி செய்யும் போன் நான் எடுக்காமல் இருப்பதில்லை. ஒரு நாள் அவரும் அவர் மனைவியும் நமது கத்திரிச்சேரி பாபா கோவிலுக்கு வந்து பாபாவை வழபட்டார்கள். அப்போது அவர், சாய் ராம் என் உடல் நிலை சரியாகி விட்டால் உங்களை ஒரு வேலையும் செய்ய விடமாட்டேன். அனைத்து வேலைகளையும், பார்த்து கொள்வேன். என்று கூறினார். அந்த அன்பு நண்பர். மீண்டும் அவர்கள் வட இந்தியா சென்று விட்டார்கள். அதன் பிறகும் அவர் தினமும் போன் செய்து கொண்டு இருந்தார். எங்கள் நட்பு தொடர்ந்தது. சில மாதங்கள் கழித்து ஒரு நாள் அவர் மனைவியிடம் இருந்து போன் வந்தது. அவர் உடல்நிலை சரியில்லாமல் துன்ப படுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் பாபாவிடம் உ‌த்தரவு கேட்டு எனக்கு சொல்லுங்கள் என்று சொன்னார். இரண்டு நாட்கள் எனக்கு பாபாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மீண்டும் அவர் பாபாவின் உத்தரவு என்ன என்று கேட்டார். அப்போது அவர் துன்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும் நேரம் வந்து விட்டது. மருத்துவமனையில் அனுமதித்து விடலாம் என்று கூறி விட்டேன். சரி என்று கூறி அவரும் அனுமதித்து விட்டார்.இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் நான் அந்த அம்மையாருக்கு போன் செய்து இப்போது எப்படி இருக்கிறார். என கேட்டேன். அதற்கு அவர் இன்று காலை 5.00 ம‌ணி‌க்கு எல்லாம் முடிந்து விட்டது என்று கூறினார். எனக்கு உடன் பிறந்த ஒருவரை பிரிந்த அளவு சோகம் ஏற்பட்டது. பிறகு மீண்டும் பாபா சொன்னதை, திரும்பவும் பார்த்த போதுதான் அவர் என்ன சொன்னார், என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. பாபாவின். Miracle..... தொடரும். Sai Prakash.

Miracle : 24

பாபா தன் பக்தர்களின் மீது எடுத்து கொள்ளும் தனிபட்ட அக்கறை. பாபா தன் பக்தர்கள் அனைவர் மீதும் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். எப்பொழுதும் பக்தர்களை. கண்காணித்த படியு‌ம். அவர்களின் அனைத்து செயல்களையும் அறிந்தவர் ஆகவும்,இருக்கின் றார். நான் எழுதுகின்ற பாபாவின் அனைத்து அதிசயங்களிலும், அதில் சம்பந்த பட்ட வரிகளின், பெயர்களை பதிவு செய்வது இல்லை. ஆனால். இதை தொடர்ந்து படிக்கும் போது இந்த அதிசயம் தம்மை பற்றியது தான் என்பதை சம்பந்தபட்ட அவர்கள் உணர்வார்கள். பாபா சில நேரங்களில் நம் குரூப்பில் உள்ள யாராவது ஒருவருக்கு போன் செய்து அவர்களிடம் பேசுமாறு சொல்லுவார். அவ்வாறு நான் பேசும்போது, அவர்கள் வீட்டில் ஏதாவது பிரச்சினை இருக்கும். என்னிடம் அவர்கள் பேசும்போது அதில் அவர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்கும். இவ்வாறு சிலருக்கு பாபா செய்வதுண்டு. சிலருக்கு உடல்நலம் இல்லாமல் இருக்கும் போது. இவ்வாறு நடக்கும். இரண்டு தினங்களுக்கு முன்பு கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது. பாபாவின் தீவிர பக்தர் ஒருவர் பல ஆண்டுகளாக பாபாவுக்கு சேவை செய்து வருபவர். உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தால் கூட பாபாவின் உதி யை மருந்தாக பயன்படுத்துபவர். இரண்டு தினங்களுக்கு முன்பு பாபா என்னிடம் அவர் மன கஷ்டத்தில் உள்ளார். அவருக்கு போன் செய்து ஆறுதலாக பேசு என்றார். நான் இரண்டு முறை போன் செய்தேன். அவர் போன் எடுக்கவில்லை. அவர் அடுத்த நாள் போன் மூல‌ம் என்னை தொடர்பு கொண்டார். அவரிடம் பாபா என்னிடம் இது போல கூறினார். என்றதும். மிகவும் (Miracle) அதிசயமாக உள்ளது. உண்மையாகவே நான் மிகவும் மன கஷ்டத்தில் இருந்தேன். பாபா என் மீது இவ்வளவு அக்கறை எடுத்து கொள்கிறா‌ரா? என்னால் இதை நம்ப முடியவில்லை. என கண் கலங்கினார். பாபாவின்....... Miracle... தொடரும். Sai Prakash.

Miracle : 25

பாபா நடத்திய நம்ப முடியாத அதிசயம். ஒரு நாள் எனக்கு ஒரு செய்தி கிடைத்தது . அதில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் கண்ணன் பாபா என்பவர். உலகில் உள்ள அனைத்து பாபா ஆலயங்களிலும் உள்ள பாபாவின் பக்தர்களை வரவழைத்து 2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு தினங்கள் மாநாடு நடத்த உள்ளதற்கான செய்தி தான் அது. இந்த செய்தியை நான் பார்த்தவுடன். பாபா என்னிடம், நீ புறப்பட்டு சென்று இந்த மாநாட்டில் கலந்து கொள். என்று கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. இருந்தாலும், பாபாவின் உத்தரவு ஆயிற்றே, எனவே என் மகன் ராஜேஷிடம்,பாபா கூறியதை தெரிவி்த்து, அவருக்கும் எனக்கும் சேர்த்து, கோலாலம்பூர், செல்ல விசா மற்றும் விமான டிக்கட் 19.12.2015 அன்று எடுக்க சொல்லி அவை எடுக்கப்பட்டது. இங்கு தான், பாபாவின் அற்புதம் நடத்தப்பட்டது. என் மகன் ராஜேஷின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறப்பதற்கான தேதி, 2015 டிசம்பர் மாதம் 22 என குறிப்பிட பட்டிருந்தது. அப்போது நாங்கள் இருவருமே இங்கு இருந்தாக வேண்டும். இந்த நிலையில் நாம் எவ்வாறு போவது என என் மகன் கேட்டார். பாபா தான் நம்மை போக சொல்லி இருக்கிறார். எனவே எல்லாம் அவர் பார்த்து கொள்வார்.என கூறினேன். அப்போது பாபா இந்த அற்புதத்தை நிக‌ழ்த்தினார். அதாவது டிசம்பர் 22 ம் தேதி பிறக்க வேண்டிய குழந்தை டிசம்பர் 11 ம் தேதி வியாழக்கிழமை மதியம் ஆரத்தி நேரத்தில் 12.15 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது பாபாவின் அற்புதம் அல்லவா?அதன் பிறகு, நாங்கள் குறிப்பட்ட நாளான 19.12.2015 அன்று நிம்மதியாக பயணத்தை துவக்க முடி‌ந்தது. பாபாவின்.... Miracle.. தொடரும். Sai Prakash.

Miracle : 26

பாபா தன் பக்தர்கள் அனைவர் மீதும் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து அவர் வழங்கும் மகிமை. பாபாவின் உ‌த்தரவு படியே நாங்கள் கோலாலம்பூர் புறப்படுவதற்கு முன்பு ஆன் லைன் மூலம் அங்கு தங்குவதற்கான ஹோட்டல் ரூம் புக் செய்துவிட்டுதான் சென்றோம். 19.12.2015 இரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் மாநாடு நடக்கும் இடம் எதுவென விசாரித்ததில். பாபாவின் அருளால் அந்த இடம் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரிலேயே இருந்தது. காலை எழுந்ததும் மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றதும், அங்கு மூவாயிரம் பேர்வரை இருந்தார்கள். இருக்கையில் அமர்ந்தவர்கள், தவிர நிறைய பேர் நின்றுகொண்டு இருந்தார்கள்.அங்கு இருந்தவர்கள் யாரையும் எங்களுக்கு தெரியாது. அவர்களை கடந்து நாங்கள் கொஞ்சம் முன் சென்று நின்றதும், இரண்டு பேர் வேகமாக எங்களை எதிர்பார்த்து காத்து இருந்தவர்கள் போல எங்கள் அருகில் வந்து நீங்கள் எங்கிருந்து வந்து இருக்கிறீர்கள்? என கேட்டார்கள் நாங்கள் இந்தியாவில், தமிழ் நாட்டில் சென்னையில் இருந்து வந்து இருப்பதை கூறியதும். உடனே சென்று இரண்டு வி. ஐ. பி. Badge கொண்டுவந்து எங்களுக்கு அணிவித்து, முன் வரிசையில் வெளிநாட்டவர்கள், அமர்ந்திருக்கும் இடத்தில் எங்களையும் அமர வைத்தார்கள். V. I. P களுக்கு வழங்கப்பட்ட அத்துனை மரியாதையும் எங்களுக்கும் வழங்கப்பட்டது. இது பாபாவினால், வழங்கப்பட்ட அற்புதம் அல்லவா? Miracle.... தொடரும். Sai Prakash. இறைவனிடம் ஒரு டைரி உள்ளது. அதில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்கின்ற, நல்ல காரியங்கள் அனைத்தும் குறி்த்து வைக்கப்படும். நாம் செய்கின்ற தீமைகளும் அவ்வாறே, குறி்த்து, வைக்கப்படும். நாம் செய்கின்ற நன்மையும், தீமையும் எதுவுமே இறைவனின், பார்வையில் இருந்து தப்பாது. அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளபடும். பாவங்கள், அல்லது புண்ணியங்கள் இவற்றில் எது அதிகம் உள்ளது என்று அறிந்து அதனை அடுத்து அடுத்த ஜன்மகளில் நாம் அனுபவித்தாக , வேண்டும். இ‌தி‌ல் யாருக்கும் விதி விலக்கு இல்லை. எனவே நல்லவைகளை மட்டுமே செய்து நமக்கு பின் வரும் சந்ததியினர், நல்வாழ்வு வாழ வழி வகை செய்ய வேண்டும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash.

Miracle : 27

பாபா செய்த மற்றொரு அற்புதம். 20.12.2015 ல் நடை பெற்ற மாநாடு இனிதே முடிந்தது. அடுத்த நாள் காலை மீண்டும் மாநாடு சென்ற போது, அங்கு சென்னை வாழ் நண்பர்களை சந்திக்க முடிந்தது. குறிப்பாக, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் பிரதம வயலின் வித்வான், திரு மணிபார‌தி அவர்கள், பித்துகுழி முருகதாஸ் அவர்களின் பிரதம சீடர் திரு. அனந்தராமன் அவர்கள், மக்கள் T. V. டைரக்டர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு. ஜனனி பாலு அவர்கள் மேலும் சினிமா நடிகர் திரு. பாண்டு அவர்கள் ஆகிய முக்கிய புள்ளிகளின் அறிமுகம் கிடைத்தது. அங்கு மேடையில் பேசும் பேச்சாளர்களின் பெயர்கள் மேடையில் எழுதபட்டு இருந்தது. அதன் படி அனைவரும் பேசினார்கள். அவர்கள் பேசவேண்டிய விஷயங்களை வெளிநாட்டினர் உட்பட அனைவரும் பேப்பரில் குறி்த்து வைத்து அதை வைத்து பேசி முடி. த்தார்கள். மதியம் 1.30 மணிக்கு, பாபா ஒரு அற்புதம் நிகழ்த்தினார். அப்போது ஒருவர் வேகமாக என்னிடம் வந்து, சாய் ராம் சாப்பாட்டு நேரம் ஆகிவிட்டது, நீங்கள் ஒரு ஐந்து நிமிடங்கள் பேசுங்கள் என்று அழைத்தார். மேடையில் பேசுவதற்கான எந்த முன்னேற்பாடும், நான் செய்திருக்கவில்லைபாபாவை நினைத்தபடி மேடைக்கு வந்து விட்டேன். மூவாயிரம் பேர் கூடி இருந்த அந்த கூட்டத்தில் பேசத் துவங்கினேன். முக்கால் மணி நேரம் என்னை அறியாமல் பேசினேன், நான் பேசினேன் என்பதை விட பாபாவை பற்றி அவரே என்னை பேச வைத்தார். நான் பாபாவை பற்றியும் அவரது அற்புதங்கள் பற்றியும் பேசியதும் பல நேரங்களில் அதிக அளவில் கைதட்டல் இருந்தது. இதை பார்த்து வெளி நாட்டவர் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியமாக இருந்தது. நான் பேசி முடிக்கும் வரை ஒருவரும் அந்த இடத்தை விட்டு அகல வில்லை. பேசி முடிந்து வந்ததும் நிறைய பேர் என்னை சுற்றி நின்று செல்லில் போட்டோ எடுத்து கொண்டார்கள். இதை தொடர்ந்து வெளி நாட்டவரும். என்னுடன் படம் எடுத்து கொண்டார்கள். அவர்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்கள். இப்படிபட்ட அற்புதத்தை பாபா நிகழ்த்தி காட்டினார். இது எனக்கு கிடைத்த மறக்க முடியாத சம்பவம். ஜெய் ஜெய் சாய் ராம். . Sai Prakash.

Miracle : 28

பூர்வஜன்ம பலன் என்பதற்கு அர்த்தம் சொன்ன பாபா.
ஒரு நாள் நான், நீண்ட நாட்களாக எனக்கு இருந்த சந்தேகத்தை பாபாவிடம் கேட்டுவிட்டேன். அதாவது, சென்ற ஜன்மத்தில் செய்த பாவங்களுக்கு இந்த ஜென்மத்தில் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தாங்கள் சொல்வது எந்த விதத்தில் நியாயம். சென்ற ஜென்மத்தில் நான் என்னவாக இருந்தேன் என்பதும், என்ன பாவம் செய்தேன் என்பதும் என‌க்கு தெரியாது. இது தெரியாத போது அதற்கான தண்டனை மட்டும் எதற்கு நான் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கேட்டேன். என்ன பாவத்திற்காண தண்டனை என்று தெரிந்தால் தண்டனை கிடைத்தாலும் மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருக்கலாம். தவறு என்ன வென்றே தெரியாமல் தண்டனை அனுபவிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை என கேட்டேன். பாபா நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்தார். நீ செய்த பாவங்களுக்கான தண்டனை வழங்க வேண்டும் என்றால் நீ சொல்வது போல அவ்வப்போது வழங்கி விடலாம். ஆனால் உனக்கு முன் உள்ள( 21) இருபத்தி ஒரு ஜன்மங்க‌ளி‌ல் வாழ்ந்தவர்கள் செய்த பாவ புண்ணியங்கள் அடிப்படையில் பாவ, புண்ணியங்களில் எது அதிகமாக உள்ளது என்பதை பொருத்து உனக்கான தண்டனையை நீ அனுபவிக்கிறாய். இது போலவே நீங்கள் செய்யும் பாவ புண்ணியங்கள் அடிப்படையில் உங்களுக்கு பின் வரும் சந்ததியினர், அனுபவிக்க வேண்டும் இது நியதி என்று கூறினார். பாபாவின்.. Miracle.....தொடரும். Sai Prakash. பாபா ஒருமுறை, நீ துன்பத்தை அனுபவிக்கும் போது உன் முகம் எவ்வாறெல்லாம் மாறுகிறது என்பதை பார்த்து நான் ரசிப்பேன். அது போலவே மீண்டும் உன் கோரிக்கை களை நிறைவேற்றி, அது நிறைவேறியதும், சந்தோஷதில் உன் முகம் எவ்வாறெல்லாம் மாறுகிறது என்பதை பார்த்து அதையும் நான் ரசிப்பேன் என்று கூறினார். பொதுவாக நாம் துன்ப படுவதை பார்த்து தான் பாபா அதிகம் ரசிப்பார், போல் இருக்கிரது. அவ‌ர் விருப்பத்தின் படிதான் எல்லாம் நடக்கும். நம்மால் தொடர்ந்து வெய்யிலில் நிற்கவும் முடியாது, அது போலவே தொடர்ந்து நிழலில் இருக்கவும் முடியாது. வெய்யிலில் இருந்து நிழலுக்கு வந்தால் தான் நிழலின் அருமை நமக்கு தெரியும். அதுபோல நிழலில் மட்டுமே இருந்தால்தான் வெயிலும் தேவை என்பதை உணர முடியும். இவை அனைத்துமே ​ பாபாவின் செயல். நூல் அவர் கையில் இருக்கிரது, அவர் ஆட்டுவிக்கிற படி ஆடும் பொம்மைகள் தான் நாம். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. பாபாவின் அற்புதத்தை (Miracle) உணராதவர்கள், யாரேனும் ஒரே ஒரு பாபாவின் பக்தர் உள்ளதாக, யாரேனும் ஒரு பக்தர் சொல்ல முடியுமா? தன்னுடைய அற்புதத்தி‌ன் மூலம் தன் பால் அனைத்து பக்தர்களையும் தன்னை நோக்கி இழுத்து தன்னுடன் அனைத்து கொண்டவர் தான் நம் பாபா. ஜெய் ஜெய் சாய் ராம். பாபா ஒருவரை தன் பக்தர் ஆக எற்றுக் கொண்டு விட்டால், அந்த பக்தர் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் பாபா அவர் தேவை அறிந்து அவரை தேடி செல்வார். அது போலவே அந்த பக்தர் அவரது கோரிக்கையை பாபாவிடம் வைத்தாலும் வைக்காவிட்டாலும், அவர் தேவை அறிந்து உரிய நேரத்தில் பல மடங்காக நிறை வேற்றி விடுவார். ஒரு முறை பாபாவிடம் அளவுக்கு அதிகமான சோதனைகளை, எனக்கு தாங்கள் தருவதை என்னால் தாங்க முடியவில்லை. என்று கூறினேன். அதற்கு பாபா என்னிடம். உன்னால் எந்த அளவுக்கு சோதனைகளை, தாங்க முடியும் என்று உனக்கு தெரியாது. அது எனக்கு மட்டுமே தெரியும் அது வரை பொறுமையாக இரு என்று கூ‌றி விட்டார்.அந்த அளவுக்கு நம்மை அறிந்தவர் நம் பாபா. ஜெய் ஜெய் சாய் ராம்.

Miracle : 29

உயிர் காத்த பாபா..... ஒரு நாள் நான் சென்னை அம்பத்தூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தேன். கே. கே. நகர் அருகே வரும்போது அங்கே சரவண பவன் ஒட்டலில் ஏதேனும் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் சரி வேண்டாம், அதற்குள் வீட்டிற்கே சென்று விடலாம் என நினைத்து அங்கிருந்து புறப்பட்டேன். அதன் பிறகு எப்படி அங்கிருந்து வந்தேன் என்பது எனக்கு இன்றுவரை தெரியவில்லை. ஆலந்தூர் அருகே மிலிட்டரி பீரங்கி வண்டி அமைந்துள்ள சாலையில் யாரோ இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மிக வேகமாக வந்து என் வாகனத்தின் பின்புறம் வேகமாக மோதி விட்டார் (இதை எழுதும்போது, பாபாவின் வாகனம் பாடலுடன் வாசலில் வந்துள்ளது) மோதிய வேகத்தில் அப்படியே பிளாட்பாரத்தில் தூக்கி எறியபட்டேன். தலை குப்புற விழுந்ததால்,முகம் கை கால்களில் எல்லாம் அடி பட்டது சாலை பக்கம் விழுந்து இருந்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சி இருக்காது. அந்த சாலையில் எந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது என்பது இன்று வரை எனக்கு தெரியவில்லை. பிறகு வெற்றி தியேட்டர் தாண்டியவுடன் எனக்கு இலேசாக ஞாபகம் வந்தது. நான் ஒரு ஆட்டோவில் அமர்ந்து இருந்தேன் . எனது முன் பக்கம் தலையில் இருந்து கால் வரை ஒரே ரத்தம்மாக இருந்தது.. யாரோ இரண்டு பேர் இரண்டு பக்கமும் இரு சக்கர வாகனதில் வந்தனர். என்னிடம் உங்கள் வீட்டு போன் நம்பர் சொல்லுங்கள் என்று கேட்டனர். என் வீட்டு போன் நம்பர் எனக்கு ஞாபகம் வரவில்லை. என் பையில் ஒரு சிறு டைரி இருந்தது, அதை அவர்களிடம் கொடுத்துவிட்டேன். அதில் வீட்டு விலாசம் மற்றும் போன் நம்பர் எல்லாம் இருந்தது. உடனே ஒருவர் நேராக வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்தவர், போனில் தகவல் தெரி வித்து விட்டு அருகில் ​ இருந்த ஆகாஷ் மருத்துவமனையில் என்னை சேர்த்து விட்டார். அதற்குள் வீட்டில் இருந்து அனைவரும் வந்து விட்டனர். அவர்கள் வந்ததும், இந்த இருவரும் என்னிடம் இருந்த ஐயாயிரம் ரூபாய் பாபா படம் உள்ள தங்க மோதிரம் கடிகாரம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு, சென்று விட்டனர். என‌க்கு நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. அவர்கள் இருவரையும் இதுவரை நான் பார்க்கவில்லை. அவர்கள் பாபாவை தவிர வேறு யாராக இருக்க முடியும். Miracle.... தொடரும். Sai Prakash.

Miracle : 30

என்னை ஆகாஷ் மருத்துவமனையில் சேர்த்தது‌ம், அங்குள்ள மருத்துவர் என்னை பரிசோதித்துவி‌ட்டு தலையில் இருந்து உடல் முழுவதும் ரத்த மாக உள்ளது. எனவே ராமசந்திரா அல்லது அது போன்ற பெரிய மருத்துவ மனையில் சேர்த்தால் தான் காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டார். என் நண்பர் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் இந்து மருத்துவமனையில், பொருப்பாளர் ஆக இருக்கிறார். என் மகன் அவருக்கு போன் செய்ததும், அவர் ஆகாஷ் மருத்துவமனை மருத்துவரிடம் போன் கொடுக்க சொல்லி, டாக்டர் அவர் உடல் எந்த நிலையில் இருந்தாலும் சரி. நான் ஆம்புலன்ஸ் அனுப்புகிறேன் அவரை இந்து மிஷன் மருத்துவமனைக்கு அனுப்பி விடுங்கள், நான் பார்த்து கொள்கிறேன். என்று கூறி உடனடியாக ஆம்புலன்சும் அனுப்பிவிட்டார். இதற்குள் என் மகனின் நண்பர்கள் பலர் வந்து விட்டார்கள். வண்டி புறப்பட்டு தாம்பரம் நோக்கி சென்ற போது இரு சக்கர வாகனத்தில் வந்த யாரோ ஒருவர் ஆம்புலன்சு வருகிறது. வழி விடுங்கள் என்று கூறிக்கொண்டே சென்றவர். சாலையின் மத்தியில் இருந்த மின் கம்பத்தில் வேகமாக மோதி விட்டார். அவருக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இந்து மிஷன் மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ் சென்றதும். அப்போது நெஞ்சை பிடித்த படியே மருத்துவமனைக்கு வந்த ஒருவர் உடனே இறந்து விட்டார்.எனக்கு அவ்வப்போது நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. ஐசியு வில் சேர்த்ததும், அதற்குள் சென்னையில் உள்ள முக்கிய ஸ்பெஷலிஸ்ட்கள் எல்லாம் வரவழைக்க பட்டனர்.இதற்குள் எனக்கு தெரிந்தவர்கள் எல்லாம் கூடி விட்டனர். என்னை ஆய்வு செய்த மருத்துவர்கள்.தொடர்ந்து நினைவு வருவதும் போவதும் ஆக இருந்ததால் தலையில் ஸ்கேன் எடுக்க சொன்னார்கள். எனது வலது கண்ணுக்கு கீழே கன்னத்தில் உள்ள எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அடுத்தநாள் வெள்ளிகிழமை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்று பச்சை கலர் டிரஸ் போட்டு தியேட்டர் உள்ளே செல்ல தயாராக இருந்த நிலையில். என் மனைவியிடம், அந்த நேரத்தில் நினைவு வந்ததால் பாபா உதி இருக்கா? எ‌ன கேட்டேன். அவர் உதி கொண்டு வந்து இருந்ததால் அதை என் நெற்றியில் இட்டதும், மருத்துவர் வந்து, இன்று ஆப்பரேஷன் வேண்டாம் இன்னொரு நாள் வைத்து கொள்ளலாம் என்று கூறி விட்டார். மீண்டும் ரூமுக்கு வர வேண்டியதாகி விட்டது. பாபா உதி வைக்கப்பட்ட உடன் நடக்க இருந்த ஆபரேஷன் கேன்ஸல் ஆகி விட்டது. அடுத்து ஞாயிறு அன்று காலை மருத்துவர் வந்து இன்று மாலை ஐந்தரை மணிக்கு ஆப்பரேஷன் வைத்து கொள்ளலாம் என்று சொன்னார். அப்போது எனக்கு நினைவு இருந்தது. நான் எதுவும் சொல்லவில்லை. அனால் என்னுள், நாம் ஏற்கனவே ஆப்பரேசன் தியேட்டர் வரை போய் திரும்பி விட்டதால் இங்கு ஆபரேஷன் செய்யலாமா ? அல்லது வேறு மருத்துவமனை செல்லலாமா என்று நினைத்தேன். அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. அப்போது திடீரென கதவை திறந்து கொண்டு நான்கு பேர் உள்ளே வந்தனர். வந்தவர்கள், நாங்கள் பாபா கோவிலில் இருந்து வருவதாக கூறி என் நெற்றியில் உதி வைத்து பயப்படவேண்டாம் எல்லாம் நல்ல விதமாக நடக்கும் என்று கூறிவிட்டு உடனே அங்கிருந்து சென்று விட்டனர். நான் எதுவுமே பேசத் தெரியாமல் அப்படியே ஆடாமல் அசையாமல் அசந்து போய் இருந்து விட்டேன். சிறிது நேரத்தில் அங்கு வந்த மருத்துவரிடம் இன்றைக்கு ஆப்பரேஷன் வைத்துகொள்ளலாம் என்று கூறி மாலை ஆறு மணிக்கு மேல் செய்யலாம் என்று கூறிவிட்டேன். பிறகு ஆப்பரேஷன் நல்லபடியாக முடிந்தது. அதன் பிறகு பன்னிரண்டு தினங்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்ப வேண்டிய நேரத்தில் என் மகனும் அவன் நண்பனும் கார் எடுத்துவர சென்று விட்டார்கள். நானும் என் மனைவியும் ரெடியாக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருக்கும் போது, திடீரென கதவை திறந்து கொண்டு அதே நான்கு பேர் உள்ளே வந்து நாங்கள் பாபா கோவிலில் இருந்து வருவதாக கூறி நன்றாக இறுக்கி றீர்களா? என்று கேட்டு என் நெற்றியில் உதி வைத்து உடனடியாக புறப்பட்டு விட்டார்கள். நான் சுதாரித்து எழுந்து வெளியே வந்து பார்த்தேன். அது மிக பெரிய ஹால் யாரும் அங்கிருந்து வெளியே சென்று இருக்கவே முடியாது. ஆனால் நான் வந்து பார்த்த போது அங்கு யாருமே இல்லை. இது பாபாவின் அற்புதத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும். ஜெய் ஜெய் சாய் ராம். பாபாவின் அற்புதங்கள் முதல் பகுதி முடிந்தது. பாபாவின் விருப்பபடி இனி அடுத்த பகுதி தொடரும். Sai Prakash.

Miracle : 31

பாபாவிடம் ஒருமுறை நான் கேட்டேன். சாய் ராம். நான் நமது South Shirdi Sai Baba கோவிலில் உண்டியல் வைக்க வேண்டாம் என நினைக்கின்றேன். அன்னதானம் கோவில் பூஜை செலவு முதலானவற்றை நானே செய்வ செய்வதற்க்கு, அதற்க்கான வசதியையும், அதற்க்கான பாக்கிய தையும். தர வேண்டும் என வேண்டினேன். அதற்க்கு பாபா சொன்ன பதில். நீ இவ்வாறு செய்ய நினைப்பது எனக்கு சந்தோஷமாக உள்ளது. உண்டியலில் காசு உனக்கு யாரும் தரவில்லை. எனக்கு தான் தருகிறார்கள். நானும் அதை என் தேவைக்காக வாங்கவில்லை. எந்த பக்தர் உடைய கர்மா முடிவுக்கு வரவேண்டும் என நான் நினைக்கிறேன். என்பதை பொருத்து, அவர்களுடைய கர்மாவை நான் தானமாக பெறுகின்றேன். அதை நீ எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும். நான் என் பக்தர் களிடம் இருந்து. கோவில் கட்டிட பணிக்காக, பொருட்கள் ஆக, பூஜை சாமான் களாக, அன்னதான மாக, எந்த ரூபத்தில், வேண்டுமானலும் பெற்று கொள்வேன். அவ்வாறு பெற்று கொள்வதை நான் அவர்களுக்கு பல (பத்து) மடங்காக திருப்பி கொடுக்க கடன் பட்டிருக்கிறேன். எனவும் கூறி உள்ளார். நாம் செய் கின்ற தர்மங்கள் அதை நல்ல முறையில் பயன் படுத்துபவருக்கு தான் சென்று சேறுகிறதா? எ‌ன்பதை ஆராய்ந்தும் செய்திட அறிவுறுத்தி உள்ளார். Miracle.... தொடரும்... Sai Prakash.

Miracle : 32

பாபா எனக்கு கொடுத்த அதிர்ச்சி! பாபா ஒரு நாள் என்னிடம் South Shirdi Sai Baba கோவிலுக்கு நான் வருவேன். அப்போது நான் தான் வந்திருக்கிறேன், என்பதை நீ மட்டும் அறிந்து கொள்ளும் படியாக நடந்து கொள்வேன். என தெரிவித்தார். என்னால் நம்ப முடியவில்லை. இது எதோ பிரமை என நினைத்தேன். அவர் சொன்ன பதில் என்னை அசர வைத்தது. பலஜன்மங்கலாக என்னுடன் ஏதேனும் ஒரு ரூபத்தில் தொடர்பில் இருந்த என் பக்தர்களை இந்த ஜன்மத்தில் எந்த நேரத்தில் என்னிடம் இழுக்க முடியும் என அறிந்து ​ அந்த நேரத்தில் அவர்களை குருவி காலில் நூலை கட்டி இழுப்பது போல என்னிடம் இழுத்து விடுவேன் என்று கூறி உள்ளதை நினைவு படுத்தினார். பல ஜன்மங்கலாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்களை, என்பதை எற்றுக் கொள்ளும் நீ இந்த ஜன்மத்தில் நான் வாழ்வதை ஏற்க மறுப்பது ஏன்? என்று கேட்டார். என்னால் உண்மைதான் பாபா என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல தோன் வில்லை. பாபா இப்போதும் எதோ ஓரிடத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். என்பதை மறுப்பதற்கில்லை. ஜெய் ஜெய் சாய் ராம். Miracle. தொடரும். Sai Prakash. சாய் ராம். இப்போதெல்லாம் இறைவனை வழிபடுபவர்கள். 80% பேர் பணம் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தே வழிபடுகிறார்கள். மீதமுள்ள 20% பக்தர்கள் உடல்நலம் குறித்து,மகன், மகள் கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி போன்ற தேவை களுக்காக வழிபடுகிறார்கள். பாபா கூட ஒரு சமயம் பக்தர்கள் அனைவரும் அவரவர்களுடைய தேவைகளை வைத்தே வழிபடுகிறார்கள். பாபா நீங்கள் தான் வேண்டும் என யாரும் வழிபடுவதில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார். அதற்க்காக பக்தர்களின் தேவைகளை ஒருநாளும் அவர் பூர்த்தி செய்யாமல் இருந்ததில்லை. ஒரு மனிதன் துன்பம் வரும்போது துக்க படவும் அழவும் செய்கிறான். துன்பம் வரும்போது துக்க படுவதாலும், அழுவதாலும் பிரச்சினை தீரும் என்றால் நாம் அதை செய்யலாம். நாம் துக்க படும்போதும் அழும்போதும் அல்லது மற்றவர் மீது கோபபடும் போதும், நமது மூளை செயல் இழந்து விடுகிறது.. சிந்தித்து, எதையும் சாதிக்க முடிவது இல்லை. இறை நாமம் ஒன்றே நம் குறை தீர்க்கும். துக்கம், சந்தோஷம் இரண்டுமே நம் மனத்தில் தான் உள்ளது நாம் சந்தோஷமாக இருப்பதாக நினைத்தால் அது சந்தோஷம், நாம் துக்கமாக இருப்பதாக நினைத்தால் அது துக்கம் இவை இரண்டும் நமக்குள்ளேயே இருக்கின்றன. இதை வெளியில் எங்கும் தேட வேண்டாம். பணம் அனைவருக்கும் வேண்டும் அனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. பணம் வாழ்க்கையின் ஒரு பகுதி தேவை மட்டுமே. அதை மட்டுமெ தேடி அலைபவர்கள். அதை கொண்டு செல்ல போவது மில்லை. உண்மையான வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். நாம் செய்யும் புண்ணியங்கள் மட்டுமே கடைசியில் நம்முடன் வரும். முதலில் நம்மை நாமே புரிந்து கொண்டு நல்ல வாழ்க்கையை இனிமேலாவது அமைத்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஜெய் ஜெய் சாய் ராம்.

Miracle : 33

ஷீரடியில் பாபா செய்த அற்புதம். சாய் ராம். நான் பாபாவிடம் என்னை ஒப்படைத்து 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டாலும் நான் அவரை வணங்க துவங்கி நான் ஷீரடி செல்லமுடியவில்லை அனைவரும், நீ முயற்சி செய்யவில்லை அதனால்தான் உன்னால் ஷீரடி செல்லமுடியவில்லை என்று கூறினார்கள். அவர்களிடம், பாபா என்னை அழைப்பார் அப்போது தான் நான் செல்வேன் என்று கூறிவிட்டேன். 10 ஆண்டுகளுக்கு பின்னரே எனக்கு ஷீரடி செல்லும் பாக்கியம் கிடைத்தது. ஷீரடி போகும் வழியெல்லாம் பாபா வாழ்ந்த காலத்தில் அவர் நடமாடிய ஊருக்கு செல்ல போவது மிகவு‌ம் மகிழ்ச்சி யாக இருந்தது பாபா கால் தடம் பட்ட இடத்தில் நம் கால் தடமும் பதிய போகிறது. ஷீரடியில் அவர் சுற்றிய இடங்களில் எல்லாம் நானும் சுற்ற போகிறேன். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க போகிறது. என்றெல்லாம் மனதிற்குள் மகிழ்ச்சி யுடன் சென்றேன். அங்கு சென்றதும் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் தவித்து பின்னர் அவர் பாதம் உள்ள பக்கம் நான் தள்ளபட்டேன். அங்கு தான் அந்த அற்புதம் நடந்தது. பாபாவிடம் பலவித கோரிக்கைகளை வைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால். பாபாவை பார்த்ததும் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. நான் வேண்டி கொள்ள நினைத்தது எதுவுமே நினைவில் இல்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால் கும்பல், கும்பலாக வெளியேற்றினார்கள். என்னுடன் 15 முத‌ல் 20 பேர் வரை வெளியேறிய சமயத்தில், பாபாவின் பாதத்தின் அருகில் நின்று கொண்டு ஜா ஜா என்று சொல்லி கொண்டு இருந்த நபர் அவ்வளவு கூட்டத்தில் என் கையை பிடித்து பின் பக்கமாக இழுத்து தன் அருகே நிற்க வைத்து பாபா காட்டி வணங்கும் படி சைகை செய்தார். அவர் அருகிலேயே இருந்து பாபாவை, வணங்கினேன். பின்னர் அவர் பாபாவின் பாதம் இருக்கும் இடத்தின் கீழ் புரத்தை காட்டி அங்கே வணங்கு மாறு தெரிவித்தார். நான் வணங்கும் வரை அங்கு வந்த கூட்டம் ஒரு நிமிடம் அப்படியே நின்றது. பிறகு அவர் என்னை பார்த்து போதுமா? என சைகையால் கேட்டார். கண்களில் நீர் வழிய அப்படியே அதிர்ந்து வெளியே வந்தேன். பாபாவை தவிர வேறு யாரால் இந்த பாக்கியத்தை தர முடியும். மறுநாள் அங்கிருந்து புறப்படு ம்போது. என் உயிருடன் இணைந்த ஒருவரை அங்கேயே விட்டு, விட்டு வருவது போன்ற ஒரு தவிப்பு, மேலும் மறுபடி என்னை எப்போது மீண்டும் அழைப்பீர்கள் பாபா என்று கேட்டபடியே, அங்கிருந்து புறப்பட்டேன். Miracle... தொடரும்... Sai Prakash. சாய் ராம். கர்ணன் உயிர் பிரியும் தறுவாயில். அவன் செய்த தர்மத்தின் பலன் தர்மதாயின் மூலமாக. அவன் உயிர் பிரியாமல் காத்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா, கர்ணனிடம். அவன் செய்த தர்மத்தின் பலனை தானமாக பெற்று கொண்டார். எதையுமே இல்லை என்று சொல்லாத கர்ணன் தான் செய்த தர்மத்தின் பலன் அனைத்தையும் பரந்தாமனுக்கு தாரை வார்த்து கொடுத்தா‌ன். உனக்காக சொர்க்க வாசல் திறந்திருக்கிறது என்று பரமாத்மா சொன்னதும், கர்ணன் உயிர் பிரிந்தது. தர்மதாய், கதறி அழுதாள். கர்ணன் சொர்க்கம் செல்லும் வழியில் தாகத்தாலும், பசியாலும் மிகவும் துயர் உற்றான். அப்போது நாரதர் எதிரில் வந்தார். அவரிடம், கர்ணன் சொர்க்கம் செல்லும் நான் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என கேட்டான், அதற்க்கு நாரதர், கர்ணா நீ எவ்வளவோ தான தர்மங்கள் செய்தாய் ஆனால் பசியுடன் இருப்பவருக்கு அன்னதானம் மட்டும் செய்யவில்லை. அதை உனக்கு உணர்த்தவே இந்த சோதனை எனக் கூறியதும், அன்னதானம் மட்டும் செய்தாலே அனைத்து தானங்கலும் செய்ததற்கு ஒப்பாகும் என்று கூறினார். அன்னதானதி‌ன் மகிமை தெரிந்ததால் இனி நாமும் பாபாவின் விருப்பபடி அன்னதானம் செய்யலாம். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. சாய் ராம். மனித வாழ்வை பற்றி சொல்லப்பட்டது. மனிதனாக பிறந்தது பெ‌ரிய பாக்கியம் அதிலும் கூன், குருடு, செவிடு மற்றும் ஊனம் இன்றி பிறத்தல் எல்லாவற்றிலும் சிறந்தது. இந்த பாக்கியத்தை நாம் பெற்று இருக்கிறோமா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இ‌தி‌ல் தப்பினால். நம் மனத்தில் நம் வாழ்க்கையை பற்றி நினைத்து பார்ப்பது இல்லை ஆயிரம் ஆண்டுகள் வாழ போவதுபோல நினைத்து கொள்கிறார்கள். ஆனால் நம் வாழ்க்கை என்ன தெரியுமா? தாயின் வயிற்றில் பிறந்து, பூமி தாயின் மடியில் சென்று சேர்வது வரை உள்ள அந்த இடைப்பட்ட காலம் தான் நம் வாழ்க்கை. வாழ்க்கையில் பிறந்த பிறப்பு சான்றிதழ் நமக்கு தெரியும். ஆனால் இறப்பு சான்றிதழ் நாம் பார்க்க முடியாது. நமது சந்ததியினர். நம் பெயரில் சொத்து இருந்தால் மட்டுமே அதை வாங்குவார்கள் இல்லை என்றால் அதையும் வாங்க மாட்டார்கள். இறப்பு என்பது யாருக்கு எந்த நேரத்தில் வரும் என்பதை யாராலும் அறிய முடியாது. அது பிறந்ததில் இருந்து மிக அருகிலும் இருக்கலாம் அல்லது கொஞ்சம் தூரத்திலும் இருக்கலாம். நாம் வாழும் காலத்தில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில் போய்விடும் தூக்கம் எ‌ன்பது இறப்புக்கு சமம். நமது மொத்த வாழ்க்கையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே நம் வாழ்க்கை இதில் குழந்தை பருவம் நீங்களாக விபரம் தெரிந்து நாம் வாழும் வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நினைத்து பாருங்கள். இதில் பணம், பணம் என்று அதன் பின்னே ஓடுப வர்கள். எவ்வளவு பேர் அதன் பயன் என்ன? இறக்கும் போது அந்த பணம் அவர்கள் கூட எடுத்து செல்ல முடியுமா? யாருக்காக நாம் சொத்து சேர்த்து வைத்த மனைவி, மக்கள், உற்றார் உறவினர் யாரேனும் நாம் இறக்கும் போது கூட வருவார்களா? அல்லது நமக்கு பின் வரும் சந்ததியினர்.அந்த பணத்தை வைத்து எப்படி வாழ்கிறார் கள் என நாம் பார்க்க முடியுமா? வாழும் நாட்களில் நாமும் வாழாமல் மற்றவர்கள் வாழ்வதற்கும் நம்மால் ஆனதை செயாமல். நாம் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?. இந்த உலகில் பிறந்ததற்கு நாம் சாதித்தது என்ன? இனியாவது பல வித நன்மைகளை செய்து ஷீரடி சாய் பாபா விற்கு பணிவிடை செய்து ஷீரடி சாய் பாபாவின் திருவடியை அடைய இதுவரை என்ன செய்து இருக்கிறோம். இனிமேல் ஆவதுஎன்ன செய்ய வேண்டும் என சிந்திக்கலாமா ? ஜெய் ஜெய் சாய் ராம். Sai. Prakash. சாய் ராம். பாபாவின் பெயரை சொல்லி கொண்டு சில பேர் உலா வருகிறார்கள். அவ்வப்போது பாபா அவர்களை நமக்கு அடையாளம் காட்டி கொண்டு தான் இருக்கிறார். இருந்தாலும் இது பாபாவுக்கும். அவர்களுக்கும் உள்ள பிரச்சினை. அவர்களுக்கு நல்ல பாடங்களை கற்பித்து அவர்களை நல்வழிபடுத்துமாறு நாம் பாபாவிடம் வேண்டுதல் செய்யலாம். அப்படி பட்டவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பாபாவின் விருப்பம். பாபாவின் பெயரை சொல்லி சில பேர் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். பாபாவின் பெயரை சொல்லி கொண்டு பணம் சம்பாதிக்க நினைப்பதை விட அவர் காலை இறுக பற்றி கொள்ளுங்கள் நீங்கள் நினைப்பதை விட பலமடங்கு உங்களுக்கு பாபா அள்ளி தருவார். ஒரு முறை பிரம்மா சிவபெருமானிடம். என்ன இருந்தாலும் என்னை விட மகாவிஷ்ணுவிடம் தான் நீங்கள் மிக நெருக்கமாக இருப்பதுடன் என்னை விட அவரை கொஞ்சம் உயர்த்தி தான் வைத்துள்ளீர்கள். என மிக வருத்தமாக சொன்னார். உடனே சிவபெருமான் உங்கள் இருவருக்கும் நான் ஒரு சோதனை வைக்கிறேன் என்று கூ‌றி. முத‌லி‌ல் என் தலையை தொடுகிறவர், எனக்கு மிக நெருக்கமானவர் என கொள்ளலாம். என்று கூறினார். உடனே பிரம்மா இதோ இப்பொழுதே தொட்டு விடுகிறேன். என புறப்பட்டார். பிரம்மா மேல் நோக்கி சென்று கொண்டே இருந்தார் சிவபெருமானின் தலையை அடைய முடிய வில்லை. அப்போது ஒரு தாழம்பூ கீழ் நோக்கி வந்து கொண்டு இருந்தது. அதை பார்த்ததும் நீ எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மா கேட்டதும், நான் சிவபெருமான் தலையில் இருந்து பல நூறு ஆண்டுகளாக வந்து கொண்டு இருக்கிறேன். பூமி எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. என்று கூறியது. இந்நிலையில் மகாவிஷ்ணு நேராக சென்று சிவனின் கால்களை தொட்டு வணங்கினார். . உடனே சிவபெருமான் அடடா மகாவிஷ்ணு நம் கால்களில் விழுவதா ? என்று உடனே குனிந்து மகாவிஷ்ணுவை தூக்கினார். உடனே மகாவிஷ்ணு சிவபெருமான் தலையில் கை வைத்தார். சிவபெருமான் தலையில் மகாவிஷ்ணு கை வைத்தும் பிரம்மா கீழே வந்து விட்டார். சிவபெருமான் கோபத்தில், தன் தலையில் இருந்து வரும் ரகசியத்தை சொன்னதால் தாழம்பூவை எந்த கோவில் களிலும் பயன்படுத்த மாட்டார்கள் என்று சாப மிட்டார். அதே போல, பிறரிடம் கேட்டு அறிய நினைத்ததால், பிரம்மாவிற்கு இவ்வுலகில் தனி கோவில் கிடையாது. எனவும் சாப மிட்டார். இதில் இருக்கும் உண்மை என்ன என்பதை அறிந்து நாம் நடக்க வேண்டும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash.

உனையன்றி துணையேது பாபா
உன் முகமன்றி உலகேது பாபா
உன் நினைவின்றி வாழ்வேது பாபா
என் மனதில் நிலைத்திட்ட பாபா
ஆதியும் நீயே பாபா
அந்தமும் நீயே பாபா
உனையன்றி …….
அற்புதங்களின் நாயகன் நீயே பாபா
அனைத்திலும் உயர்ந்தவன் நீயே பாபா
ஆள பிறந்தவன் நீயே பாபா
அன்புள்ளம் கொண்டவன் நீயே பாபா
அரவணைப்பவன் நீயே பாபா
ஆனந்தம் அளிப்பவன் நீயே பாபா
துன்பம் போக்குபவன் நீயே பாபா
துயரம் நீக்குபவன் நீயே பாபா
உனையன்றி………..
தாயும் நீயே பாபா
தந்தையும் நீயே பாபா
உயிரும் நீயே பாபா
​ உணர்வும் நீயே பாபா
உண்மையும் நீயே பாபா
நன்மையையும் நீயே பாபா
இவ்வுலகின் நாயகன் நீயே பாபா
உனையன்றி.........
நீயன்றி நான் இல்லை பாபா
உன் நினைவின்றி என் உயிரில்லை பாபா
எனை ஆட்கொண்ட நாயகன் நீயே பாபா
என் உயிர் பிரிந்தால் பாபா
உன் பாதமே தான் நான் சேருமிடம் பாபா
உனையன்றி......
Written by Sai Prakash பாபா, முத்து முத்து புன்னகையை சேர்த்து,
பாபா முன்னும் பின்னும் அன்ன நடை போட்டு
நடந்தது அவரது கால்கள்
நன்மைகள் பெற்றது உலகம்
அழகிய பாதங்கள் பதிந்ததுமே
அந்த ஷீரடி பெற்றது பெருமை தனை
அவர் பாதங்கள் பட்ட இடமெல்லாம்
பவித்ர மானது பூமி
நன்மைகள் செய்திடும் பாபா
நல்லாருக்கு உதவிடும் பாபா
​ பாவங்கள் தீர்ந்திடும் பாபா
நம் பகை தனை ஒழித்திடும் பாபா
ஷீரடி நாதனின் திருவடியே
நாம் தினம், தினம் தொழு திடும் சுகவடிவே
பக்தர்கள் போற்றிடும் பாபா
அவர்தம் பாவங்கள் நீக்கிடும் பாபா
நன்னிலம் காத்திடும் பாபா
நல்லவர் துணை கொண்டு பாபா
அன்னம் அளித்திடும் பாபா
பசி தனை போக்கிடும் பாபா
நல்லவர் கெல்லாம், நீயே
நலம் தரும் தெய்வம் பாபா.
Written by Sai Prakash
சாய் ராம்.

பாபா, முத்து முத்து புன்னகையை சேர்த்து, பாபா முன்னும் பின்னும் அன்ன நடை போட்டு. நடந்தது அவரது கால்கள். நன்மைகள் பெற்றது உலகம். அழகிய பாதங்கள் பதிந்ததுமே, அந்த ஷீரடி பெற்றது பெருமை தனை. அவர் பாதங்கள் பட்ட இடமெல்லாம், பவித்ர மானது பூமி. நன்மைகள் செய்திடும் பாபா. நல்லாருக்கு உதவிடும் பாபா. பாவங்கள் தீர்ந்திடும் பாபா. நம் பகை தனை ஒழித்திடும் பாபா. ஷீரடி நாதனின் திருவடியே நாம் தினம், தினம் தொழு திடும் சுகவடிவே. பக்தர்கள் போற்றிடும் பாபா. அவர்தம் பாவங்கள் நீக்கிடும் பாபா. நன்னிலம் காத்திடும் பாபா. நல்லவர் துணை கொண்டு பாபா. அன்னம் அளித்திடும் பாபா. பசி தனை போக்கிடும் பாபா. நல்லவர் கெல்லாம், நீயே நலம் தரும் தெய்வம் பாபா. Sai Prakash. தாய் எனும் தெய்வத்தை தந்ததும் நீயே சாயி, சேயாக உன்னுடன் எனை சேரத்தது நீயே சாயி, அன்பென்னும் பாதையை காட்டி விட்டாய். அறிவெனும் ஒளி தனை ஏற்றி விட்டாய். என் உறவாய் நீ இங்கு வந்து விட்டாய். என் உயிரை உன்னிடம் தந்து விட்டேன். உன் திருவடி நிழலில் சரணம். உன் கைகளில் என்றும் திரு ஓடு. நீ காப்பது என்னை uரிவோடு சிவனாகவேவந்தாயே சாயி. பரந்தாமனாக வந்தாயே சாயி, பிரம்மாவாக வந்தாயே சாயி. தத்தாத்தரேயராக ஒளிர்ந்தாயே சாயி, உனையன்றி துணை ஏது சாயி, . நீயன்றி உலகேதுசாயி. சாயி வாழ்க, அவர் திருமுகம் வாழ்க. அவர்மலரடி வாழ்க. அவர் பாதகமலங்கள் வாழ்க, வாழ்கவே. Sai. Prakash. 6/03/2019 இன்று நான் பெரியபாளையம் அருகே உள்ள ஊத்துக்கோட்டை எனும் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றிருந்தேன். பாற்கடலை கடைந்த போது கிடைத்த, விஷத்தை உலகநன்மைக்காக, சிவபெருமான் அதை தன் வாயில் போட்டுக்கொண்டார். இதையறிந்த பார்வதிதேவி உடனே சிவபெருமானின்கழுத்தை, பிடித்து அமுக்கி அந்த விஷம் கழுத்தை விட்டு இறங்காமல் சிவபெருமானின் கழுத்திலேயே நிற்குமாறு செய்துவிட்டார். அப்படியே கீழே சாய்ந்த சிவபெருமானை, பார்வதிதேவி தரையில் அமர்ந்து தன் மடியில் அவர் தலைவைத்து படுக்குமாறு ஏற்றுக்கொண்டார். மகாவிஷ்ணு பள்ளிகொண்டிருப்பது போல, சிவபெருமான் பார்வதி தேவியின் மடியில் சயநித்திருப்பது போன்று இக்கோவிலில் மிகபிரமாண்டமாக அமைந்துள்ளது, கண் கொள்ளாக் காட்சி. இந்த கோவில், பெரியபாளயத்தம்மன் கோவிலை அடுத்து தமிழ்நாட்டு எல்லை முடிந்தவுடன். ஆந்திர எல்லையின் ஆரம்பத்தில் ஊத்துக்கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது. எப்போதாவது நேரம் கிடைத்தால் ஒரு முறை, இந்த கோவில் சென்று இறை அருள் பெருவது நல்லது. ஜெய் ஜெய் சாய் ராம். Sai. Prakash.

Miracle : 34

அன்னதானத்தின் மகிமை. மனிதர்கள் அனைவருக்கும் பிற ந்தது முதல் இறக்கும் வரை இன்றியமையாதது. உணவு. உணவு இல்லாமலும் காற்று. நீர்இல்லாமலும் யாரும் உயிர் வாழ முடியாது. அந்தகாற்றையும், நீரையும் இறைவன் நமக்கு எந்த குறையும் இல்லாது கிடைக்க அருள் பாளித்து விட்டார். ஆனால் உணவு நமக்கு நாமே, தேடிக்கொள்ள வேண்டும். இவ்வுலகில் பிறந்தவர் அனைவரும் சமமே ஆண்டவன் படைப்பில், பிறந்த அனைத்து மனிதர்களிலும், உயர்ந்தவர், தாழ்ந்தவர், என்று எவருமே இல்லை. இவை யாவும் மனிதர்களால் ஏற்படுத்தபட்டவை. ஆனால் பசி மட்டும், அனைவருக்கும் பொதுவானது.உலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒன்றே. இப்படி இருக்கும்போது. ஒருசிலர் அளவுக்கு அதிகமாக உணவுஉட்கொள்வதும், வீணடிப்பதும். மற்றவர்கள் உணவின்றி தவிப்பதும் எந்தவிதத்தில் நியாயம். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உணவளித்தால் அது புண்ணியம் தானே. அதைச்செய்ய என்னதயக்கம்.? கடவுள் நமக்கு நிறைய கொடுத்து இருக்கிறார். நாம் இவ்வுலகை விட்டு செல்லும் போது எதையும் எடுத்து செல்ல போவதில்லை. உலகில் பிறந்த உயிரினங்கள் அனைத்திற்கும்,உயிர்வாழ உணவு அவசியம். மற்ற உயிரினங்களுக்கு, பணம், பதவி, பகட்டு எதுவும் தேவை இல்லை. உணவு, காற்று, தண்ணீர் மட்டுமே போதுமானது. அன்னதானம் தொடர்ந்து செய்ய, செய்ய அதுவே ஒரு போதையாக மாறி விடும். அதன் பிறகு நாம் நினைத்தாலும், அன்னதானம் செய்வதை நிறுத்த முடியாது. இறையருள்முழுமையாக பெறவேண்டுமா? அன்னதானம் செய்யுங்கள் உங்கள் குறைகள் எல்லாம் தீருவதை கண்கூடாக காண்பீர்கள். இறை அருளால் மோட்சமும் கிடைக்கும். அதனால் தான் பாபாவும் அன்னதானத்தை வலியுறுத்துகிறார். ஜெய் ஜெய் சாய் ராம். ... Sai. Prakash.

Miracle : 35

இன்று பாபா நடத்திய அற்புதம்.... பாபா கோவிலில் தற்போது பணி ஏதும் நடைபெறாததால் சி தினங்களாக நான் நமது கோவிலுக்கு செல்லவில்லை. பாபா இன்று என்னை கோவிலுக்கு வரவழைத்தார். இன்று புதன் கிழமை ஆதலால், நமது கோவில் ஐஸ்வர்ய கணபதிக்கு அருகம்புல் அணிவித்து. பூஜை செய்யப்பட்டதுடன், இன்று பாபாவை அலங்கரிக்கும் தலைப்பாகையை, குல்லா போல் அணியசெய்தார். பூஜை முடித்து வீடு திரும்பியதும். வீட்டில் அல்லா போலவே இன்று பாபா விற்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். அப்போதுதான், தெரிந்தது இன்று ரம் ஜான்

Miracle : 36

புற்று நோயில் இருந்து உயிர் காத்த பாபா. ஒரு நாள் நான் வீட்டில் இருந்தபோது, இரண்டு பேர் என் வீட்டு வாசலில் வந்து நின்றார்கள். இருவருமே எனக்கு மிகவும் நெறுக்கமானவர்கள்தான். உள்ளே வாருங்கள் என அழைத்தேன். அதில் ஒருவர் மட்டும் தயங்கி நின்றார். நான் அவரிடமும், பரவாயில்லை, வாருங்கள், என அழைத்தேன். பின்னர் அவரும் உள்ளே வந்தார். இருவரும் உள்ளே வந்து அமர்ந்தனர். உள்ளே வர தயங்கியவருக்கும், எனக்கும். நான் கோவில் கட்ட துவங்குவதற்கு முன்பாக, சிறிது. மன வருத்தம் இருந்தது. அதனால் அவர் என் மீது கோபமா? என கேட்டார்.( கோவில் கட்ட ஆரம்பித்ததில் இருந்து பாபா என்னை எந்த அளவுக்கு பக்குவ படுத்தியுள்ளார். என்பது, அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.) நான்.ஏன் உங்கள் மீது கோபப்பட போகிறேன். உங்கள் மீது கோபம் எல்லாம் எதுவும் இல்லை. சொல்லுங்கள் என்று சொன்னேன். அடுத்து அவர் சொன்ன வார்த்தை என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. எனக்கு வயிற்றில் குடலில் கேன்சர் கட்டி உள்ளது. எனவே என் வயிற்றில் இருந்து இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு ஒரு முறை 7 அல்லது 8 லிட்டர் தண்ணீர் ஊசி மூலம் எடுப்பார்கள். இன்னும் மூன்று மாதங்கள் தான் நான் உயிரோடு இருப்பேன் என்று கூறிவிட்டார்கள். என கூறினார். உடனே அவரை பூஜை அறைக்கு அழைத்து சென்று,பாபாவிடம் மனமுருக அவரை காத்தருள வேண்டினேன்., என்னிடம் ஒப்படைத்து விட்டாய் அல்லவா? நான் பார்த்துக்கொள்கிறேன். என்று பாபா கூறிவிட்டார். பிறகு பாபா உதியை அவர் வயிற்றில் பூசி விட்டு, மூன்று பாக்கெட் உதியை கொடுத்து 21 தினங்கள் நீரில்கலந்து அருந்த சொன்னேன். அதன் படி செய்ததும். பிறகு 5மாதங்களில் குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு. கேன்சர் கட்டி அகற்றப்பட்டது. தற்போது எந்த குறையும் இன்றி நலமுடன் வாழ்கிறார். இது பாபா செய்த அற்புதம் அல்லவா?பாபாவுக்கு என் நன்றியை செலுத்தினேன். ஜெய் ஜெய் சாய் ராம். Miracle....தொடரும். SAI. PRAKASH.

Miracle : 37

பாபாவிடம் கொண்ட நம்பிக்கைக்கு கிடைத்தபரிசு. ஒருநாள் எனக்கு காது அடைத்துக்கொண்டது போல இருந்தது. மாலையில் மருத்துவரிடம் காட்டலாம், என நினைத்தேன். பிறகு பாபா இருக்கிறார். அவர் பார்த்து கொள்வார் என பேசாமல் இருந்து விட்டேன். சிறிது நேரத்தில். உறவுக்கார பையன் ஒருவன் வந்தான். ஆன்டி சிறிது அமிர்தாஜ்சனம் வேண்டும் என கேட்டான். தலைவலியா? என கேட்டதற்கு, எனக்கு காது அடைத்தது போல உள்ளது. சிறிது அமிர்தாஜ்சனம் எடுத்து காதின் கீழ்பகுதியை ஒட்டிய கண்ணத்திலும் காதின் பின் பகுதியிலும் தேய்த்தால் சரியாகிவிடும் என்று அம்மா சொன்னார்கள். என்று கூறினான். இது பாபா எனக்காகவே சொல்லி அனுப்பியது போல இருந்தது. இவ்வாறு செய்ததும். எனக்கும் சரியாகிவிட்டது. இது பாபாவின் மேல் வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த அற்புதம். Miracle... தொடரும். Sai. Prakash.

Miracle : 38

பாபாவை யாறென்று தெரிந்து கொண்டார். ஒரு முறை ஊரில் இருந்து என் உறவினர் ஒருவர் வந்திருந்தார். பல் வேறு விசயங்களை நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென அவர் நீ எப்போதும் பாபா, பாபா என அவரையே வணங்கி கொண்டிருக்கிறாயே ஏன்? என்று கேட்டார். அது ஏனென்று சொன்னால் உனக்கு புரியாது. நீ பாபாவிடம் ஏதாவது வேண்டுதல் வை. அது நிறைவேறினால், நீ பாபா கோவிலுக்கு வருவதாக வேண்டிக்கொள். என்று கூறினேன். அவரும் சரி என்றார். அவரும் நானும் சென்னையில், ஒரு சில இடங்களுக்கு சென்று வந்தோம். மாலை வீட்டிற்கு வந்ததும், வா பாபா கோவிலுக்கு போகலாம் என்றார். என்ன என்று கேட்டேன். அவர் சொன்னார். நான் மூன்று வேலையாக சென்னைக்கு வந்தேன். நீ சொன்னவுடன் பாபாவிடம் இந்த மூன்று கோரிகைகளுக்காக வேண்டிகொண்டேன். அவை மூன்றும் இன்றே நிறைவேறி விட்டது. எனவே பாபா கோவிலுக்கு போகலாம் என கூறினார். உடனே பாபா கோவில் சென்று வந்தோம். பாபா அவரை தன் பக்தராக ஏற்றுகொண்டார். அது முதல் அவரும் பாபாவின் பக்தர் ஆகிவிட்டார். (பாபா அவர் காலில் நூலைக்கட்டி தன்னிடம் இழுத்து விட்டார்) ஜெய் சாய் ராம். . Miracle... தொடரும். Sai Prakash.

Miracle : 39

குழந்தையின் உயிர் காத்த பாபா. நான் எழுதும் ஒவ்வொரு அற்புதங்களிளும் அந்த அற்புதங்கள் சம்பந்தப்பட்ட நபர் களை குறிப்பிடுவது இல்லை. அதை பார்க்கும் போது, சம்பந்தபட்ட நபர்கள் இது நமக்கு நடந்த அற்புதம் தான் என்பதை புரிந்து கொள்வார்கள். ஒரு முறை ஒரு வயது குழந்தைக்கு உடல்நல மின்மையால், மருத்துவரிடம் அழைத்து சென்ற போது, ஒரு வயது குழந்தைக்கு ஆபரேசன் செய்ய வேண்டும் என சொல்லி விட்டார்கள், அதுவும் அடுத்த நாள் காலையே செய்ய வேண்டுமென சொன்னதால். இரவு குழந்தையுடன் இரண்டு பெண்களை தங்க வைத்து, நானும் குழந்தையின் தந்தையும் இரவு 11.00 மணிக்கு மேல் வீடு திரும்பி னோம். வரும் போது, அவர் என்னிடம் கேட்டார். ஒரு வயது குழந்தைக்கு ஆபரேசன் குழந்தை எப்படி தாங்கும், என மிகவும் வருத்தத்துடன் கேட்டார். நான் சொன்னேன், பாபா நினைத்தால், ஆபரேசன் தியேட்டர் சென்றவுடன் கூட, ஆபரேசன் வேண்டாம் என திரும்ப அழைத்து விடுவார் என்றேன். அடுத்த நாள் காலை 6.30.மணியளவில் நாங்கள் மருத்துவமனை சென்றோம். அதற்குள் குழந்தைக்கு மயக்க ஊசி போட்டு ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து சென்று விட்டார்கள். நாங்கள் அனைவரும் குழந்தையை நினைத்து வருந்தியபடி வெளியில் காத்திருந்தோம். 10 நிமிடத்தில் டாக்டர் வெளியில் வந்தார். வந்தவர். இப்போது ஆபரேசன் வேண்டாம் என நினைக்கிறேன். குழந்தை வளர, வளர இந்த பிராப்ளம் சால்வாகிவிடும். என தோன்று கிறது. எனவே மயக்கம் நெளிந்ததும், நீங்கள் குழந்தையை வீட்டிற்கு அழைத்து செல்லலாம். என கூறிவிட்டார். மாலை 3.00 மணிக்கு மயக்கம் தெளிந்ததும். குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். பாபா என்னை என்ன சொல்ல வைத்தாரோ, அதை அப்படியே டாக்டரையும் சொல்ல வைத்தார். ஜெய் ஜெய் சாய் ராம். Miracle... தொடரும். Sai. Prakash.

சாய் ராம். உம் திரு மலரடி சரணம்.
உம் திரு மலரடி சரணம் என்றதும், எனக்கு துன்பமும் இன்பமே.
நின் பார்வை என் மீது பட்ட மறு கனமே,
பூர்வ ஜன்மத்தில் நான் செய்த பாவத்தின் கருமை மரைந்து ஒளி வெள்ளமாய் காட்சி தருமே.
அன்பு ஊற்றெடுத்து அறம் செய தூண்டுமே.
​ நின் பார்வை என் மீது பட்டவுடன்.
அன்னபூரணி அன்னையின் அருள் கிடைத்து அன்னதானம் செய்ய மனம் வருமே.
பாபா நின் பார் வை பட்டவுடன். மண மறியா மங்கையற்கு மணக்கோலம் தோன்றிடுமே.
பாபா நின் பார்வை என் மீது பட்டவுடன் நின் கருணையால் மழலை செல்வம் அறியா
மங்கையற்கு நான் வேண்டும் வேண்டுதலால் வழித்தோன்றல் கிடைத்திடுமே.
பெண்ணாக இருப்பவருக்கு அம்மா எனும் அற்புதபெயர் அளித்திடுவாய்.
பாபா நின் பார்வை மட்டும் பட்டு விட்டால், உடல் நலமின்றி படுக்கையில்
இருப்போரையும், பம்பரமாய் சுழன்று பணி செய்ய பணித்திடுவாய்.
பாபா நின் பார்வை மட்டும் பட்டு விட்டால், தொலில் நளிந்தோரை தூக்கி நிறுத்தி உயர் வடைய செய்திடுவாய்.
பாபா நின் பார்வை பட்டவுடன் கல்வியில் உயர்ந்து கரை காண வைத்திடுவாய்.
பாபா என் உள்ளத்தில் உயர்ந்து நின்றாய். என் எண்ணத்தில் நிறைந்து நின்றாய்.
என்னுடன் நீ இணைந்து நின்றாய். என்னுயிர் நீ தானே, உன்னுயிரும் நான் தானே. வாழ்க நின்னருள்.
வளர்க நின்திருநாமம். நின் திருவடி சேவையே என் குருவடி சேவையாம்.
Sai Prakash.

Miracle : 40

குழந்தை வரம் தந்த பாபா. ஒருமுறை நமது கத்திரிச்சேரி தென் சீரடி சாய் பாபா கோவிலில் அபிஷேகம், ஆர்த்தி மற்றும் அன்னதான வைபவம் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்த மக்கள் எல்லாம் பசித்த வயிற்றோடு உணவு அருந்திக்கொண்டு, இருந்தனர். அவர்கள் பசியோடு உணவு உட்கொள்வதை கானும் போது என் கண்களில் நீர் மல்க நான் பார்த்துக்கொண்டிருப்பேன். அன்றும் அவ்வாறு நடந்தது. அப்போது. ஒரு அம்மா தயங்கி, தயங்கி என்னருகில் வந்தார். வந்தவர், என்னிடம், என் மகளுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. ஒருமுறை அய்யா தாங்கள் இங்கு அன்னதானம் செய்யும் போது, நான் பாபாவிடம் நன்றாக வேண்டிக்கொண்டுபாபா, இன்று இந்த பிரசாதத்தை எடுத்துச்சென்று, என் மகளிடம் கொடுக்கிறேன். அவள் கற்பமாக அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். இப்போது என் மகள் ஒன்பது மாதமாக இருக்கின்றாள். குழந்தை பிறந்தவுடன். பாபாவுக்கு ஒரு நாள் பூஜை செய்ய வேண்டும். என கேட்டார்கள். நான அவரிடம் பாபா எவ்வளவு பெரிய பாக்கியத்தை தந்திருக்கிறார். தாராளமாக பூஜை செய்யலாம். என்று கூறினேன். இது பாபாவின் அற்புதம் அல்லவா? ஜெய் சாய் ராம். Miracle... தொடரும். Sai Prakash. Cell :9884992226.
எப்பொழுதெல்லாம், நான் தேவை என என் பக்தன் நினைக்கிறானோ, அப்பொழுதெல்லாம் தவறாமல் நான் அவனுடன் இருப்பேன். சாய் பாபா.
என் திரு நாமத்தை தொடர்ந்து உச்சரிக்கும் எவரும் என் அருளை பெறாமல் இருந்ததில்லை... சாய் பாபா.
என் அற்புதத்தை உணராத என் பக்தர் யாரேனும் ஒருவர் இருப்பதாக சொல்ல முடியுமா? சாய்பாபா.
என்னையே சுவாசமாகக் கொண்ட என் பக்தன் எவனொருவன் தனக்காக இல்லாமல், தன்னை மறந்து பிறருக்காக வேண்டும் போது, அவன் கோரிக்கையை உடனே நிறைவேற்றி அவனை ஆனந்தப்பட வைக்கிறேன். சாய்பாபா.

Miracle : 41

சாய் ராம். பாபா மிகவும் கோபக்காரர்.அவருக்கு பிடிக்காத காரியத்தை யாறேனும் செய்து விட்டால் அவருக்கு கோபம் வந்து கண்ட படி திட்டுவார். கற்களை தூக்கி எறிவார். எல்லாம் சில நிமிடங்களே. பின்னர் அவரே சமாதானமாகி விடுவார். அதே போல அன்பு காட்டுவதிலும் அவருக்கு ஈடானவர் யாரும் இல்லை. ஒரு முறை பாபாவிடம் நான், பாபா எனக்கு அளவுக்கு அதிகமான சோதனைகளை தருகிறீர்களே. என்னால் தாங்க முடியவில்லை. எப்போது என்னை சோதிப்பதை நிறுத்த போகிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் உன் தாங்கும் சக்தி என்ன என்பதை நீ அறிய மாட்டாய் அதை நான் மட்டுமே அறிவேன். அது வரை பொருமை யாக இரு என்று கூறி விட்டார். ஒருமுறை நான் கோவில் பணி இன்னும் முடிய. வில்லையே என்ற ஆதங்கத்தில், கோபமாக பாபா இனி நீங்கலாயிற்று உங்கள் கோவில் ஆயிற்று. எப்போது முடிக்க வேண்டுமோ அப்போது முடித்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டேன். உடனே அவர் ஏன் நீ என்னிடம் சீக்கிரம் முடித்துக்கொடுங்கள் பாபா என கேட்க மாட்டாயா? என என்னை கேட்டார். நான் பாபாவிடம் சாய்ராம் தாங்கள் என்னிடம் கோவில் கட்ட ஆரம்பிக்கும் போது என்ன கூறினீர்கள். பாபா கோவில் கட்டுகிறோம் என்பதை மட்டும் அனைவரிடமும் கூறு. அதற்காக யாரிடமும் பணம் கேட்காதே, என்று கூறினீர்கள் அல்லவா. கோவில் கட்டுவதில் பங்கு பெறும் பாக்கியம் உள்ளவர்களை நான் அனுப்புகிறேன். என்று கூறினீர்கள். இன்றுவரை நீங்கள் கூறியபடி கோவில் கட்டுவதற்காக, இதுவரை நான் யாரிடமும் பணம் கேட்க வில்லை. இதுவரை தாங்கள் அனுப்பிய சில நல்ல உள்ளங்களிடம் மட்டும் அவர்கள் விரும்பி செய்த பணிகளை ஏற்றுக் கொண்டேன். தாங்கள் கூறியபடி அவர்களுக்கு பத்து மடங்காக தாங்கள் திரும்ப வழங்கி விடுவீர்கள் என்பதும் உண்மை.. பணி நிறைவடையும் நிலையில் நிற்கிறது ஏன்? என்று கேட்டதற்கு. தாங்கள் என்னிடம். உன்னைத்தேடி ஒருவர் வருவார். அவர் மீதமுள்ள பணிகள் அனைத்தையும் உன் உடன் இருந்து செய்து கொடுப்பார். என கூறி னீர் கள். அதன்படி அந்த நல்ல உள்ளத்தின் வருகைக்காக காத்திருக்கிறேன் பாபா. அவரை சீக்கிரம் அனுப்பி ​ வையுங்கள். ஜெய் ஜெய் சாய் ராம். Miracle... தொடரும். Sai Prakash. Cell:9884992226.
பாபாவின் பக்தர்கள் பல பேர் பாபாவின் 41 அற்புதங்களை யும் சேமித்து வைத்துள்ளதாக கூறினார்கள். அவர்களுக்கும்,மற்றபக்தர்களுக்கும் எனது சிறிய வேண்டு கோள். பாபாவின் அற்புதங்களை (Miracles) அனைவரும் அறிந்து கொள்ளும் படியாக தாங்கள் சார்ந்துள்ள அனைத்து வாட்ஸ் அப் குரூப் களிலும் பதிவிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். பாபாவே, தான் செய்யும் அற்புதங்களை அனைவரும் அறிந்து கொள்ள செய்யுமாறு கூறியுள்ளார். ஜெய் ஜெய் சாய் ராம். . Sai Prakash. Cell: 9884992226.
பாபாவே நம் தந்தை, பாபாவே நம் தாய், பாபாவே நம் குரு அவரே நம் தெய்வம். அவரே நமக்கு எல்லாம். இருதியில் அவரது திருவடியே நாம் தஞ்சமடையுமிடம். பாபா திருவடியே சரணம். ஜெய் ஜெய் சாய் ராம்.

Miracle : 42

சில தினங்களுக்கு முன்பு. ஒரு பெண்மணி எனக்கு போன் செய்தார். தனக்கு உடல் நிலை மகவும் மோசமாக இருப்பதாகவும். தாங்கள் எனக்காக பாபாவிடம் வேண்டி சீரடி உதி அனுப்பி வையுங்கள் என கேட்டுக்கொண்டார். விஷயம் என்ன வென்றால், அவர்களுக்கு ஒரே மகன் வசதியுள்ளவர்கள். அப்பெண்மணியும் அவரது கணவரும் தம் உறவினர்களிடம் அவ்வளவு, நெறுக்கமாக இல்லாதிருந்தார்கள். அவர்களது மகன் தன்னுடன் படித்த பெண்ணை காதலித்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்து விட்டார்கள். இவ்விஷயம் அவனது தாய் தந்தைக்கு தெரியவந்ததும், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாதிருக்க, பல வழிகளில் முயற்சி செய்தார்கள். இதனால் அவர்கள் மகனுக்கும், அந்த பெண்ணுக்கும் இவர்கள் மேல் வெறுப்பு அதிகமாகிவிட்டது. இவர்கள். இத்திருமணத்தை நிறுத்த முற்பட்டதால், பெண் வீட்டாரின் சம்மதத்துடன் பையனின் தாய் தந்தை இல்லாமலே, திருமணம் முடிந்துவிட்டது. இந்த நிலையில் தன் ஒரே மகனின் திருமணம் இவ்வாறு ஆகிவிட்டதே என அந்த வருத்த்திலேயே அப்பெணமணியின் உடல் நலிவுற்றது. தற்போது ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்து விட்டது. அப்பெண்மணி படுத்படுக்கை ஆகிவிட்டார். தற்போது இவருக்கு தன் பேரன் பேத்தியை பார்க்கவண்டுமென ஆசை வந்து விட்டது. மருமகள் இவர்களை வந்து பார்ப்பதில்லை. குழந்தைகளையும் காட்டுவதில்லை. மகன் மட்டும் எப்போதாவது வந்து பார்த்து செல்வார். ஏற்கெனவே ஒருவருக்கு கேன்சர் வந்து பாபாவின் உதி கொடுத்து அதன் மூலம் பாபா வின் அருளால்குடல்மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் உயிர் பிழைத்தை, பதிவிட்டிருந்தேன். அதை கேள்விப்பட்ட இப் பெண்மணி தனக்காக பாபாவிடம் வேண்டிக்கொணடு உதி அனுப்புமாறு கேட்டிருந்தார். பாபாவிடம் நன்றாக வேண்டிக்கொணடு உதி அனுப்பப்பட்டது. உதியை நெற்றியில் இட்டுக்கொண்டு ஒரு ​ சிட்டிகை நீரில் கலந்து தினமும் அருந்தவும் தெறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்தபடியே நான்கு தினங்கள் இவ்வாறு செய்யவும், அவரது மகன் தன் இரண்டு குழந்தைகளுடன் தன் தாயைக்காண வந்து விட்டான். என்னே பாபா உதியின் மகத்துவம். இது பாபாவின் அற்புதம் அல்லவா? இனி அந்த தாய் உடல் நலம் பெற்று எழுந்து விடுவார். நாமும் அந்த குடும்பம் நன்றாக இருக்க பாபாவிடம் வேண்டிக்கொள்வோம். ஜெய் ஜெய் சாய் ராம். Miracle... தொடரும். Sai. Prakash. Cell:9884992226.

Miracle : 43

பாபா உதியின் மகிமை. சில தினங்களுக்கு முன்பு. ஒரு பெண்மணி தனது உடன் பிறந்த சகோதரனின் மகன் திருமணத்திற்காக தென் திசையில் உள்ள ஒரு ஊரில் இருந்து, தனக்கு உடல் நலமில்லா நிலையில் காரில் படுத்தபடியே சென்னைக்கு வந்துள்ளார். அன்று மாலை வரவேற்பு முடிந்தவுடன், அடுத்தநாள் காலை முகூர்த்தம் உள்ள நிலையில் எழுந்து வர முடியாமல் உடல் நலமில்லாமல் ஆகிவிட்டது. முகூர்த்தம் முடிந்தவுடன். உடனடியாக திருமண மண்டபத்தில் இருந்து சென்னை ராமச்சந்திரா மருத்து மனைக்கு அழைத்து சென்றதும். அவர்கள் சில மாத்திரைகளை கொடுத்து, இவரது முந்திய மெடிக்கல், ரிபோர்ட்களை எடுத்து வாருங்கள் அதன் பிறகே அட்மிட் செய்து சிகிச்சை அளிக்க இயலும் எனவும் இவர் இருக்கும் நிலையில் ஊருக்கு அழைத்துச்செல்லவேண்டாம். எனவும் தெரிவித்து விட்டனர். அன்று இரவு நான் எனது வீட்டில் பாபாவிற்கு அபிஷேகம் நடத்திக்கொண்டிருந்த நேரத்தில் அப்பெண்மணியின் மகன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அபிஷேகம் ஆர்த்தி எல்லாம் முடிந்தவுடன்,அவரிடம், அபிஷேகம், ஆர்த்தி முடிந்து பாபா சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் நீ வந்திருக்கிறாய். பாபாவின் இந்த சீரடி உதியை உன் அம்மாவின் நெற்றியில் பூசிவிடு பின்னர் ஒரு சிட்டிகை உதியை நீரில் கலந்து குடிக்கச்சொல். இந்த உதி பாக்கெட் தீரும்வரை அவ்வாறு செய்ய சொல். உடல் நிலை சரியாகிவிடும். நம்பிக்கையுடன் பாபாவை வணங்கி உதியை வைத்துக்கொணடால் அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என கூறி அனுப்பினேன். அவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்ததால் வீட்டிற்கு சென்றதும் தன் தாயாருக்கு நெற்றியில் உதியை வைத்து உடன் நீரில் கலந்தும் கொடுத்துள்ளார். காலை எழுந்த அப்பெண்மணி நான் இப்போது நன்றாக இருக்கிறேன். புறப்படுங்கள் ஊருக்கு போகலாம் எனக்கூறி உதி நீரை அருந்திவிட்டு, படுத்துக்கொண்டே ஊரில் இருந்து வந்தவர் காரில் அமர்ந்தபடியே, வழியில் உணவருந்தி விட்டு பத்திரமாக ஊர் சென்று சேர்ந்தார்கள் என்ற செய்தி கிடைத்தது. பாபாவின் அருளும், அவர் உதியின் மகத்துவமும் அளவிடமுடியாதது. ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
இறைவன் யார்? இறைவன் என் பவன் ஒரு படைப்பாளி. இந்த உலகம் உறுவாக ஒரு சக்தி காரணமாக இருந்தது. அந்த ஒரு சக்தியே இறைவனாக வணங்கப்படுகிறது. இறைவனை பலரால் பல ரூபங்களில் வணங்கப்பட்டு வருகிறது. எவ்வளவோவிஷயங்களை அறிந்து கொண்ட நம்மால், பிறப்பையும், இறப்பையும் அறிந்து கொள்ள இயலவில்லை. நம்மில் இறை வழிபாடு என்பது அதிக பட்சம் ​ இயற்கையோடு இனைந்ததாகவே உள்ளது. இவ்வுலகம் உறவாக எந்த சக்தி காரணமாக இருந்ததோ அந்தசக்தியால் படைக்கப்பட்ட இயற்கை சார்ந்த சக்திகளாகிய. காற்றை வாயு பகவான் என்றும், மழையை வருணபகவானாகவும். உணவை அன்ன லட்சுமியாகவும்,வணங்குகிறோம் இவை மூன்றும் இல்லாமல் எந்த உயிரினமும் இவ்வுலகில் வாழ இயலாது. படைத்தல், காத்தல், அழித்தல் எனஅதற்கான தெய்வங்களாகவும். சக்திக்கென ஒரு சக்தியையும்.உடம்பில் சக்தி இல்லாமல் நம்மால் அசைய முடியாது. அறிவுசார்ந்த கல்விக்கானதை சரஸ்வதியாகவும். இன்றியமையாத தேவையான பணம் பொருள் ஆகியவற்றை லட்சுமியாகவும். குழந்தை பாக்கியம் முதல் நமது அத்தியாவசிய தேவைகளின் அடிப்படையில் அஷ்ட லட்சுமிகளாகவும் ஊர் காவலுக்கென ஒரு தெய்வமும், ஒவ்வொரு மனிதனுக்கும் அவனை தொடர்ந்து வரும் சந்ததிக்காக குலதெய்வம் என்றும், அந்த ஒரு சக்தியால் படைக்கப்பட்ட உயிர் வாழ் வதற்கான அத்தியாவசிய இயற்கை சார்ந்த தெய்வங்களை வழிபடுவதன் மூலமாக அந்த மூலப் பொருளாகிய படைப்பின் சக்தியை வழிபடுவது தான். இறை வனை வழிபடுதல் ஆகும். சில சமயங்களில். இவ்வுலகை நல வழிப்படுத்த அந்த சக்தியால் படைக்கப்படும், படைப்பாளிகளாகிய இறைவழித்தோன்றல்களையே நாம், குருமார்களாக ஏற்கிறோம். அவ்வாறு படைக்கப்படுபவர்கள் யாரும் தங்க ளை இறைவன் என்று கூறிக்கொள்வதில்லை. அவ்வாறு படைக்கப்படும் குருமார்களை வணங்குவதன் மூலமாகவும் படைப்பின் சக்தியாகிய இறை அருளை பெறலாம். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.
சாய் ராம். நான் இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாளை வியாழக்கிழமை பாபாவுக்கு உகந்தநாள். நான் நமது கத்திரிச்சேரி தென் சீரடி பாபா கோவில் சென்று பாபாவை வேண்டி மழைக்காகவும், நம் பக்தர்களுக்காகவும்வேண்டுதல் வைக்கிறேன். நாளை நம் சாய் பக்தர்கள் அனைவரும் அவரவர்கள் இருந்த இடத்திலேயே. மழைவேண்டிபாபாவிடம் பிரார்த்தனை செய்யுமாறும், அவ்வாறு பிரார்த்தனை செய்யப்பட்டதை, நமது குரூப்பில் பதிவிடுமாறும். ஒரு வாரத்திற்குள் மழை பெய்ய பாபா விடம் வேண்டி அவர் அருளால் அனைத்தும் நன்கு நடக்கவும், இறையருள் கிடைக்க வேண்டுவோம். ஜெய் ஜெய் சாய் ராம்.

Miracle : 44

சாய் ராம். இன்று வியாழக்கிழமை . கத்திரிச்சேரி தென் சீரடி சாய் பாபா கோவிலில். 12 முதல் 12.30 வரை உள்ள ஆர்த்தி நேரத்தில் பாபாவிடம் மழை வேண்டி பிரார்த்தனை செய் தோம். தற்போது வீடு வந்து சேர்ந்ததும், இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. பாபாவின் பாதத்தில் நம் நன்றியை காணிக்கையாக்குவோம். நன்றிபாபா. ஜெய் ஜெய் ​ சாய் ராம். Miracle... தொடரும். Sai Prakash. Cell:9884992226.
சாய் ராம்.............. பாபாவின் அறிவுரை. பாபாவிடம் ஒருவர் வந்தார், வந்தவர் பாபா, தங்களிடம் எது கேட்டாலும் கிடைக்கும் என்று சொன்னார்கள். எனக்கு பொன்னும், வைரம், வைடூரியம் இவை எல்லாம் நிறைய வேண்டும். என கேட்டார். உடனே பாபா அங்கிருந்த ஒரு அறையை காட்டி நீ கேட்டதெல்லாம் அந்த அறையில் உள்ளது. உனக்கு எவ்வளவு தேவையோ அதை உன் கை நிறைய அள்ளி வா. என்று சொல்லி அனுப்பினார். அவனும் அங்கு சென்று கதவை திறந்தவுடன், அந்த அறை முழுவதும், தங்கம், வைரம், வைடூரியம் நிறைந்திருந்தது. அவனும் தன் கைகளில் எந்த அளவுக்கு அள்ள முடியுமோ அந்த அளவுக்கு அள்ளிக்கொண்டு பாபாவிடம் வந்தான். அவ்வளவு நகைகளைமொத்தமாகபார்த்தவனுக்கு, உடம்பு, கை, கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அந்த நடுக்கத்தில் அவன் கையில் இருந்த பொருட்கள் நழவி, நழுவி கீழே விழ ஆரம்பித்தன. பாபாவின் அருகில் அவன் வரும் போது மகவும் சிறிய அளவே அவன் கையில் இருந்தது. அவன் பாபாவிடம் பாபா எல்லாம் வழியிலேயே கொட்டி விட்டது. என்று கூறினான். பாபா சிரித்துக்கொணடேஉனக்கு என்ன சேர வேண்டுமோ அது உன் கையில் உள்ளது என்று கூறினார். கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறியது போல உனக்கென்று என்ன கிடைக்க வேண்டுமோ அதை யாராலும் தடுக்க முடியாது. அது போல உனக்கு எது கிடைக்க கூடாதோ. அதை யாரும் உனக்கு கொடுக்கவும். முடியாது என்பது உண்மை ஆயிற்று. ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.
ஜெய் சாய் ராம். நாம் பாபாவிடம் வைக்க வேண்டிய முக்கியமான வேண்டுதல்....... வியாதிகளில் மிக கொடிய வியாதி பொறாமை. மனித உடலில் ஏற்படும். வியாதிகளை, மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு குணப்படுத்தி விடலாம். பொறாமை எனும் வியாதி மனது சம்மந்தப்பட்டது.எப்போதும் நம் மனது நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். யார் மீதும் பொறாமை ஏற்பட்டு விடாமல் இருக்க பாபாவிடம் தவராமல் வேண்டுதல் வைக்கவேண்டும். மற்றவர்கள் வளர்ச்சியைபார்த்து. நாம் பொறாமைபட்டால். நம்முடைய வளர்ச்சி தடைபடும். நம் வளர்ச்சிக்கான. சிந்தனையை நாம் இழக்க நேரிடும். இதனால் நம் வளர்ச்சிதடை பட்டுவிடும். நாம வளர்ச்சி அடையவேண்டிய நேரத்தை நாம் இழந்து விட்டால் மீண்டும் அப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு அமைவது அரிது. நாம் பொறாமை படுவதால் தன் முயற்ச்சியால் முன்னேற நினைக்கின்ற யாருடைய வெற்றியும் தடைபடப்போவதில்லை. ஆனால் பொறாமை ஏற்படுவதால். நமது முன்னேற்றத்தை நாம் இழந்து விடுவோம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. எனவே இனியாவது. பாபாவின் காலைப்பிடித்து. பொறாமை எனும் வியாதி நம்மை பீடித்து விடாமல், நம் முன்னேற்றத்தில் நாம் கவனமாக இருப்போம். இதை உணருபவர்கள் நிச்சயம் பாபாவின் அருளால் தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.
சாய் ராம். வசதியோடு வாழும் பணக்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த ஜென்மத்தில் இவ்வாறு உயர்ந்த நிலையில் உம்மை படைத்த பாபாவிற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த ஜென்மத்தில் உம்மோடு பிறந்து உண்ண உணவில்லாமல், உடுக்க உடை, இல்லாமல் தங்க இடமில்லாமல் வாழ்நாள் முழுவதும் இப்படியே வாழ்ந்து உயிர்விடும் மக்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? இனியாவது உங்களால் முடிந்ததை அந்த மக்களுக்கு செய்யுங்கள். ஏனெனில் அடுத்த ஜென்மத்தில் நீங்களும் அவர்கள் நிலையில் பிறக்கலாம் அப்போது உங்களை கைதூக்கிவிட யாரோனும். வேண்டுமல்லவா? சிந்தியுங்கள். நீங்கள் செய்வது பாபாவுக்கு செய்வது போன்றது. ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.
இந்த உலகம் முழுவதும் பாபாவின் பிடியில். ஆனால், பாபாவோ நம் இதயத்தில். இதைவிட வேறென்ன வேண்டும் நமக்கு. பாபா ஒரு முறை தன்னெதிரில் ஆடு ஒன்றை நிற்க வைத்திருந்தார். அவரை சுற்றிஅவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நின்று இருந்தனர். அவர்களில் ஒருவரை அழைத்து அந்த ஆட்டை வெட்டுமாறு பணித்தார். அவர் அந்த ஆட்டை வெட்டாமல் அமைதியாக இருந்தார். ஆட்டை வெட்டினால் தப்பாகி விடுமோ, எதற்காக பாபா இவ்வாறு கூறுகிறார். என நனைத்து குழம்பினார். பிறகு பாபா ஒவ்வொருவ ராக அழைத்து அந்த ஆட்டை வெட்ட சொன்னார். முதல் நபரை போலவே அனைவரும் எண்ணியதால் யாரும் அந்த ஆட்டை வெட்ட முன் வரவில்லை. இறுதியில் ஒரு பிராமணர் மட்டும் இருந்தார். பாபா அவரிடம், அந்த ஆட்டை வெட்டச்சொன்னார். உடனே அவர் எந்த பதிலும் சொல்லாமல் கத்தியை எடுத்துச்சென்று ஆட்டை வெட்டுவதற்காக கையை ஓங்கியபடி வெட்ட போனார். அப்போது பாபா நிறுத்து. என்றார். பிறகு, நீ ஒரு பிராமணன் அல்லவா ஆட்டை வெட்டுவது பாவம், அது தவறு என்று உனக்கு தெரியவில்லையா? என்று கேட்டார். அந்த பிராமணர் மிக அமைதியாக தன்னடக்கத்துடன். பாபா என்னை இந்த பணியை செய்ய சொன்னது என் குருவாகிய சாய் அல்லவா, நான் எப்படி செய்யாதிருப்பேன் என்றார். இதன் மூலம் குரு பக்தி என்றால் என்ன என்பதை அனைவரும் உணரும் படி யாக செய்தார் பாபா. ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.

Miracle : 45

பாபாவின்வருகை.. இன்று பாபாவின் 45வது அற்புதம். 45.ன் கூட்டு எண் 9 ஆகும் பாபாவுக்கான எண். 9.என்பதால் ஒரு முக்கியமான அற்புதத்தை பதிவு செய்கிறேன். ஒரு நாள் பாபா என்னிடம், நான் ஒருநாள் கத்திரிச்சேரி யில் உள்ள தென் சீரடி சாய் பாபா கோவிலுக்கு நேரில் வருவேன். அப்படி வரும் போது, நான் தான் வந்திருக்கிறேன், என்பதை நீ அறிந்து கொள்ளும் படியாக நடந்து கொள்வேன், என கூறினார். இவ்வாறு அவர் கூறியது நிச்சயமாக நடக்கும் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். பாபா தன் பக்தர்களிடம், ஒவ்வொரு ஜென்மத்திலும் யார்யாரெல்லாம் என்னுடன் தொடர்பில் இருந்தார்களோ அவரகள் மட்டுமே இந்த ஜென்மத்தில் என்னிடம் வர முடியும். எந்த நேரத்தில் என் பக்தர்கள் என்னிடம் வர வேண்டுமோ, அந்த நேரத்தில் குருவி காலில் நூலை கட்டி இழுப்பது போல் என்னை நோக்கி இழுத்து விடுவேன் என கூறியுள்ளார். இதிலிருந்து அனைத்து ஜென்மங்களிலும்பாபா வாழ்ந்துள்ளார், என்பதை அவரே கூறியுள்ளதை அறிய முடியும். இதன் மூலமாக பாபா இந்த நூற்றாண்டிலும் இவ்வுலகின் ஏதோ ஓரிடத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார், என்பதை என்னால் உணர முடிகிறது. அதனால் நிச்சயமாக பாபா கோவிலுக்கு வருவார் என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். எப்போது அவர் வருவார் என்பதை அவர் மட்டுமே அறிவார். அவர் வருகையை எதிர் நோக்கி நான் என்றென்றும் காத்திருப்பேன். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.

Miracle : 46

ஒரு நாள் எனக்கு ஒரு போன் வந்தது. மறு பக்கம் இருந்து பேசியவர். தங்களை நேரில் பார்த்து பேச வேண்டும். எப்போது வந்தால் தங்களை பார்க்கலாம் என கேட்டார்கள். அவர்கள் பேசியதில் ஒரு சந்தோஷம் இருந்ததை என்னால் உணர முடிந்தது. நாளை வாருங்கள் பேசலாம் என்று சொல்லி விட்டேன். அடுத்த நாள் சொன்னபடி அவர்கள் வந்தார்கள். வந்தவர்கள் என்னிடத்தில், நாங்கள் தி. நகரில் ஒரு துணிக்கடை திறக்க உள்ளோம். அந்த கடையை தங்கள் கையால் தாங்கள் வந்து திறந்து வைக்க வேண்டும் என கேட்டார்கள். இது நல்ல விஷயம் தானே. நல்ல விஷயங்கள் எல்லாவற்றிற்கும், நான் முன் நிற்பேன். நிச்சயம் நான் வருகிறேன் எனறு சொல்லி விட்டேன். பிறகு கடையை திறந்து வைக்க என்னை அழைக்க வேண்டிய அவசியம் என்ன வென்று கேட்டேன். அப்போது அந்த பெண்மணி சொன்னார். நான் என்வீட்டில் வைத்து எனக்கு தெரிந்தவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் புடவை வியாபாரம் செய்து வந்தேன். எனக்கு நீண்ட நாட்களாக ஒரு துணிக்கடை வைக்க வேண்டுமென ஆசை. ஒருநாள் கருங்குழி அருகில் கத்திரிச்சேரி பாபா கோவிலுக்கு வந்திருந்த போது. துணிக்கடை வைக்க வேண்டும் என்ற என்ஆசையை பாபாவிடம் வேண்டுதலாக வைத்தேன். அடுத்த ஒரு மாதத்திற்குள் தி. நகரில் எங்களுக்கு ஒரு கடை கிடைத்து விட்டது. அன்றே நானும் என் கணவரும் உங்கள் கையால் தான் அந்த கடையை திறக்க வேண்டும் என முடிவு செய்து விட்டோம். அதனால் தான் உங்களை அழைக்க வந்தோம் என தெரிவித்தார்கள் அதன் பிறகு மிக சிறப்பாக அந்த கடை திறப்பு வைபவம் நடந்தேறியது. பாபாவின் அருளன்றி யாரால் அற்புதங்களை சாதிக்க இயலும். ஜெய் ஜெய் சாய் ராம். Miracle...தொடரும்.. Sai Prakash. Cell:9884992226.
மணி எனும் சாய் அன்பர்க்கு பாபா அளித்திட்ட கோவில் கட்டும் பணிக்காக மனமுவந்து அளித்திட்ட வாழ்த்து. பாபாவின் திருப்பணியை பக்குவமாய் துவங்கி, முயன்று முடித்திட, முயற்சிகள் பல மேற்கொண்டு பக்கபலமாய்இருப்போரை அதற்குள்ளே இணைத்து. மணி, மணியாய் திருப்பணியை மனமுவந்து முடித்திடவே, பாபாவின் துணை உண்டு பயமேதும் இல்லை இனி, நன்றியுடன் பாபாவை நினைத்தாலே நலம் பெருகும் இப்பூவுலகில் இனி உமக்கே. ஜெய் ஜெய் சாய் ராம்.

Miracle : 47

நமக்கு நல்லது செய்ய பாபாவை தவிர வேறு யார் இருக்காங்க? ஒரு நாள் ஒரு பெண்மணி எனக்கு போன் செய்தார். அந்த எண் எனக்கு அறிமுகம் இல்லாத எண்ணாக இருந்தது. என்னுடைய எண் எப்படி கிடைத்தது எனக்கேட்டேன். என் உறவினர் ஒருவர் இந்த எண்ணை கொடுத்து உங்களை தொடர்பு கொள்ள சொன்னார்கள். என்று கூறினார். சரி சொல்லுங்கள் என்றேன். அப்பெண்மணி சொன்னார். சாய் ராம் எனக்கும் என் கணவருக்கும் எப்போது பார்த்தாலும் சண்டை வந்து கொண்டே இருக்கிறது. மனதில் நிம்மதி இல்லை. எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. அவ்வப்போது எங்கள் குழந்தையின் எதிரிலேயே நாங்கள் சண்டை போடுவதால் எங்கள் குழந்தையின் எதிர் காலம் பாதிக்கப்படும் என்று கவலையாகவும் உள்ளது. இதற்கு நீங்கள் தான் ஒரு தீர்வு சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவரிடம் நாளை உங்களுக்கு பதில் சொல்கிறேன், எனக்கூறிவிட்டேன்அன்று மாலை பூஜையின் போது போது பாபாவிடம் அப்பெண்மணியின் குடும்பத்திற்காக வேண்டிக்கொண்டேன். அப்போது எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. அடுத்த நாள் அப்பெண்மணி மீண்டும் போன் செய்தார். நான் அவரிடம் கேட்டேன். உங்களுக்கு கோபம் அதிகமாக வரும் என்று பாபா சொல்கிறார். உண்மையா? என்று கேட்டதும். அது உண்மைதான் என அவர் ஒப்புக்கொண்டார். நான் அவரிடம் நாளை முதல் உங்கள் கணவர் சண்டைக்கு வந்தால் நீங்கள் எதுவுமே பேச வேண்டாம். சாய்ராம், சாய்ராம் என்று மட்டும் சொல்லி உங்கள் கோபத்தை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். சாய்ராம் என்ற வார்த்தைக்கு அந்த சக்தி உள்ளது. அது உங்களுக்கு நல் வழிகாட்டும் என கூறினேன். ஒரு மாதம் முடிந்து அவரிடமிருந்து மறுபடியும் போன் வந்தது. சாய் ராம் இபபொழுதெல்லாம், எங்களுக்குள் எந்த சண்டையும் வருவதில்லை. என் கோபம் எல்லாம் அடங்கிவிட்டது. நிம்மதியாக இருக்கிறோம் எனக்கூறினார். சாய் ராம் என்ற சொல்லுக்கான அற்புதம் என்ன என்பதை உணர முடிகிறதா? ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.
அமைதியாகவும், பொறுமைமையாகவும், இருங்கள் உங்களுக்கான நேரம் வரும் போது, உங்கள் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும்.சாய் பாபா. Sai Prakash. Cell :9884992226.

Miracle : 48

சாய் ராம். நான் ஒவ்வொரு அற்புதங்களை எழுதும் போதும் அதில் சம்மந்தப்பட்ட நபர்களை பற்றியும் அல்லது அவர்களின் குடும்பத்தை பற்றிய தகவல் எதுவும் குறிப்பிடுவது இல்லை. பாபாவின் அற்புதங்களை பதிவிடுவது மட்டுமே என் பணி. இதில் சம்பந்தபட்ட நபர்களும் இப்பதிவை படிப்பார்ளாதலால், இது தம்மை பற்றிய பதிவுதான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் அது போதும் எனக்கு. பாபாவின் பக்தையாகிய ஒரு பெண்மணி ஓரிடத்தில் பணி செய்து வந்தார். அவர்பணி புரியுமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவறை தெரிந்தோ, அல்லது தெறியாமலோ யாராவது மூன்று முறை செய்தால் மூன்றாவது முறை உடனடியாக பணி நீக்கம் செய்து விடுவார்கள்.இது அன்றே நடந்து விடும். இப்பெண்மணி எனக்கு போன் செய்தார். தான் பணியில் தவறேதும் செய்யாத நிலையில் என்னை இன்றே பணியில் இருந்து நீக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எனக்காக பாபாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என அழுதபடி கேட்டுக்கொண்டார். அவருக்காக நான் பாபாவிடம் வேண்டிக்கொண்டேன். அவருக்கு போன் செய்து, உங்கள் பேரில் எந்த தவறும் இல்லை. என்பதை எழுத்து பூர்வமாக எழுதிக்கொடுத்துவிட்டு, அமைதியாக இருங்கள் பாபா பார்த்துக்கொள்வார். எனக்கூறினேன். அவரும் அவ்வாறே செய்தார். அவர் எழுதிக்கொடுத்ததை,பெற்றுக்கொண்டு நீங்கள் எழுத்து பூர்வமாக கொடுத்ததால்இதை இயக்குநருக்கு அனுப்பி வைக்கிறோம். அவர் முடிவே இறுதியானது என்று தெரிவித்து விட்டார்கள். அந்நிறுவன இயக்குநருக்கு அனுப்பப்பட்டது. அடுத்த நாள் மதியம்எனக்கு போன் வந்தது. அப்பெண்மணி தான் போன் செய்தார். தான் எழுதிக்கொடுத்த பதிலை ஏற்றுக்கொண்டு என் மீது எந்த தவறும் இல்லை என முடிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என மிக சந்தோஷமாக கூறினார். இது பாபாவின் அற்புதம் அல்லவா? ஜெய் ஜெய் சாய் ராம். அற்புதம்..தொடரும்Sai Prakash. . Cell:9884992226

Miracle : 49

ஒரு தாயின் கண்ணீருக்கு பாபா செய்த அற்புதம். பாபாவின் அற்புதம் அறியாத பக்தர்கள் ஒருவராவது உண்டா? ஒரு நாள் ஒரு தாய் எனக்கு போன் செய்தார். அவரது மகளுக்கு திருமணமாகி வெளி நாட்டில் தன் கணவருடன் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. வாழ்க்கை நல்ல விதமாகவே சென்று கொண்டிருந்து, இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் பிரிந்து தனித்தனி வீட்டில் வசிக்க துவங்கினர். குழந்தைகளையும் தாயிடம் இருந்து பிரித்து தந்தை அழைத்து வந்து விட்டார். இதற்கெல்லாம் காரணம் மணமகனின்தாய் தந்தையே என்று அந்த தாய் கூறினார். மேலும் உங்கள் மகள் மன நலமில்லாமல் இருக்கிறாள். அவளை வந்து நீங்கள் அழைத்துச்சென்று அவளுக்கு வைத்தியம் செய்யுங்கள், எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இவர்களது மகளும் மூன்று மாதங்களுக்கு மேலாக தன் தாய் தந்தையரிடம் பேசுவதில்லை. எங்கள் மகள் எங்கே இருக்கிறாள். எப்படி இருக்கிறாள் என்ற விவரமும் எதுவும் எங்களுக்கு தெரியவல்லை. எனவே. நீங்கள் தான் பாபா விடம் வேண்டிக்கொண்டு எனக்கு நல்ல பதில் சொல்ல வேண்டும். என கேட்டுக்கொண்டார். பாபாவிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது. பிறகு அவரிடம் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. அவர்களது கர்மாவின்படி அவர்கள் இருவரும் தற்போது பிரிந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. கர்ம பலன் முடிந்த தும் மீண்டும் கணவன் மனைவி அவர் தம் குழந்தைகளுடன் ஒன்றாக இனைந்து வாழும் காலம் வெகு விரைவில் உறுவாகும் எல்லாம பாபா பார்த்துக்கொள்வார் கவலைப்பட வேண்டாம் என தெறிவிக்கப்பட்டது. அடுத்த ஒருவாரத்தில் அவரது மகள் தன் தந்தையை தொடர்பு கொண்டு நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எதற்கும் கவலைப்படவேண்டாம் அவருடைய அம்மா, அப்பா எது சொன்னாலும் நீங்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள லேண்டாம் என மிக தெளிவாக தெரிவித்துள்ளார். இது பாபாவின் அற்புதத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும். இதை எனக்கு தெறிவித்த அந்த அம்மாவின் சந்தோஷம் அளவிட முடியாதது. நாம் அனைவரும் அவர்களின் கர்மாவை பாபா ஒன்று மில்லாமல் செய்து அந்த பெண்ணை தன் கணவருடனும், குழந்தைகளுடனும் ஒன்றாக இணைந்து நல்வாழ்வு வாழ பிரார்த்தனை செய்வோம். ஜெய் ஜெய் சாய் ராம். Sai. Prakash. Cell:9884992226

Miracle : 50

நாம் நினைப்பதை நடத்திடும் பாபா. ஒரு பெண்மணி போன் மூலம் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தான் ஒரு நிறுவனத்தில் பணி புரிவதாகவும். நன்கு பணிபுரிந்து வந்த நிலையில். பணி நிமித்தம் காரணமாக தனது குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலையில் திடீரென பணியில் இருந்து விலகுவதாக எழுதிக்கொடுத்துவிட்டார். வேலையும் கண்டிப்பாக பார்த்தாக வேண்டிய சூழ்நிலை. ஏற்கெனவே வேலை பார்த்த இடத்தில் பணியில் இருந்து விலகுவதாக எழுதிக்கொடுத்து விட்டதால். வேறு இடங்களில் வேலை தேடி எங்கும் கிடைக்கவில்லை. தான் வேலை செய்த இடத்திலேயே, மீண்டும் கேட்டு பார்க்கலாமா என்ற நிலையில் எனக்கு போன் செய்து, தாங்கள் பாபாவிடம் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார் அப்பெண்மணியின் கோரிக்கைகளுக்காக பாபாவிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது. மீண்டும் இரண்டு தினங்களுக்கு முன் அப் பெண்மணி போன் செய்து. சாய்ராம். எந்த நிறுவனத்தில் நான் மீண்டும் தொடர்ந்து வேலை செய்ய கேட்கலாம் என நினைத்தேனோ, அவர்களே எனக்கு போன் செய்து நீங்கள் வேலை வேண்டாம் என எழுதிக்கொடுத்ததை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். இங்கேயே வந்து தொடர்ந்து பணிபுரியங்கள் என என்னை க்கேட்டுக்கொண்டார்கள். இது பாபா எனக்கு செய்த அற்புதம். மேலும் என் குழந்தைகள் இருவரும் நான் பணியில் இருந்து திரும்ப வருவதற்குள் இன்றைய பாடத்தை அம்மா வருவதற்குள் முடித்து விட்டோம் என்று கூறுகிறார்கள். நான் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டேன் சரியாக பதில் சொல்கிறார்கள். என்று சொல்லி சந்தோஷப்பட்டார்கள். இவை பாபாவின் அற்புதம் அல்லவா? அப்பெண்மணியின் குடும்பத்தில் மேன் மேலும் நல்லவை நடக்க நாம் அனைவரும் பாபா விடம் பிரார்த்தனை செய்வோம். ஜெய் ஜெய் சாய் ராம். Miracle....தொடரும். Sai. Prakash. Cell:9884992226.
சாய்ராம். குரு பூர்ணிமா வைபவம் 15.07.2019,திங்கட்கிழமை.நமது கத்திரிச்சேரி தென் சீரடி சாய் பாபா கோவிலில் கருங்குழி ரயில் நிலையம் அருகில், (கருங்குழி, சென்னையில் இருந்து வரும் போது மதுராந்தகத்திற்குஇரண்டு கிலோ மீட்டர் முன்பாக உள்ளது.) மிக சிறப்பாக கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி நடைபெற உள்ளது. நாள்:15.07.2019.
​ திங்கட்கிழமை.
1.காலை 10.00 மணிக்கு அபிஷேகம்.
2.மதியம். 12.00 மணிக்கு ஆரத்தி.
3.தொடர்ந்து 12.30 மணிக்கு அன்னதானம்.
பாபாவின் அனைத்து பக்தர்களும்,தவறாது கலந்து கொண்டு எல்லா நலங்களும் பெற பாபாவின் அருளை பெறுமாறுஅனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
Sai Prakash. Cell:9884992226.
சாய்ராம். உங்களிடம் பாபா பற்றிய ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எங்கள் வீட்டின் ஒரு பகுதியில் திடீரென சந்தன வாடை கம கம வென வீசும் சில நேரங்களில் பூஜை அறையிலும், சில நேரங்களில் ஹா லிலும், சில நேரங்களில் அடுப்படியில் இவ்வாறு வாசனை தெரியும், சில நேரங்களில் சாம்பிராணி வாசனையும் உணரலாம் அப்போது அங்கு பாபா இருப்பதை அறிந்து கொள்ளலாம். இதுவே பாபா நம் வீட்டில் இருக்கிறாரா என்பதை அறிந்து கொள்வதற்கான ரகசியம். அந்த நேரத்தில் எங்கள் வீட்டிற்க வருபவர்களும் கூட இதை உணர்ந்து எங்களிடம் தெரிவித்துள்ளனர்.ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell: 9884992226
சாய் ராம். பாபாவை வணங்கும் பக்தர்கள். அவரால் அற்புதத்தை உணராதவர்கள் ஒருவர் கூட கிடையாது. அது போலவே பாபாவிடம் கோரிக்கை வைக்காதவர்களும் ஒரு பக்தரும் இல்லை. என் பக்தர்களை உரிய நேரத்தில் குருவி காலில் நூலை கட்டி இழுப்பது போல இழுத்து விடுவேன். என்று கூறி இருப்பது, ஒவ்வொருவர் வாழ்விலும், அற்புதங்களை நிகழ்த்தி அவர்களை தன்னை நோக்கி இழுப்பது தான். குருவி காலில் நூலை கட்டி இழுப்பது போல இழுத்துவிடுவேன் என்பதன் பொருள் போலும். பாபாவிடம் கோரிக்கைகளை வைக்காதவர்கள் ஒருவர் கூட இருக்க முடியாது. ஆனால் கோரிக்கைகள் நிறைவேறியதும் பல பேர் அதை நினைத்து பாபா விற்கு நன்றி சொல்லி அவர் பாதம் பணிவதில்லை.இதை பாபாவே சொல்கிறார். ஆனால் அடுத்த கோரக்கைக்காக அவரிடம் வேண்டுதல் வைக்கிறார்கள். ஆனால் பாபா இத தற்காக யாரையும் தண்டிப்பதில்லை. (என்றுமே "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று") மீண்டும் அவர்களுக்கு பாபா நல்லதே செய்கிறார். ஜெய் ஜெய் சாய் ராம். Sai. Prakash. Cell:9884992226.

Miracle : 51

நம்பியவர் குடும்பத்தை பாதுகாக்கும் பாபா. ஒரு நாள் கத்திரிச்சேரியில் உள்ள நமது தென் சீரடி சாய் பாபா கோவிலுக்கு பாபாவின் பக்தர் ஒருவர் தன் குடும்பத்தினருடன், தனது சகோதரி குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார். முன் கூட்டியே ​ அவர் கோவிலுக்கு வர என்னிடம் கேட்டிருந்ததால். அந்த குறிப்பிட்ட தினத்தில் நானும் என் குடும்பத்தினருடன் வருவதாக்கூறி, அவர்களையும் வருமாறு அழைத்திருந்தேன். அனைவரும் வந்தவுடன். மதியம் 12.00மணி ஆரத்தி துவங்கப்பட்டது. பாபா கோவில் கட்டும் பணிக்காக,இரண்டு குடும்பத்தினரும் ரூபாய் எண்பதாயிரம் வரை காசோலை யாக கொடுத்தார் கள். பின்னர் இரண்டு மணி நேரம் வரை கோவிலில் இருந்துவிட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டோம். நான் வீட்டிற்கு வந்ததும் அந்த பக்தரிடமிருந்து எனக்கு போன் வந்தது. சாய்ராம் நாம் கோவிலில் இருந்த நேரத்தில் என் சோதரியின் வீட்டில் பின் பக்க கதவை உடைத்து திருடன் வந்துள்ளான். அவர்கள் கோவிலில் இருந்து வந்து பார்த்தவுடன், தெரிந்தது. உடனே எனக்கு போன் செய்தார்கள் என்று கூறினார். அப்படியா? எனக்கேட்டுவிட்டு, சரி நான் பேசுகிறேன் என்று சொல்லி போனை வைத்து விட்டேன். பிறகு பாபாவிடம் நம் கோவிலுக்கு வந்தவர்களுக்கு இப்படி ஆகி விட்டதே ஏன் பாபா என வேண்டினேன். பிறகு பக்தரின் சகோதரி வீட்டிற்கு போன் செய்து பாபா மூலமாக அவர்களுக்கு நான் சொன்னது. அந்த இரண்டு மணி நேரத்தில் நீங்கள் வெளியில் இருந்திருந்தால், உங்கள் குடும்பத்திற்கு பெரிய ஆபத்து காத்திருந்தது அதில் இருந்து உங்களை காக்கவே கோவிலிலேயே அமர வைத்தார். திருடனையும் விரட்டி விட்டார் என்று கூறினேன். அதன் பிறகு அவர்கள் கூறினார்கள். ஒரு செட் தோடு மட்டும் திருடு போய் உள்ளது. வீட்டில் நகைகள் உள்ளது. கம்ப்யூட்டர் உள்ளது TV முதலானவையும் உள்ளன. இவை அனைத்தும் அப்படியே உள்ளது. ஒரு தோடு மட்டுமே திருடப்பட்டுள்ளது. நீங்கள் சொல்வது கேட்டால் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது என்று சொன்னார்கள்.அவர்கள் பாபாவின் பக்தர்கள் என்பதால், பாபா, அவர்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தில் இருந்து காக்க இரண்டு மணி நேரம் தம் மருகில் கோவிலிலேயே இருக்க வைத்து, வீட்டிற்கு வந்த திருடனையும் இவர்களின் கர்மா தொலைய தோடு மட்டும் எடுக்க வைத்து வேறு எதையும் எடுக்க விடாமல் அவனை துரத்தி அடித்துள்ளார். இது எவ்வளவு பெரிய அற்புதம். அவர்கள் குடும்பமும் அவரது சகோதரர் குடும்பமும் எந்த குறையும் இல்லாமல் வாழ பாபா விடம் நாம் அனைவரும் ஒரு நிமிடம் வேண்டுதல் வைப்போம். Miracle...தொடரும்ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.
சாய் ராம்.நேற்று 15.07.2019 நமது கத்திரிச்சேரி தென் சீரடி சாய் பாபா கோவிலில் குருபூர்ணிமா வைபவம் மிக சிறப்பாக நடந்தேறியது. அப்போது அன்னதானமும் நிறைவாக வழங்கப்பட்டது. தொடர்ந்து. கத்திரிச்சேரி அருகில் உள்ள முன்னுத்திக்குப்பம் எனும் கிராமத்தில் எட்டாவது வகுப்பு வரை உள்ள அரசு பள்ளியில் கிராமத்து குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும் என்று நினைத்து அவர்களை ஊக்குவிப்பதற்காக. 1 முதல் 8 வது வகுப்பு வரை முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தொகையாக ரூபாய் 1000 வீதம் வழங்கப்பட்டது. 2017-2018 ம் ஆண்டுக்கானது இப்பள்ளிக்கு தற்போது வழங்கப்பட்டது. இத்துடன் கத்திரிச்சேரி அரசு பள்ளி. மற்றும் தோட்டநாவல் அரசு பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கு மூன்றாண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. 2018-2019 வது ஆண்டுக்கான ஊக்கத்தொகை அடுத்த சில மாதங்களில் வழங்கப்பட உள்ளது. கத்திரிச்சேரி அரசு பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் மற்றும் ஆசிரியைகளுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் அவர்களுக்கான கழிப்பிடம் கட்டி வசதி செய்து தரப்பட்டுள்ளது.இது தவிர முன்னுத்திக்குப்பம் அரசு பள்ளியில் பெண் குழந்தைகளின் நலனுக்காக தையல் கற்கும் பொருட்டு தைய்யல் மெஷின் ஒன்றும் வாங்கி வழங்கப்பட்டுள்ளது. இவை யாவும் பாபாவின் அருளாசியோடு நடைபெறுகின்றன.ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell 9884992226.
சாய் ராம். பாபாவின் பக்தர்கள் அனைவருக்கும் தெரியும், பாபாவுக்கு யாரும் பட்டினியுடன் இருப்பது பிடிக்காது என்பது, அதனாலேயே அவர் அன்னதானத்தை ஊக்குவிக்கிறார்.நமக்கு அன்னம் அளிக்கும் தெய்வம் அன்னலட்சுமி. அன்னம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிவோம். நிலத்தில் விவசாயிகள் எந்த அளவுக்கு உழைக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பயிர் விளைந்தவுடன். நெல் அறுவடையின் போது, சில நெற் கதிர்கள் வயலில் உதிர்ந்துவிடும் அதில் தப்பி கலம் வந்து சேரும் நெல்மணிகள் அடித்து பிறிக்கும் போது சில நெல்மணிகள் சிதறி ஓடிவிடும் அதிலும் தப்பி மூட்டைகட்டும் போது சில நெற்கதிர்களை சிதறிவிடும், அதன் பிறகு நெல் அவிக்கும் போதும், நெல் காய வைத்து அள்ளும் போதும், பிறகு முட்டைகட்டி அரிசியாக பிரித்து, கடைகளுக்கு அனுப்பி, உலையில் அரிசி போடும் போது ,சாதம் வடிக்கும் போது என பல கட்டங்களில் தப்பி நம் இலைக்கு வந்த சாதம் நாம் சாப்பிடும் போது நம் வயிற்றுக்குள் சென்றவுடன்தான் அது பிறவிஎடுத்ததன் பலனை அடைகிறது. அதன் பிறவி பலனை அடைய நம் இலை வரை வந்த எவ்வளவு சாதத்தை அதை அடையவிடாமல் நாம் வீணடிக்கினறோம். சிந்தியுங்கள். இனி ஒரு சாதத்தைக்கூட வீணடிக்க மாட்டோம் என சபதம் ஏற்போம். மேலும் மேற்கண்ட அணைத்து நிகழ்வுகளையும் நமது வாழ்க்கையுடன், ஒப்பிட்டு அது போன்றதே நம் வாழ்க்கையின் நிலையும் என உணர்ந்து இனியாவது அண்ணபூரணி அன்னையின் அடிபணிவோம் ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.

Miracle : 52

சில நேரங்களில் பாபாவின் திருவிளையாடல்கள் மிக அசாத்தியமானதும். நம்ப முடியாததாகவும் இருக்கும். நான் ஏற்கெனவே பகிர்ந்துள்ளேன். பாபா திடீரென யாரேனும் ஒருவருக்கு என்னை போன் செய்து பேசுமாறு பணிப்பபார். அவர்களுக்கு அந்த நேரத்தில் பாபாவின் ஆறுதலான வார்த்தைகள் தேவைப்படும். பக்தர்கள் உடல் உபாதையினாலோ, அல்லது மனவேதனையுடனோ இருப்பார்கள். பாபா நேரடியாக அவர் களுடன் பேச முடியாதென்பதால், யார் மூலமாகவாவது,அவர்கள் மன அமைதி பெரும் பொருட்டு அவர்களுக்கான ஆறுதலான வார்த்தைகளை அவர்கள் பெற செய்வார். இன்று பாபா ஒரு பெணமணியிடம் என்னை பேச பணித்தார். நான் பேசியதைகேட்டதும் அப்பெண்மணி க்கு அதிர்ச்சியும், அழுகையும் வந்து விட்டது. என்னிடம் அவர்கள் சொன்னது. இன்று அவர் மிகவும் மன நிம்மதி இல்லாமலும், உடல் உபாதையாலும் மிகவும் மனம் நொந்து இன்றுமதியம் முழுவதும், பாபா வையே நினைத்தபடி அவரிடம் முறையட்டபடி இருந்துள்ளார். இந்நிலையில் எனது போன் வந்ததும், பாபாவே அவர்களுக்கு ஆறுதலாக அவர்களிடம் பேசி யதாக நினைத்து நெகிழ்ச்சியுடன் பாபாவிற்கு நன்றி தெரிவித்தார்கள். இது பாபா அவர்களுக்கு நடத்திய அற்புதம் அல்லவா? அப்பெண்மணி, உடல் நலம் பெறவும், மன அமைதியுடன் வாழவும்,நாம் அனைவரும் பாபாவிடம் அவருக்காக பிரார்த்தனை செய்வோம். ஜெய் ஜெய் சாய் ராம். ​ Sai Prakash. Cell:9884992226.
பாபாவினால் ஏற்பட்ட மனமாற்றமும், புது வாழ்வு பெற்ற நிகழ்வும். சாய் ராம். ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் மனிதர்களுக்கு ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் அந்த வயதில் ஏற்படுகின்ற உடல் மற்றும் மனமாற்றங்கள் காரணமாக ஈர்ப்புகள் ஏற்படுவது தவிற்க முடியாதது. அவ்வாறு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிடையே ஏற்பட்ட வரம்பு மீராத ஒரு அன்பு உருவானது. அது ஒருவர் மீது ஒருவர் கொண்ட ஆழமான அன்பு. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு தவிற்க முடியாத காரணங்களால் மற்றொரு இளைஞருடன் அவர் வீட்டாரின் விருப்பபடி திருமணம் நடந்தேறுகிறது. இருந்தாலும் நாம் அன்பு செலுத்திய அந்த மனிதரை ஏமாற்றி விட்டோம் என்ற மனவேதனை இருந்து கொண்டே இருந்தது. அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கிடைத்த வாழ்க்கையும் நிம்மதி யாக இல்லை. நமக்கு கிடைத்த நல்ல கணவருடனும் விரும்பி வாழாமல் அவரையும் கஷ்டப்பபடுத்துகிறோமோ என நினைக்கையில் அழுகையாக வந்தது. இந்தநிலையில் தான் சீரடி சாய்பாபாவை வணங்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றது. இந்நிலையில பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இருந்தாலும், அப்பெண்மணியின் மனநிலையில் மாற்றம் இல்லை பாபாவிடம் நம்மதிக்கான வழி கோரி வேண்டுதல் மட்டும் வைக்கப்பட்டு வந்தது. பிறகு பாபாவின், அற்புதத்தால். அன்பு கொண்ட நண்பருக்கும் திருமணமாகி தன் குடும்பத்தினருடன் நன்கு வாழ்ந்து வருவது தெரிய வநததும். மனம் அமைதியடைந்தது. பாபாவின் அருளால் பழைய விஷயங்களை மனதில் இருநது நீக்கி பாபாவின் அருளால் தன் குடும்பத்துடன் சநதோஷமாக வாழத்துவங்கினார். இத்தகைய நிலையை பாபா வைத்தவிர வேறு யாரால் உருவாக்கித்தர இயலும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.

Miracle : 53

ஒரு சகோதரி தனது மாமாவிற்கு மார்பு வலி காரணமாக சென்னையில் ஒரு பிரபல மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, நாற்பத்தி எட்டு மணி நேரம் சென்ற பிறகு தான் எதுவும் சொல்ல முடியும் என கூறிவிட்டார்கள். இந்நிலையில் அந்த சகோதரி என்னை தொடர்பு கொண்டு பாபாவிடம் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பாபாவிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது. தற்போது அவர் உடல் நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்து விட்டார் என்ற நல்ல செய்தி எனக்கு தெரிவிக்கப்பட்டது. இது பாபாவின் அற்புதம் அல்லவா? அந்த சகோதரி யின் மாமா நீடூழி வாழ நாம் அனைவரும் பாபாவிடம் வேண்டுதல் வைப்போம். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226

Miracle : 54

நேற்று 29.07.2019 பாபாவின் பக்தை ஒருவருக்கு பாபா போன் செய்ய பணித்தார். அவருடைய கோரிக்கை என்ன என்பதை கேட்க பணித்தார். அவரிடம் கேட்ட போது இன்று காலை பாபாவிடம் சில கோரிக்கைகளை வைத்து வேண்டியது குறித்து தெரிவித்தார். அவர் சொன்ன கோரிக்கைகள் குறித்து பாபாவின் பதில் என்னவாக இருக்கும் எனபதை அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அதை ஏற்றுக்கொண்டார். மேலும் அவர் தன் தாய், தந்தையரை தன்னுடன் வைத்து பராமரிக்க அருள்புரிய ஒரு வேண்டுதல், இது தவிர தன் வீட்டு காம்பவுண்ட்டுக்குள் ஒரு பாபா சிலை வைத்து அவருக்கு சேவை செய்யவும் அப்பகுயில் உள்ள அனைவரும் அவரை வணங்கி அருள் பெறவும், அருள் பாலிக்க க்கோரி ஒரு வேண்டுதல். தாய், தந்தையரை உடன் வைத்து காக்க வேண்டும் என்ற கோரிக்கை மிக உன்னதமானது. அந்த சேவையை யார் ஒழுங்காக செய்கிறார்களோ, அவர்கள் பாபாவை தேடி செல்ல வேண்டியதில்லை. பாபாவே அவர்கள் இருக்கும் இடம் தேடி வந்துவிடுவார். (பெற்ற தாய், தந்தையின் மனம் புண் படும்படி நடந்து கொண்டால் அதைவிட பெரிய பாவச் செயல் வேறெதுவு மில்லை.) இரண்டாவது பாபாவிற்கு கோவில் கட்டி,பாபாவிற்கு சேவை செய்யவும், அனைவரும் பாபாவின் அருளை பெறவும் அருள் பாலிக்க வேண்டியது. இது தன்னிகரில்லா சேவை. பாபா, இந்த கோரிக்கைகளை வைத்துத்தான், அவரிடம் பேச பணித்தார் போலும். பிறர்க்குதவி முற்பகல் நாம் செய்யின் பாபாவின் அருளால் நமக்குதவி பிற்பகல் தாமே நம்மைத் தேடி வரும். பாபா ஒவ்வொரு பக்தர் மீதும் தனித்தனியாக எவ்வளவு அக்கரை கொண்டுள்ளார் என்பதை இதன் மூலம் அறியலாம். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.
அல்லாஹ் மாலிக்.. இதோ உனக்கு மிக அருகில் நெருங்கி உனது வீட்டில் வந்து அமர்ந்துவிட்டேன். உங்கள் துன்பங்கள் முடிந்துவிட்டது. இன்பமயமான வாழ்க்கை இந்த நிமிடத்திலிருந்து ஆரம்பமாகிவிட்டது . ஆனந்தத்தைத் தரும் ஆனந்த சாயியாக உனதருகில் இருக்கிறேன் இந்த நிமிடம். இனி எல்லாம் சுகமே. நான் வாழும் உன் வீடு உனக்கு துவாரகமாயிதான் இனி.....உன் இல்லத்தில் இருள் நீங்கி வெளிச்சம் வந்துவிட்டது. சந்தோசமாக இருங்கள்.. ஓம் ஜெய் ஸ்ரீ சாய்ராம்... பாபா என்றால் அன்பு என்றும், அனைத்தும் உணர்ந்தவர் என்றும் அர்த்தம். பாபாவிடம் நாம் ஒரு கோரிக்கையை வைக்கும் போது. ஆரம்பகாலத்தில் நம் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றி குருவி காலில் நூலை கட்டி இழுப்பது போல நம்மை முதலில் அவர் பக்கம் இழுத்து விடுவார். அவர் பக்கம் நாம் சென்றதும், எக்காரணம் கொண்டும் நாம் அவரை விட்டு விலக அனுமதிக்கமாட்டார்.உதாரணமாக நாம் பணத்தேவை என்ற ஒரு கோரிக்கையை வைத்தால். (பாபாவின்பக்தர்களால் வைக்கப்படும் முக்கியமான கோரிக்கையே இதுதான்.) பணம் தனலட்சுமியின் அம்சம். அவரால் பணம் வழங்கப்பட்டால் அதை வைத்து பராமரிக்கும் பக்குவத்தை முதலில் நமக்கு அளிப்பார். அதைத்தான் பாபா நம்மை கடுமையாக சோதிக்கிறார், என்று நாம் எடுத்துக்கொள்கிறோம். பக்குவமற்ற பணவரவு நம்மிடம் நிலைக்காது. நம்மை அதல ​ பாதாளத்தில் தள்ளிவிடும். எனவே தனலட்சுமியாகிய பணத்தை வைத்து பாது காக்கும் பக்குவம் நமக்கு தேவைப்படுகிறது. எனவேதான் நாம் அந்த பக்குவத்தை அடைய பாபாவால் பல சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறோம். இதுமட்டுமல்ல. நாம் பாபாவிடம் வைக்கின்ற அனைத்து கோரிக்கைகள் மீதும் நாம் அதை அனுபவிக்க தேவையான சூழ்நிலைக்கு தகுந்தார்போல நம்மை மாற்றிய பின்னரே அதை நமக்கு வழங்குகிறார். நாம் கோரிக்கைகள் வைப்பதற்கும் அந்த கோரிக்கை நிறைவேறும் வரை உள்ள அந்த சோதனை காலத்தையே அவர் நம்மை பொருமையுடன் இருக்கப்பணிக்கிறார். இதை உணர்ந்து கொண்டால் நம் கோரிக்கைகள் அனைத்தும், நிறைவேறுவது சாத்தியமே. ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.
இவ்வுலகில் பிறந்த ஆண், பெண் இரு பாலருக்கும், பிரச்சனைகள் உள்ளது. பிரச்சனைகளை பொறுத்தவரை ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஜாதி, மதம் எல்லாவற்றிற்கும்அப்பாற்பட்டு, அனைவரையும்தாக்கக்கூடியதுதான் பிரச்சனைகள். இதில் இருந்து யாரும் தப்பமுடியாது. ஜாதகம், ஜோசியம் பார்ப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று யாறேனும் ஒருவரை சொல்லச் சொல்லுங்கள் அப்படி யாறேனும் சொன்னால் அது பொய்யாகும். ஜாதகம் பார்ப்பவர்கள் அதில் எந்த அளவுக்கு பாண்டித்யம் பெற்றவர்களோ அதற்கு ஏற்றார் போலவே. அவர்கள் சொல்லும் பலன் இருக்கும். ஒரு மாணவனின் தேர்வுத்தாளை ஐந்து ஆசிரியர்களிடம் கொடுத்தால் நிச்சயம் அனைவரும் ஒரே மாதிரியான மதிப்பெண் தர மாட்டார்கள்.ஒவ்வொருவருடைய மதிப்பெண்ணும் மாறுபடும் ஆகவேதான் பாபா தன்னிடம் வரும் பக்தர்களிடம் என்னிடம் வந்து விட்டீர்கள் அல்லவா உங்கள் ஜாதகத்தை தூக்கி எரியுங்கள் உங்கள் ஜாதகத்தை எழுதியவன் நானே அதை மாற்றியமைக்கும் சக்தியும் என்னிடமே உள்ளது. என தெறிவித்துள்ளார். எனவே பாபாவின் பக்தர்கள் அனைவரும் தமது பிரச்சனைகளை, பாபாவின் பாதங்களில் வைத்துவிட்டு அமைதியாக முழு நம்பிக்கையுடன் பொருமையாக இருப்போம். பாபா நமது ஜாதகத்தையே மாற்றி நமக்கு நல்லது செய்து விடுவார். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.
சாய் ராம். சாய் பக்தர்கள் அனைவரும் பாபா எனக்கு தெரிவித்தபடி, குல தெய்வம் என்றால் என்ன நம் முன்னோர்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். நம் முன்னோர்கள் தான் அதில் தன் வாழ் நாளில் நல்லது மட்டுமே செய்த பெரியவர்கள் குலதெய்வங்களாகிறார்கள்அதன்படியே நடப்பவர்கள் குலதெய்வத்துடன் இணைகிறார்கள். நாம் எதிர் பாராத நேரத்தில் யாரேனும் நமக்கு உதவி செய்தால் நல்ல நேரத்தில் தெய்வம் போல வந்து உதவினீர்கள் என்று சொல்வதில்லையா? குலதெய்வம் அந்த குலத்தை சார்ந்தவர்களை மட்டுமே பாதுகாக்கும். மற்றவர்கள் மேல் அக்கரை எடுத்துக்கொள்வதில்லை. அது ஏன்? அதாவது நம் தாய் தந்தையரின் உடல் உருப்புகளின் தாக்கம் நம் உடம்பிலும் இருக்கும். உதாரணம். ஒரு குழந்தை பிறந்தவுடன். குழந்தையை பார்க்க வருபவர்கள் குழந்தை அம்மா ஜாடையா அல்லது அப்பா ஜாடையா என்று கேட்பார்கள். இந்த உறுப்புக்களின் தாக்கம் பலநூற்றாண்டுகளுக்குமுன் நம்முன்னோர்கள் வழிவந்ததாக இருக்கும். நாம் ​ நடந்து செல்லும்போது யாறேனும் நம்மை தாக்கினால் அந்த வழியாக நமக்கு பின்னால் நடந்து வருபவர்களில் நமது சகோதரனோ அல்லது சகோதரியோ வந்தால், முதலில் அந்த ஆபத்தில் இருந்து நம்மை காக்க நமது ரத்த சம்பந்தமுள்ளவர்களே ஓடி வருவார்கள். இது போலத்தான் நாம் கஷ்டத்தில் இருக்கும்போது ரத்த சம்பந்தமுள்ள நம் குல தெய்வமே முதலில் நம்மை காக்க வந்து நிற்கும். இதுதான் குல தெய்வத்திற்கும் நமக்கும் உள்ள பந்தம். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.

Miracle : 55

பாபா பக்தரின் திருமணத்திற்கு வழி அமைத்த பாபா. பாபாவின் பக்தர் ஒருவர் எனக்கும் நண்பர். பல முறை நான் சீரடி செல்லும் போது அவரும் வந்ததால் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. நீண்ட காலமாக அவருக்கு திருமணம் நடைபெறவில்லை. நானும் பாபாவிடம் வேண்டிக்கொண்டேன். உங்களுக்கான நேரம் வரும் போது பாபா உங்கள் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைப்பார் என கூறி இருந்தேன். திடீரென ஒரு மாதங்களுக்கு முன் பாபா அவருக்கு போன் செய்ய சொன்னார். நான் அவருக்கு போன் செய்து, ஏன் இன்னும் பத்திரிக்கை வரவில்லை. உங்கள் திருமணத்திற்கான நேரம் தான் வந்து விட்டதே எனக்கேட்டேன்.அதற்கு, அவர் இதுவரை அவ்வாறு எந்த சூழ் நிலையும் உறுவாக வில்லை. என்று கூறினார். பாபாவின் அருளால் நல்லது நடக்கும் என கூறிவிட்டேன். அடுத்த நாள் காலை அவரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. சாய்ராம் நேற்று காலை எனக்கு நீங்கள் போன் செய்தீர்கள். நேற்று மாலையே ஒரு பெண் வீட்டார் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். தற்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. என்று சொன்னார். பாபாவின் அருளால் எல்லாம் நல்ல விதமாக நடக்கும் சாய்ராம் என்று சொல்லி போனை வைத்து விட்டேன். நேற்று அவர் எனக்கு மீணடும் போன் செய்து, சாய்ராம் பாபாவின் அருளாலும், உங்கள் ஆசீர்வாதத்தினாலும், எனது திருமணம் நிச்சயமாகி விட்டது. செப்டம்பர் 2019ல் திருமணம். ஆடி மாதம் முடிந்ததும் நான்பத்திரிக்கையுடன் நேரில் வருகிறேன். தாங்கள் நேரில் வந்து எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது பாபாவின் அற்புதம் அல்லவா? பாபாவின் அற்புதங்கள் தொடரும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.
சாய் ராம். நமது சாய் பக்தர்களின் நலன் கருதி பாபாவிடம் சில முக்கிய வேண்டுதல்கள் வைக்கலாம் என முடிவு செய்துள்ளேன். என்ன வேண்டுதல் வைக்கப்பட உள்ளது என்பதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும். என் வீட்டில் பாபாவிற்கு அபிஷேகம் ஆர்த்தி எல்லாம் முடித்து, பிரத்தியேகமாக ஒவ்வொருவருக்காகவும் வேண்டுதல் வைக்கப்படும். வரும் 22.8.2019 அன்று வயாழக்கிழமை மதியத்திற்கு முன் வாட்ஸ் அப்பில் நமது குரூப்பில் அல்லது என்னுடைய வாட்ஸ் அப் எண்ணில்அனுப்பலாம் திருமணம் ஆகாதவர்களுக்கான வேண்டுதல் வரும் வியாழனன்று மாலை 22,08,2019ல் வைக்கப்பட உள்ளது. திருமணம் ஆகாமல் உள்ளவர்களின் பெயர். ஆண்/பெண். வயது. இராசி. நட்சத்திரம். ஆகிய விவரங்கள் அனுப்பப்பட வேண்டும். இந்த வியாழக்கிழமைக்குள், திருமணம் சம்பந்தப்பட்டவிவரஙுகள் தவிர வேறு எதுவும் அனுப்ப வேண்டாம். 29,08,2019 ல் என்ன வேண்டுதல் வைக்கப்பட உள்ளது என்பதை அடுத்த வெள்ளிக்கிழமை. நமது குரூப்பில் பகிரப்படும். இப்போது துவக்கப்படும் இந்த சேவை நமது கத்திரிச்சேரி தென் சீரடி சாய் பாபா கோவில் கும்பாபிஷேகம் முடிந்தபிறகு தொடர்ந்து கோவிலில் பாபாவிடம் வேண்டுதல் வைக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் இந்த நல் வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வேண்டுதல் முடிந்தவுடன் அதனால் பலன் அடைபவர்கள் அதனை தவறாமல் பதிவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.
சாய் ராம். பாபா. திருமண வேண்டுதல் குறித்த தகவலுக்கு யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவர்களின் பெயர் மட்டுமேஅனுப்பினால் போதும் பிற விவரங்கள் கோரப்பட்டது எதுவும் தேவை இல்லை. இந்த வேண்டுதல் பாபாவின் பக்தர்களுக்காக நல்ல உள்ளத்துடன் செயல் படுத்தப்பட உள்ளது. மேலும் நான் வேண்டுதல் வைக்கும் நேரம் நமது குரூப்பில் பதிவிடப்படும். அந்த நேரத்தில் நமது குரூப்பில் உள்ள அனைவருமே என்னிடம் பெயர் கொடுத்த அனைவருக்காகவும் கூட்டு பிரார்தனை யாகவும் செய்யவேண்டும் என நான் விரும்புகிறேன் விருப்பமுள்ள அனைவரும் என்னுடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன். பாபாவின் பக்தர்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்பதை மட்டுமே நமது குறிக்கோளாக வைத்து நாம் செயல்படுவோம். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226.
சாய் பக்தர்கள் அனைவருக்கும். ஒரு தகவல். திருமணம் ஆகாமல் உள்ள சாய் பக்தர்களின் விவரம் கோரப்பட்டதில். மணமகள்.20பேரும் மணமகன் 23பேரும். மொத்தம் 43. பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று 22.08.2019.ல் மாலை 7.30 அளவில் பதிவு செய்யப்பட்ட 43 பேருக்கும் பாபாவின் அருளால் நல்ல வாழ்க்கைத் துணை அமைந்து அவர்கள் அனைவரும் நல்வாழ்வு வாழ பாபாவிடம் வேண்டுதல் வைப்போம். இதில் கலந்துகொள்ளும் 43 பேரும் திருமணம் நிச்சயம் ஆனவுடன் நமது குரூப்பில் அல்லது எனது வாட்ஸ் அப் எண்ணிலோ தகவல் தெரிவித்து பாபாவின் அற்புதம் அனைவரும் உணர ச்செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 29.08.2019ல் பாபாவிடம் வைக்கப்படும் வேண்டுதல் குறித்து நாளை குரூப்பில் பதிவிடப்படும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell:9884992226
சாய் ராம். இன்றைய பூஜையில் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலரையும் சேர்த்து, பூஜைதுவங்குவதற்கு முன்னர் வரை வரப்பெற்ற விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட சாய் பக்தர்களின் விருப்பத்தின்படி ஏற்று இன்று 48 நபர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும்அவர்களின் பெயர்களை தனித்தனியாக பாபாவிடம் படித்து வேண்டுதலாக வைக்கப்பட்டு அவர்களின் திருமணம் நல்லபடியாக அவர்களுக்கு ஏற்ற துணையுடன்நடை பெற வேண்டப்பட்டது. கடைசியாக வந்த ஒரு வருக்கும் சேர்த்து வேண்டுதல் வைக்கப்பட்டு, மொத்தம் 49 பேருக்காக வேண்டுதல் வைக்கப்பட்டது. இனி பாபாவின் அருளால் நல்லதே நடக்கும் சாய்ராம். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell, :9884992226
சாய் பக்தர்களுக்கு பாபாவின் ஆசீர்வாதங்கள். சாய்ராம் 29.08.2019. வியாழக்ழகிழமையன்று பாபாவிடம், திருமணம் ஆகி குழந்தை இல்லாமல் உள்ளவர்களுக்கான வேண்டுதல் வைக்கப்பட உள்ளது. எனவே சாய் பக்தர்கள் குழந்தை பாக்கியம் அருள வேண்டி பாபாவிடம் வேண்டுதல் வைப்பதற்காக. திருமணம் ஆகி குழந்தை இல்லாத தம்பதிகள், கணவர் பெயர், மனைவி பெயர். திருமணம் ஆகி எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்ற விவரங்கள் மட்டும் 29.08.2019 அன்று மதியத்திற்குள், குரூப்பில் அல்லது எனது வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் பாபாவின் அருள் கிடைக்கட்டும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
சாய் ராம். திருமணம் நடக்க வேண்டி வேண்டுதல் வைக்கப்பட்ட 49 பேரில் யாருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டாலும், அதற்காக பாபாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். குழந்தை பாக்கியம் வேண்டி பாபாவிடம் வேண்டுதல் வைக்க நேற்று 23 08.2019 மதியம் முதல் 24.08.2019.மதியம் வரை 24 மணி நேரத்தில் 17 தம்பதியினரின் பெயர்கள் வரப்பெற்றுள்ளன. சாய் அன்பர்கள் வேண்டுதல் முடிந்தவுடன் பதிவு செய்யாமல், முன்னதாகவே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
குழந்தை பாக்கியம் அருள வேண்டி பாபாவிடம் வேண்டுதல் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து மனு செய்பவர்களுக்கான, வேண்டுதல் 29.08.2019 அன்று பாபா வுக்கான அபிஷேகம் அன்று மாலை 6.00மணிக்கு துவங்கப்பட்டு அபிஷேகம் முடிந்ததும். ஒவ்வொரு தம்பதியினர் பெயரையும் பாபாவின் முன்னால் தனித்தனியாக வாசிக்கப்பட்டு, அவர்களுக்கான கர்மாக்கள் ஏதுமிருந்தால் அவற்றை போக்கி அவர்களுக்கு குழந்தை பாக்கியம் வழங்கமனமுருகி வேண்டிக்கொள்ளப்படவுள்ளது. பாபாவின் பக்தர்கள் அனைவரும் அன்று மாலை 7.30 மணியளவில் என்னிடம் பதிவு செய்து கொண்ட அனைவருக்கும் குழந்தை பாக்கியம் அருளிட பாபாவிடம் வேண்டுதல் வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கூட்டுபிரார்த்தனை நிச்சயம் நன்மை பயக்கும். மேலும் மற்றவர்களுக்காக நாம் செய்யும் பிரார்த்தனை பாபாவின் மனதை குளிரச்செய்து நம் துன்பங்கள் நீங்கி நமக்கு நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை. இதுவரை பதிவு செய்யாதவர்கள் யாரேனுமிருப்பின் வியாழக்கிழமை (29.08.2019)மதியத்திற்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
சாய் ராம். மன நிம்மதி இல்லாமல் இருக்கும் நமது சாய் பக்தர்களுக்காக ஒரு செய்தி. நிறைய சாய் பக்தர்கள் இப்போது மன நிம்மதி இல்லாமல் மிகவும் அவஸ்தை படுவதை நான் அறிவேன் இந்த பதிவை படித்தவுடன் பலருக்கு மனத்தெளிவு ஏற்படும் என நம்புகிறேன். சோகங்களுக்கு கீழ்கண்ட விஷயங்களே காரணமாக உள்ளது. திருமணம் ஆகவில்லையே என்ற சோகம், திருமணம் முடிந்ததும், நல்ல கணவன் அல்லது நல்ல மனைவி அமையாதவர்களுக்கான சோகம், குழந்தை பாக்கியம் இல்லாத சோகம், குழந்தை நன்குபடிக்க வேண்டும் என்ற கவலை. படிப்புக்கு பணம் கட்ட முடியாத கவலை, வீடுகட்ட வாங்கிய கடனைதிருப்பபிக்கட்டமுடியாத கவலை. வீட்டில் யாருக்கேனும் உடல் நலமில்லை என்றால் கவலை, மருத்துவ செலவுக்கான கவலை, குடும்பம் நடத்த வழியில்லாமல் தினசரி தரும் கவலை, வேலை இல்லையே என்ற கவலை, ஏற்கனவே இருக்கும் வேலையில் உள்ள கவலை, பிஸினஸ் செய்ததில் ஏற்பட்ட நஷ்டத்தில் கவலை,ஊனமாக பிறப்பதால் ஏற்படும் கவலை என கவலைகளுக்கான காரணங்களின் பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம். இதில் ஒருவிஷயத்தை நாம் உணர வேண்டும். இந்த உலகத்தில் கவலையே இல்லாத ஒரு மனிதரை யாறேனும் காட்ட முடியுமா? துன்பத்தைக்கண்டு நாம் துக்கப்படுவதாலோ? அழுவதாலோஅல்லது, வேதனைப்படுவதாலோ நமது துன்பம் தீர்ந்துவிடும் என்றால் நாம் அதை செய்யலாம். நிச்சயமாக இதனால் நம் துக்கம் தீரப்போவதில்லை. அப்படியானால், நாம்துக்கப்படுவதாலோ, அழுவதாலோ, வேதனைப்படுவதாலோ என்ன பிரயோஜனம். கொஞ்சம் சிந்திப்போம். உலகில் பிறந்த நாம் அனைவருமே பொம்மைகள், நூல் இறைவனின் (பாபாவின்) கையில் உள்ளது. அவர் ஆட்டு விக்கன்றபடி நாம் ஆடுகிறோம். நீ என்று எதுவுமே இல்லை உன்னில் அனைத்தும் நானே. உனக்கு கிடைக்கவேண்டும் என்று உள்ளதை யாராலும் தடுக்க முடியாது. உனக்குகிடைக்க வேண்டாம் என உள்ளதை யாராலும் கொடுக்க முடியாது. இங்கிருந்து எடுத்த பொருட்கள் யாவும் இங்கேயே இருப்பவை இதை உபயோகிக்க மட்டு மே உனக்கு வழங்கப்பட்ட உரிமை நீ போகும் போது , உன்னுடன் வாழ்ந்த மனைவி யோ, உன் குழந்தைகள் உற்றார உறவினர் நீ சேர்த்த சொத்துகள் இவை எதுவுமே உன்னுடன் வரப்போவதில்லை. பாபா கூறுகிறார். நீ என்னிடம் வந்து விட்டாய் அல்லவா உன் ஜாதகத்தை தூக்கி எறி, உன ஜாதகத்தை எழுதியவன் நானே அதை மாற்றி எழுதும் சக்தியும் என்னிடமே உள்ளது என கூறுகிறார் எனவே நம் துன்பத்தில் இருந்து நம்மைக்காக்க அந்த இறைவன்(பாபா) ஒருவரால் மட்டுமே முடியும் எனவே அவர் பாதங்களை இறுக பற்றிக்கொண்டு, அவர் நமக்கு நல்லவழி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் பொருமையாக இருந்து அவர் காட்டும் நல் வழியில் செல்வோம். இன்று முதல் கவலைகளை பாபாவின் காலடியில் சமர்ப்பித்து விடுவோம். .... ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.

Miracle : 56

சாய் ராம் ஒரு பாபா பக்தரின் மாமா மகன் மிகவும் ஆபத்தான நிலையில் I C U வில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த பக்தர் அந்த நபருக்காக பாபாவிடம் வேண்டிக்கொள்ள கேட்டுக்கொண்டதையடுத்து பாபாவிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது. பின்னர் பாபாவின் அருளால் அவர் நல்ல விதமாக உடல் தேறி வீடு திரும்பினார். என்ற தகவல் எனக்கு தெரிவிக்கப்பட்டது. இது பாபா செய்த அற்புதம் அல்லவா?ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
சாய் ராம். நாளை 29.08.2019 வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில். பாபாவுக்கான அபிஷேகம், துவக்கப்பட்டு அபிஷேகம் முடிந்ததும், அன்னபூரணி அம்மன், பாபா உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் நெய்வேத்யம் முடிந்தவுடன் அவர்கள் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில், இதுவரைவரப்பெற்ற 36 தம்பதியினருடன் நாளை பெறப்படும் தம்பதியினரின் பெயர்களும் சேர்க்கப்பட்டு பாபாவின் முன்னால் ஒவ்வொரு தம்பதியினரின் பெயரும் தனித்தனியாக படிக்கப்பட்டு, அவர்களுக்கான கர்மாக்கள் ஏதேனும் இருப்பின் அதனை நீக்கி வெகு விரைவில் அவர்களுக்கான குழந்தை பாக்கியத்தை அருள வேண்டுமாய் நான்பாபாவிடம் வேண்டிக் கொள்வேன். எனவே நமது அனைத்து சாய் பக்தர்களும் இரவு 7.30 மணியளவில் என்னிடம் வரப்பெற்று பட்டியலில் உள்ள அனைத்து தம்பதியினருக்கும் மிக விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் பாலிக்குமாறு பாபாவிடம் வேண்டுதல் வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பிறருக்காக நாம் வேண்டும் வேண்டுதல் பாபாவால் ஏற்கப்பட்டு அதன் மூலம் நம்முடைய பிரச்சனைகளும் தீர வழிபிறக்கும் என்பதை உணர்ந்து அனைவரும் தவராமல் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பாபா அனைவருக்கும் ஆசி வழங்கட்டும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
சாய்ராம். இன்று மாலை வரை குழந்தை பாக்கியம் வழங்கவேண்டி வேண்டுதல் வைப்பதற்காக 62 தம்பதியரிடம் இருந்து, விவரங்கள் பெறப்பட்டு, பாபாவின் திருவடிகளில் வைத்து ஒவ்வொரு தம்பதிக்கும் தனித்தனியாக வேண்டுதல் வைக்கப்பட்டது. அனைத்து பாபா பக்தர்களும் இணைந்து 7,30மணியளவில் வேண்டுதல் வைத்திருப்பதால்,. நம் அனைவரின் கூட்டு பிரார்த்தனையை ஏற்று இனி அனைவருக்கும் பாபாவின் அருளால் மிக விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்திடுமே. தன்னலமற்ற நமது கூட்டுப்பிரார்த்தனைக்கு பாபாவின் அருட் பார்வை நிச்சயம் கிடைக்குமென்பதால் நம்பிக்கையுடன் பொருமையாக இருந்து அதன் பலனை விரைவில் பெறுவோம். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
பாபாவிடம் 22.08.2019 ல் 49 பேருக்கு பாபாவின் ஆசியுடன் விரைவில் திருமணம் நடை பெற வேண்டும் என்றும், 29.08.2019 அன்று 62 தம்பதியருக்கு பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைத்திட அருள் பாலிக்க வேண்டும் என்றும் வேண்டுதல் வைக்கப்பட்டது. திருமணம் நிச்சயம் ஆனாலும், குழந்தை உருவானாலும், பாபாவுக்கு நமது நன்றியை தெரிவிக்கும் பொருட்டு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
சாய் ராம். தொழில் செய்பவர்களுக்கு பாபாவிடம் வேண்டுதல் வைத்தல். , செய்யும் தொழில். நன்கு விருத்தி யடைந்து. அதனால் வேலை இல்லாமல் உள்ள பல பேருக்கு வேலை வழங்கும் நிலைக்க உயர, பாதிக்கப்பட்டவர்கள், தொழில் விருத்தியடைந்து நன்கு முன்னேறுவதற்காக 05.09.2019. அன்று பாபாவிடம் வேண்டுதல் வைத்தல். எனவே தொழில் செய்பவரின்பெயர்.செய்யும் தொழில் விவரம். கோரிக்கை விவரம். ஆகியவை, வரும் 05.09.2019.அன்று மதியத்திற்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
சாய் ராம். பாபா என்றால் அற்புதம். அற்புதத்தின் அதிபதியே பாபா தான். இவ்வுலகில் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு அர்த்தம் உள்ளது. அதை அறிந்து கொள்ளும் சக்தியை நாம் பெற்றிருக்கிறோமா? என்பது நமக்கு த்தெரியாது. இவ்வுலகில் அனைத்துமே அறிந்தவர் ஒருவர் கூட கிடையாது. இவ்வுலகில் நல்லவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவு. இதற்கு எதிரானவர்கள் எண்ணிக்கை கணக்கில்அடங்காது. உண்மை சிறிது அதற்கு எதிர்மறை கணக்கிலடங்காது. இதன் விகிதாச்சாரம் அதிகரிக்கும் போது நேர் வழியில் செல்வதற்கான போதனை தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் தான் இறைவனின் அவதாரங்கள் தோன்றுகிறது. அவ்வாறு தோன்றியவரே பாபா. இறைவனின் தூதர்களாக வருபவர்கள். மனிதன் வாழும் வாழ்க்கைக்கு எது நல்லது அதை மட்டுமே போதிக்கிறார்கள். அதை யார் மீதும் அவர்கள் திணிப்பதில்லை. அவர்களின் போதனையை, உள் வாங்கவே பலகாலம் ஆகிறது. போதனையை ஏற்று அதனால் பலனடைநதவர்கள்அவரின் போதனையை ஏற்று அவர் சொல்கிறபட அவர பின் சென்று நண்மையடைகிறார்கள். அவரைஅறியாதவர்கள் தங்களுக்கான நேரம் வரும்வரை துன்பத்தில் சுழல்கிறார்கள். இறைவனால் அனுப்பபட்ட வர்கள் எவரும் துர் போதனைகளை ஒருபோதும் சொல்வதில்லை.இறையருள் ஒன்றே உங்களை நல்வழிப்படுத்தும். என்று சொல்லாமல் இருந்ததுமில்லை. நல்லவர்களாக வாழ்வதும், அல்லது தீயவர்களாக வாழ்வதும் ஆகிய இரண்டு வழிகளை நமக்கு கொடுத்து எப்படி வாழவேண்டும் என்பதை முடிவு செய்ய ஆறாம் அறிவையும் நமக்கு கொடுத்து நம்மையே முடிவு செய்யப்பணித்து விட்டார் அந்த ஆண்டவன. முடிவு நம் கையில். எப்படி வாழவேண்டும் என்பதை நாமே முடிவு செய்வோம். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.

Miracle : 57

இன்று பாபா நடத்திய அற்புதம். சாய்ராம் சற்று நேரத்திற்கு முன்பு பாபாவின் நீண்டநாள் பக்தர் ஒருவர் அவர் எனக்கு நெருங்கிய நண்பரும் கூட ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது பாபா உரிய நேரத்தில் தங்கள் மகள் திருமணத்தை நடத்தி வைப்பார் என கூறி இருந்தேன். சற்று நேரத்திற்கு முன்பு பாபா, அவருக்கு போன் செய்யச்சொல்லி, அவர் மகளின் திருமண பத்திரிக்கை என்னவாயிற்று என்று கேட்கச்சொன்னார். நானும் அவருக்கு போன் செய்து சாய்ராம் உங்கள் மகள் திருமண பத்திரிக்கை எங்கே? என்று கேட்டேன். அவர் அப்படியே ஆடிப்போய் விட்டார். நாளை வேறு ஒரு ஊரில் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது. சாய்ராம் ஊருக்கு வந்ததும். இந்த வாரக்கடைசியில் நடைபெற உள்ள வரவேற்பு நகழ்ச்சிக்கு நான் தங்களை நேரில் வந்து அழைக்கிறேன். என உறுக்கத்துடன் தெரிவித்தார். இது பாபா நடத்தும் அற்பு தம் அல்லவா?மணமக்களை மனதார வாழ்த்துவோம். பாபாவின் அற்புதங்கள் தொடரும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
சாய் ராம். சிறு தொழில் செய்பவர்கள் 17 பேரிடம் இருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளது. 17 என்பது 8 அஷ்ட லட்சுமிகளின் அனுக்கிரஹம் அனைவருக்கும் கிடைக்கட்டும். விவரங்கள் அளித்தவர்கள் வாழ்வில் தொழில் நன்கு நடந்து அதன் மூலம் அவர்கள் பல நல்ல காரியங்களை செய்யவும் பலருக்கு வேலை வாய்ப்பு அளித்து பலருக்கு வாழ்வளிக்கவும் அவர்களுக்காக இன்று மாலை 7.30 மணியளவில் பாபாவிடம் 2நிமிடம் அவரவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell. 9884992226.
சாய் ராம். இன்று மாலை வரை 25 பேரிடமிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில்,அவர்களுக்காக பாபாவிடம் நாம் அனைவரும் கூட்டுப்பிரார்த்தனை செய்ததையடுத்து, நம் அனைவருடைய வாழ்விலும் நல்லதே நடக்கும் சாய் ராம். ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் நமது நன்றியை பாபாவின் பாதத்தில் சமர்ப்பிப்போம். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash.Cell :9884992226.
சாய் ராம். மனநிம்மதி இல்லாமல் தவிக்கும், பாபா பக்தர்களுக்காக சில குறிப்புகள். மன நிம்மதி இல்லாமல் போக ஒவ்வொரு பாபா பக்தருக்கும் ஒவ்வொரு காரணங்கள் உள்ளன. ஒரே காரணத்திற்காக அனைவரும் மன நிம்மதியை இழப்பதில்லை. இதில் ஒரு சில காரணங்களை மட்டும் நாம் இங்கு எடுத்துக்கொள்வோம். பணப்பற்றாக்குறை. இது பல் வேறு விஷயங்களில் மன நிம்மதியை இழக்க செய்கிறது. அடுத்தது. நல்ல கணவன் அல்லது மனைவி அமையாமை. சொந்த பந்தங்கள் னால் ஏற்படும் மன உலைச்சல், மகளுக்குஅல்லது மகனுக்கு திருமணம் ஆகாததால் ஏற்படும் மன உலைச்சல், மாமியார் மருமகளுக்கான புரிந்துணர்வு இல்லாமை, குழந்தையின்மையால், மனநிம்மதியின்மை. குழந்தைகள் சரிவர படிக்கவில்லையே என்ற மன உலைச்சல், சொந்த மாக வீடு சொத்து சுகம் இல்லாததால் ஏற்படும் மனபாதிப்பு, கணவன் அல்லது மனைவி, உறவினர் பிரிவால் ஏற்படும் நிம்மதியின்மை, சண்டை சச்சரவால் ஏற்படும் நிம்மதியின்மை. உடன்இருப்பவர்களின் தீய பழக்க வழக்கங்களில் ஏற்படும் நிம்மதியின்மை, அடுத்தவன் நன்றாக இருக்கிறானே என்ற கவலை.உடல் நலபாதிப்பால் ஏற்படும் மன உலைச்சல் இவ்வாறு கவலைகளுக்கான காரணங்களை அடுக்கிக்கொணைடே போகலாம். இதற்கு தீர்வு தான் என்ன? இதில் பல பேர் கவலை பட்டுக்கொண்டே இருப்பார்கள், பலபேர் துக்கத்திலேயே இருப்பார்கள், பலபேர் நினைத்து, நினைத்து அழுதபடியே இருப்பார்கள். இவர்களுக்கான தீர்வுதான் என்ன? கொஞ்சம் சிந்திப்போம். நாம் கவலைப்படுவதால், துக்கப்படுவதால், அல்லது அழுவதால் எந்த ஒரு பிரச்சனையையாவது. தீர்க்கமுடியுமா? நிச்சயமாக முடியாது. இவ்வாறு செய்வதால் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கும் சக்தியை இழந்து விடுவோம். இவ்வாறு செய்வதால் எந்தப்பிரச்சனையும் தீராது எனும்போது நாம் ஏன் கவலைப்படவேண்டாம். நாம் அனைவருமே பொம்மைகள். நூல்பாபாவின் கையில் இருக்கிறது. அவர் ஆட்டுவிக்கிறபடி நாம் ஆடுகிறோம். எதையும் மாற்றி அமைக்கும் சக்தி பாபாவிடம உள்ளது. அவர் பாதத்தை இறுக பற்றிக்கொண்டு நம் பிரச்சனைகள் தீரும் வரைநம்பிக்கை யுடன் அவரைவணங்கிய படி பொறுமையாக காத்திருப்போம். நல்லதே நடக்கும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
சாய் ராம். 12.09.2019. வியாழக்கிழமை யன்று. சுத்தமாக வேலையே இல்லாமல் இருப்பவர்களுக்கான வேண்டுதல் பாபாவிடம் கூட்டுப்பிரார்த்தனையாக. வைக்கப்பட உள்ளது. வேலை இல்லாமல் இருப்பவர் பெயர், படிப்பு மற்றும் ஊர்.குறித்த விவரம். வேறுயாறேனும் அவரை அறிமுகப். படுத்து பவராக இருந்தால், அவர் பெயர் மற்றும் செல் எண் ஆகிய விவரங்களை 12.09.2019 மதியத்திற்குள் வந்து சேறுமாறு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். பாபாவின் ஆசி பாபாவின் பக்தர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
சாய்ராம். சொந்தவீடு இல்லாத சாய் பக்தர்களுக்காக. பாபாவின் அருளாசியோடு சில விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன். பாபாவின் ஆசியோடு இதை பாபா யாருக்காக எழுத பணிக்கிறார், என்பதை சம்பந்தப்பட்ட நபர்கள் புரிந்து கொள்வார்கள். சொந்தமாக நமக்கென்று ஒரு வீடு வேண்டும் என்பது. அனைவருக்கும் உள்ள ஆசைதான். இதில் உள்ள ஆசையினால் பலன் அடைந்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்களே அதிகம். கடன்பட்டாவது நமக்கென ஒரு வீடு வாங்கி நமது சொந்த வீட்டில் நாம் வாழ வேண்டும் என்ற ஆசையில், தற்போது பத்தாயிரம் வாடகை கொடுப்பது, லோன் வாங்கி வீடு வாங்கி விட்டால், மாதம் இருபதாயிரம் லோன் கட்டிவிட்டு நமது சொந்த வீட்டில் நாம் வாழலாம்.வட்டியுடன் லோன் கட்ட வேண்டியுள்ளதால் நம் செலவுகளை கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம் எனமுடிவு செய்து, அதன்படியே, லோன் வாங்கி வீடும் வாங்கியாகிவிட்டது. ஊரைக்கூட்டி சொந்தவீடு வாங்கியதை பறைசாற்றியாகி நாமும் சொந்த வீட்டில் வாழ்கிறோம் என்ற பெருமையும் பெற்றாகிவிட்டது.சிலவருடங்கள் ஓடியது லோன்கட்டுவது இல்லாமல் மாதாமாதம் பராமரிப்பு கட்டணம் வேறு, அடுத்த மாதம் குழந்தைகளுக்கு பள்ளியில் பீஸ் கட்ட வேண்டும். அப்பா வேறு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது எதிர் பாராத செலவு சரி மனைவியின் நகை யை வைத்து சமாளிக்கலாம் என்றால், வீடு வாங்கும்போது லோன் வாங்கியது போக மீதமுள்ள பணத்திற்கு நகையை அடகு வைத்துத்தான்வீட்டைப்பதிவு செய்வது வரையான செலவுகளை ஈடு செய்ய முடிந்தது இந்தமாதம் லோன் கட்ட வேண்டாம். அதைவைத்து சமாளித்து விடலாம். அடுத்தமாதம் நாற்பதாயிரம் கட்ட வேண்டும். சென்ற மாதம் கட்டாததற்கான பணத்திற்கு வட்டியுடன் சேர்த்துக்கட்ட நோட்டீஸ் வந்து விட்டது. இந்த நிலையல் கம்பெனியில் ஆட் குறைப்பு செய்யப்படுவதாக பேச்சு அடிபடுகிறது. சில மாதங்களில் அதுவும் நடந்தது. லோன்கட்டாததால் வீடும் பரிபோனது. செட்டில்மெண்ட்டால், லேட்டாக வந்த பணத்தில் அட்வான்ஸ் கொடுத்து மீண்டும் வாடகை வீட்டிற்கு வந்தாயிற்று வேறு வேலை கிடைக்கும் வரை கையில் இருக்கும் பணத்தை வைத்து சமாளிக்க வேண்டும். கணவர் பெயர் செல்வம். எங்கே பயிற்று செல்வம்? மனைவி பெயர் அன்பு வீடு வாங்கியதில் இருந்து கணவன், மனைவிக்கிடையேயான அன்பு எங்கே போயிற்று?.ஏற்கெனவேஇருநதபடி,லோன் கட்டிய இரபதாயிரத்தில் வாடகை பத்தாயிரம் கொடுத்தாலும். மீதமுள் பத்தாயிரத்தில் குடும்பம் நடத்தி இருக்கலாம். இதரசெலவுகளும் சமாளிக்க இயலும் மனைவியின் நகையும் அப்படியே ​ இருந்திருக்கும்.இதெல்லாம்இப்போது தான் நினைக்க தோன்றுகிறது. வீடு வாங்கியதால் நகையில்லாமல். எந்த விஷேசங்களுக்கும் போக முடியாத நிலையும் ஏற்பட்டிருக்காது. நடுத்தர மக்கள் படும் பாட்டையே சுட்டிக்காட்டப்பட்டது நடுத்தர மக்கள் கடன் வாங்காமல் வீடு வாங்குவது கடினமே. எனவே, சொந்தவீடு வாங்குவதற்கு கையில் பாதிப்பணமாவது சேமிப்பு வைத்து, வாடகைகொடுக்கும் அளவிற்கு மட்டுமே லோன் கட்டும் அளவிற்கு நம்மை ஓரளவிற்காவது உயர்த்திக்கொண்டபின்னர் வீடு வாங்குவதே ஏற்புடையதாகும். கொஞ்சம் சிந்தியுங்கள். பாபாவின் அருளால் நிலை யான சொந்தவீடு அமைய அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226
சாய்ராம். வேலை வேண்டி, வேண்டுதல் வைப்பதற்கான விவரங்கள் இதுவரை 28 சாய் பக்தர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. எனவே சாய் பக்தர்களாகிய நாம் அனைவரும் ஒன்றினைந்து, இன்று மாலை 7.30 மணியளவில், என்னிடம் விவரங்கள் அளித்துள்ள, அனைவருக்கும், அவர்களின் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்க பாபாவின் பாதம் பணிந்து கூட்டுப்பிரார்த்தனை செய்வோம். மற்றவர்களுக்காக நாம் செய்யும் கூட்டு பிரார்த்தனை க்கான பலனை நிச்சயம் பாபா நமக்கு அளிப்பார். நமக்காக நாம் வேண்டும் போது நமக்கு கிடைக்கும், பலனை விட, மற்றவர்களுக்காக நாம் விருப்பு வெறுப்பின்றி வேண்டும் வேண்டுதலுக்காக, பாபா மனமுவந்து நமக்கு அளிக்கும் பலன் மிக, மிக அதிகமாகவே இருக்கும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
சாய் ராம். நேற்று வேலை இல்லாதோருக்கானவேண்டுதல் வைப்பதற்காக 37 சாய் பக்தர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டு அவர்களின் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்க பாபாவிடம் மனப்பூர்வமான கூட்டுப்பிரார்த்தனை ஆத்மார்த்தமாக வைக்கப்பட்டது. இனி பாபாவின் அருளால் அனைவருக்கும் நல்லதே நடக்கும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash.Cell :9884992226.
ஜெய் சாய் ராம். மனித வாழ்க்கை என்பது என்ன? பார்ப்போம். நாம் நம் தாயின் மடியில் தவழ்ந்து பூமி தாயின் மடி சேர பயணம் செய்கிறோம். இந்த இடத்தில் இருந்து அந்த இடம் வரை பயணம் செய்யும் தூரமே நமது வாழ்க்கை. மிக குறுகியது நம் வாழ்க்கை. காலங்கள் மிக வேகமாக ஓடிவிடும்.இதில் நாம் வந்தது தெரியும் போவது எப்போது என்பது யாருக்குமே தெரியாது. அதை அறிந்தவர் கடவுள் ஒருவர்மட்டுமே. நாம் பூமித்தாய் மடி சேரும் நேரம். அது தூரமாகவும், இருக்கலாம், அருகில் அல்லது இடையில் கூட இருக்கலாம். இதில் பலபேர் பணம், பணம் என்று அலைவதிலேயே காலத்தை ஓட்டி விடுகிறோம். நாம். திரும்பி பார்க்கும் போது எதையும் அனுபவிக்கும் நிலையில் நாம் இல்லை என்பதை நம்மால் உணர முடியும். அப்போது வருந்துவதால் எந்த பலனும் இல்லை. நாம் வரும் போது எதை கொண்டு வந்தோம், அதை திரும்ப கொண்டு செல்ல. அனைத்துமே இங்கிருந்தே எடுக்கப்பட்டது. இங்கேயே விட்டுச்செல்ல வேண்டியது. நம் மனைவியோ, பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், நாம் சேர்த்த சொத்து எதுவும் நம்முடன் வரப்போவதில்லை. உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும். இறைவன் இருக்கின்றான். அதைஉணர்ந்தவர்கள் சிலபேர் மட்டுமே. தன்னிடம் உள்ள இறை தன்மையை உணர்ந்தவர்கள், மற்றவர்களுக்கு நண்மைகளை மட்டுமே செய்து புண்ணியங்களை சேர்ப்பார்கள், இறுதியில் புண்ணியங்களின் பலன் மட்டுமே, நம்மை சொற்கத்திற்கு அழைத்துச் செல்லும், நம் சந்ததியினருக்கும் இப்பூவுலகில் சொறகத்திற்கீடான வாழ்க்கையை தரும். இறையருளை உணர்வுவோம் இனிய வாழ்வை பெறுவோம். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
சாய் ராம். 19.09.2019. வியாழக்கிழமை யன்று. உடல் நலமில்லாமல் இருப்பவர்கள், நல்ல உடல் நலம் பெற்று இயல்பு வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல நமது சீரடி சாய் நாதரின் பொற்பாதம் பணிந்து அன்று மாலை 7.30 மணியளவில் நாம் அனைவரும் ஒன்றினைந்து கூட்டுப்பிரார்த்தனை செய்து அவர்களுக்கு பாபா வின் அருள் கிடைத்து அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ பாபாவின் அருள் வழங்க வேண்டி வேண்டுதல் வைப்போம். உடல் நலமில்லாமல் இருப்பவர்களின் பெயர் மட்டும் அனுப்பினால் போதும், அவர் பெயரை அனுப்புபவரின் பெயரும் செல் எண்ணும், 19.09.2019 மதியத்திற்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.

Miracle : 58

சாய்ராம். சென்ற வாரம் வெளிநாட்டில் உள்ள நண்பர் ஒருவருக்கு போன் செய்தேன். அதற்கு முன்பாக அவர் குரூப்பில் ஒரு பதிவிட்டிருந்தார். அவருக்கு நான் பதில் அளித்ததுடன். பாபாவின் விருப்பப்படி. பாபா எப்போதும் உங்கள் கூடவே இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுகிறார். என்று பதிவிட்டிருந்தேன்.ஐந்து நிமிடங்கள் கழித்து அவருக்கு நான் போன் செய்தேன். போனை எடுத்தவுடன், நலம் விசாரித்துவிட்டு அவர் சொன்னார். நான் இப்போது தான் பாபாவிடம் நன்றாக சண்டை போட்டு விட்டு வெளியில் வந்தேன். உடனே உங்கள் போன் வந்தது என்றார். என்ன என்று கேட்டேன். தொழில் சம்பந்தமாக நான் எடுக்கும் முயற்சிகள் யாவும் வீணாகிறது எனவேதான் பாபா விடம் சண்டை போட்டேன் என்று கூறினார். நீங்கள் எதிர் பார்ப்பதை விட நல்லது செய்ய நினைக்கிறார். அதனால் தான் தள்ளி போகிறது. என்று கூறினேன். அவர் வேறு வேலையில் இருந்ததால் போனை துண்டித்து விட்டோம். அதன் பிறகு அவருக்க குறுஞ் செய்தி அனுப்பினேன். அதில், தாங்கள் பாபாவிடம் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் போதே, பாபா விருப்பப்படி உங்களுக்கு பாபா குரூப் மூலமாக தங்களுக்கான பதிலை அனுப்பப்பணித்து. பாபா எப்போதும் உங்களுடனேயே இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும், காப்பாற்றுகிறார். என்ற செய்தி அனுப்பப்பட்டது. என தெரிவித்திருந்தேன். இது பாபா செய்த அற்புதம் அல்லவா? இந்த செய்தியை சம்பந்தப்பட்ட நண்பரும் படித்து இது நமக்கான செய்திதான் என் பதை உணர்ந்து கொள்வார். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
சாய்ராம். உடல் நலம் பெற்று புத்துணர்ச்சியுடன் வாழ,நம் சாய் பக்தர்களுக்காக, நமது சாய் பாபாவிடம் கூட்டு பிராத்தனை மூலமாக அவர் திருவடி தொட்டு நாளை அதாவது 19.09.2019.மாலை 7,30 மணியளவில் நம் சாய் உறவுகள் அனைவரும் பிராத்தனை செய்வதற்காக இதுவரை 78 சாய் பக்தர்களிடமிருந்து பெயர்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளை மதியம் வரை வரும் பெயர்களையும் சேர்த்து, நாளை மேற்குறிப்பிடப்பட்ட நேரத்தில் நாம் அனைவரும்,நம் சாய் பக்தர்களுக்காக அவரவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே பிரார்த்தனை செய்து முடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சுயநலமற்ற நம் வேண்டுதலை ஏற்று, பாபா நாம் அறியாமலே நம்முடன் இருந்து அனைவருக்கும் அருள் பாலிக்க பாபாவிடம் நான் வேண்டுதல் வைக்கின்றேன். நல்லதே நடக்கும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
சாய் ராம். உடல் நலம் பெற வேண்டி வேண்டுதல் வைப்பதற்காக 19.09.2019 மாலை வரை 86 சாய் பக்தர்களின் பெயர்கள் பெறப்பட்டு, அவ்வாறு பெறப்பட்ட சாய் பக்தர்களுக்காக அவர்கள் உடல் நலம் பெற்று தீர்க்க ஆயுளுடன் எவ்வித குறையுமின்றி நல்வாழ்வு வாழ பாபாவிடம் பக்தியுடன் கூட்டுப்பிரார்த்தனை மிக பணிந்து அவர் காலடியில் வைக்கப்பட்டது. இனி நடப்பதெல்லாம் நல்லதாகவே நடக்கும். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
சாய்ராம். பாபா யாரையெல்லாம் நன்கு மிக நெருக்கமாக இருக்கும்படியாக அழைக்க நினைக்கிறாரோ அவர்களை தனக்கு ஏற்றார் போல மாற்றுவதற்காக அளவுக்கு அதிகமாக அவர்களுக்கு சோதனைகளை கொடுத்து அவர்களை பக்குவப்படுத்துகிறார். இதல் மனம் நொந்து போனவர்கள் பலபேர். அந்த நேரத்தில் அவர்கள் மனச்சிதைவுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான நிகழ்வுகளை நிகழ்த்தி தொடர்ந்து அவர்களை பண்படுத்துவார். ஒவ்வொரு பாபாவின் பக்தருக்கும் அவரவர் நிலைக்கேற்ற பணிகளை அவரே பிரித்து வழங்கி விடுவார். பாபாவின் பக்தர் என்ற நிலையில் அனைவரையும் சமமாகவே பாவிப்பார். ஒவ்வொரு பாபா பக்தரும் ஒரு போதும் முதலில் தங்களை தாங்களே உயர்வாக கருத வேண்டும். அதற்காக தலைக்கனம் எந்த சூழ் நிலையிலும் வந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். நமது எண்ணம், எதுவோ அதுவே செயல் வடிவம் பெறும். எதையும் முடியும் என நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லை. முடியாது என நினைத்தால் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது. நாம் அனைவரும் பொம்மைகள், கயிறு பாபாவின் கையில். அவர் ஆட்டுவிக்கிறபடிதான், நாம் ஆடியாக வேண்டும். வாழ்க்கை ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால், நமக்கு கிடைத்த இந்த வாழ்க்கை எப்போதும் சந்தோஷமே.ஜெய். ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.

Miracle : 59

சாய்ராம். சென்ற வாரம் ஒரு சாய் பக்தரிடம் இருந்து போன் வந்தது. அவர் என்னிடம் சாய்ராம் என் கையில் பணமும் இல்லை, என் மகளுக்கு நல்ல வரனும் அமையவில்லை. என்ன செய்வ தென்று தெரியவில்லை. என்று சொன்னார். பாபாவிடம் வேண்டுதல் வைத்தேன். உடனே அவரிடம், பணம் இல்லை என்று சொல்லுகின்றீர்களே, உங்கள் பெண்ணுக்கான கல்யாண நேரம் வந்து விட்டதே, எனக்கூறினேன். இன்று அவரிடம் இருந்து போன் வந்தது திடீரென மாப்பிள்ளை வீட்டார் வந்து எங்கள் பெண்ணை பார்த்து பிடித்து விட்டதாகவும் அடுத்தவாரம் நிச்சயம் செய்து கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டார்கள். என்று கூறினார். பாபாவிடம் சொல்லிவிட்டு நடத்துங்கள் எல்லாம் நல்லதே நடக்கும் என கூறினேன். இது பாபாவின் அற்புதம் தானே. ஜெய் ஜெய் சாய் ராம். Sai Prakash. Cell :9884992226.
மதுராந்தகம் அருகே கருங்குழி ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தென் சீரடி சாய் பாபா கோவிலில் பாபாவின் 101 வது முக்தி நாள் 08.10.2019 விஜயதசமி நாளன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.பாபாவிற்கு, அபிஷேகம், ஆர்த்தி, அன்னதானம் மிக சிறப்பாக வழங்கப்பட்டது. கத்திரிச்சேரி அரசு துவக்கப்பள்ளியில், சீரடி சாய்பாபா தொண்டு நிறுவனத்தின் சார்பாக அங்கு பயிலும் பெண் குழந்தைகளுக்காக, மிக சிறந்த முறையில் பாபாவின் ஆசியோடு நிறந்தர கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது. அருகில் உள்ள முன்னுத்திகுப்பம் அரசு நடு நிலைப்பள்ளியில். பெண் குழந்தைகள். கற்று பயன் பெற வேண்டும் என்பதற்காக தையல் மெஷின் வாங்கி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர கத்திரிச்சேரி அருகில் உள்ள தோட்டநாவல் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட மேற்கண்ட மூன்று பள்ளிகளிலும் கத்திரிச்சேரி துவக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் மற்ற இரண்டு பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவர்களையும் சேர்த்து, கிராமத்தில் உள்ள குழந்தைகள் நன்கு படித்து பயன் பெற அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் குழந்தைகள் ஒவ்வொரு வருக்கும் 2014-2015 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1000 வீதம் ஊக்க தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்டது. 2018-2019 ம் ஆண்டுக்கான ஊக்கத்தொகை கத்திரிச்சேரி அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு திருமதி. ராஜேஸ்வரி அவர்களால் பாபாவின் 101 வது முக்தி நாளான 08.10.2019 விஜயதசமி அன்று வழங்கப்பட்டது. இது தவிற +2 வில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒரு பெண் குழந்தை அதற்கு மேல் படிக்க வசதி இல்லாத நிலையில் அந்த பெண் குழந்தையின் மூன்றாண்டு கல்விக் கட்டத்தை ஏற்று. பி. காம் வரை படிக்க வைக்கப்பட்டது. இதில் சிறப்பு என்ன வென்றால் அந்த குழந்தை ஒவ்வொரு செமஸ்டரிலும் அனைத்து பாடங்களிலும் ஒன்றுவிடாமல் தேர்ச்சி பெற்றது தான். இந்த பதிவு தற்பெருமைக்கானது அல்ல. சாய் பக்தர்கள் அனைவரும் தங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதற்காகவே. ஜெய் ஜெய் சாய்ராம். Sai Prakash. Cell :9884992226.

சீரடி வாசா சீர்மிகு நாதா
பதின் மூன்று வயதில் பாலகனாய் உதித்தவரே.
உதிஅளிக்கும் உத்தமரே.
பசி தீர்க்கும் பரமனே.
அன்பர்களை ஆட்கொள்ளும் அருளாலரே.
அன்பின் இருப்பிடமே.
அரவனைப்பின் பிறப்பிடமே.
அன்பர்கள் துயர் தீர்க்கும் தூயவரே.
கலியுகத்தின் காவலரே.
என் சீரடியின் நாயகரே.
நம்பிவந்தவர்க்கு நல்வழி காட்டும் சாய்நாதரே.
மகல்சாபதியால் ஆவோ சாயி என அழைக்கப்பட்டவரே.
அன்று முதல் சாயி என பெயர் பெற்றவரே.
இவ்வுலகைக்காக்க உதித்தவரே.
ஜாதிமத பேதங்களற்றவரே.
இறைவன் ஒருவனே என முழங்கிய ஐயனே.
இவ்வுலகில் பிறந்த மக்கள் அனைவரையும் பேதமின்றி ஏற்றவரே.
கோதுமையை மாவாய் அறைத்து மக்கள் உயிர் காத்தவரே.
கையில் காசை பெற்று கர்மாக்களை அழித்தவரே.
உமக்கென ஒரு பங்கு அளித்தால் அதை பத்து மடங்காக திரும்ப வழங்க கடன்
பட்டுள்ளதாக அறிவித்தவரே.
பக்தர்களின் உள்ளங்களில் ஆசனம் போட்டு அமர்ந்தவரே.
உமை நினைத்தவுடன் ஏதோ ஒரு வடிவில் எதிர் வந்து நிற்ப்பவரே.
விதியை மாற்றி எழுதும் வித்தகரே.
ஒவ்வொரு வருக்கும் அவர் தகுதிக்கேற்ப அற்புதங்களை வாரி வழங்கி மகிழ்பவரே.
​ அற்புதங்களின் நாயகனே.
அதன்மூலம் அனைவரையும் தன்பால் ஆட்கொள்பவரே.
சிந்தனையில் நீங்கா இடம் பெற்ற திருமகனே.
ஜன்ம ஜன்மமாய் வாழும் நாயகனே.
பக்தர்களின் காலில்அற்புதம் எனும் நூல்கட்டி உமை நோக்கி இழுக்கும் பரந்தாமரே.
அன்னதானத்தின் அதிபதியே.
உதி கொண்டு பிணி தீர்க்கும் உயர்ந்தவரே.
எளிமைக்கும் எளியவரே.
உலகம் முழுவதும் வியாபித்துள்ளவரே.
சாய்அன்பர்க்கு ஆபத்பாந்தவரே.
சாய், சாய் என்று சொல்லும் வார்த்தையை காது கொடுத்துக்கேட்டு ரசித்து ரட்சிப்பவரே.
அனைவருக்கும் அம்மையாய் அப்பனாய் திகழ்பவரே.
பஞ்ச பூதங்களின் அதிபதியே மும்மூர்த்திகளின் அவதாரமே.
நவ கிரகங்களை உள்ளடக்கியவரே.
பக்தர்களுக்கு பல அவதாரங்களில் காட்சி தருபவரே
எத்துனை ஜென்மங்களில் புண்ணியம் செய்தோமோ இந்த ஜென்மத்தில் உம்அருள் பெற.
ஏற்றுக்கொள்வாய் உம் திருவடிதனில் இறுதியில்.
அந்த பாக்கியத்தை அருள வேண்டும் எம் அருளாலா சாயிநாதா. Sai Prakash. Cell:9884992226.

சாயிராம் சாயிராம் சாயிராம் . சாயிராம்
முத்தான புன்னகையை சேர்த்து, பாபா
முன்னும் பின்னும் அழகிய நடைபோட்டு.
​ நடந்தது அவரது கால்கள்.
நன்மை பல பெற்றது உலகம்.
அழகிய பாதங்கள் பதிந்ததுமே.
அந்த சீரடி பெற்றது பெருமைதனை.
பாபா துவாரகமாயியில் அமர்ந்தாய்.
பெற்ற தாயாய் அருள் மழை பொலிந்தாய்.
உம் பாதங்கள் பட்ட இடமெல்லாம்,
பவித்திரமானது பூமி.
சீரடி அவரின் அருளாலே,
புண்ணிய பூமியாய் மாறியதே.
பக்தருக்குதவிடும் பாபா.
பல நண்மைகள் செய்திடும் பாபா.
பாவங்கள் நீக்கிடும் பாபா.
மன பயங்களை போக்கிடும் பாபா.
நம் பகைதனை அழித்திடும் பாபா.
சாயிராம், சாயிராம்,
சீரடி நாதனின் திருவடியே.
நாம் தினம் தினம் தொழுதிடும் சுகவடிவே.
பக்தர்கள் போற்றிடும் பாபா.
அவர்தம் பாவங்கள் நீக்கிடும் பாபா.
நல்லவர் துணை கொண்டு பாபா.
நம் நிலம் காத்திடும் பாபா.
அன்னம் அளித்திடும் பாபா.
பலர் பசிதனை போக்கிடும் பாபா.
நல்லவர்கெல்லாம் நீயே.
உனையன்றி வேறு துனையில்லை தாயே.
​ நலம் தரும் தெய்வம் பாபா.
நல்வழி காட்டிடும் பாபா.
பாபா சாயிபாபா,
பாபா சாயிபாபா,
பாபா சாயிபாபா.
Sai Prakash. Cell : 9884992226.

Miracle : 60

நமது சாய் பக்தர் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை. சாதாரணமாக அவரிடம் கேட்ட போது வரன் எதுவும் ஒத்துவர வில்லை. என்று கூறினார்.அவர் வேண்டுகோளின்படி, அவருக்காக பாபாவிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது. ஒரு மாத இடைவெளியில், பாபாவின் அருளால் ஒரு பெண் வீட்டார் வந்து, இவர்களை பெண் வீட்டார் வீட்டிற்கு வரவழைத்து அங்கேயே பேசிமுடித்து திருமணம் உறுதி செய்யப்பட்டதாக என்னை நேற்று (14.10.2019)நேரில் சந்தித்தபோது என்னிடம் தெரிவித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தார். இது பாபா செய்த அற்புதம் தானே. ஜெய் ஜெய் சாய்ராம். Sai prakash. Cell :9884992226. பாபா செய்யும் ஒவ்வொரு அற்புதமும் ஈடு இணை இல்லாதது

Miracle : 61

பாபா யாருக்கு எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ அந்த நேரத்தில் அதை கண்டிப்பாக செய்து முடிப்பார். ஒரு கணவன் மனைவி, அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு மனைவியிடமிருந்து கணவன் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தார். நாளடைவில் மனைவியையே வெறுக்க ஆரம்பித்தார். பிறகு இருவருக்கும் சண்டை வர துவங்கியது. ஒருநாள் கணவன் தன் மனைவியிடம் எனக்கு உன்னுடன் வாழப்பிடிக்கவில்லை. நீ உன் வீட்டிற்கு சென்றுவிடு என்று வழுக்கட்டாயமாக அனுப்பி வைத்து விட்டார். இந்த தகவல் வந்ததும் பாபாவிடம் மனப்பூர்வமான வேண்டுதல் வைக்கப்பட்டது. அடுத்த 15 தினங்களில் அவரது கணவர் அவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வந்து பெண் வீட்டாரிடம் சமாதானம் பேசினார்கள். அவர் கணவரும் வந்து இனி இது போல் உன்னை அனுப்ப மாட்டேன். நீ இல்லாமல் நான் மிகவும் சிரமத்தை அனுபவித்து விட்டேன் உன் மீது நான் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன். என்னுடன் வந்து விடு என உறுக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். அவர் மனைவியும் சமாதானமாகி அவருடன் புறப்பட்டு விட்டார். இது பாபா வினால் ஏற்பட்ட மன மாற்றமும், அற்புதமும் அல்லவா? இனிஅந்த குடும்பம் நல் வாழ்வு வாழ நாம் அனைவரும் அவர்களுக்காக பாபாவிடம் நமது பிரார்த்தனையை பதிவு செய்வோம். ஜெய் ஜெய் சாய்ராம். Sai Prakash : Cell :9884992226.

Miracle : 62

பாபாவின் அற்புதங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது. பாபாவின் பல அற்புதங்களை தெரிந்து கொண்ட பக்தர்கள், தமது கோரிக்கைகளுக்கு மட்டும் பாபா ஏன் இன்னும் அற்புதம் நிகழ்த்தவில்லை. என அவரவர்கள் மனதில் நினைப்பதை பாபாவும் நன்கு அறிவார். ஒவ்வொருவருடைய கோரிக்கைகளும் நிறைவேறுவதற்கான கால நேரங்கள் உள்ளது. இதை பாபா மட்டுமே அறிவார். அவரவர்களுக்கான நேரம் வரும் போது பாபா நிச்சயமாக நிறை வேற்றுவார். அதுவரை பொறுமையாக பாபாவின் நாமத்தை உச்சரித்தபடி உள்ளவர்கள் உரிய நேரத்தில் அதற்கான பலனை பெறுவார்கள். ஒரு குடும்பத்தின் தலைவிக்கு தன் மகளுக்கு நீண்ட காலமாக வரன் தேடியும் அமையவில்லை என்ற கவலை இருந்தது . அந்த அம்மையார் என்னை தொடர்பு கொண்டு தன் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையவும் விரைவில் திருமணம் நடக்கவும் பாபாவிடம் வேண்டிக்கொள்ளுமாறு, கேட்டுக்கொண்டார். பாபாவிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது. பிறகு விஜயதசமி க்கு முன்னதாக திருமணம் நிச்சயமாகிவிடும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த அம்மையாரிடமிருந்து கிடைக்கப்பெற்ற செய்தி. பாபாவின் அருளால், விஜயதசமிக்கு முன்னதாகவே வரன் அமைந்து, திருமண தேதியும் நிச்சயிக்கப்பட்டு விட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது பாபா செய்த அற்புதம் தானே. அவர்கள் இல்லத் திருமணம். நன்கு நடை பெற்று அவர்களது மண வாழ்க்கை சிறக்க பாபாவிடம் நாமும் நம் வேண்டுதலை, பாபாவின் பாதத்தில் சமர்ப்பிப்போம். ஜெய் ஜெய் சாய்ராம். Sai Prakash : Cell :9884992226.
​ பக்தியுள்ள அப்பாவும், பரிதாபத்திற்குரிய மகளும். ஒரு தந்தை தன் ஒரே மகளை மிக செல்லமாக வளர்த்து வந்தார். தன் மகளுக்கு மூன்று வயது இருக்கும் தாயார் இறந்து விட்டார். பிறகு அக்குழந்தையின் தந்தை தன் மகளின் எதிர் காலம் கருதி மறுமணம் செய்து கொள்ளாமல், தன் மகளுக்காக இறை வழிபாட்டில் ஈடுபட்டு தினமும் கோவிலுக்கு சென்று தன் மகள் நல்வாழ்வு வாழ இறைவனிடம் தொடர்ந்து வழிபாடு செய்துவந்ததுடன் தன்மகளின் தேவை அறிந்து அவளை மிக செல்லமாக வளர்த்து வந்தார். அவளுக்காக தன் தேவைகளை எல்லாம் குறைத்துக்கொண்டு கொஞ்சம் சொத்துகளும் சேர்த்து வைத்தார். திருமணவயது வந்ததும் மிக கோலாகலமாக மகள் திருமணத்தையும், நடத்திவைத்தார். தன் சொத்துக்கள் அனைத்தையும் தன் மகள் பெயருக்கு மாற்றி எழதி வைத்தார். இவருக்கு வயதாகிவிட்டதால் அடிக்கடி இருமுவதும், படுத்த இடத்திலேயே மலம் கழித்தல் போன்றவற்றை தவிர்க்க இயலவில்லை. மகளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர் மகளுக்கு, இவர் உடல் நலமின்றி இவ்வாறு இருப்பது பிடிக்கவில்லை. அவர்உடைகளை, ஒருபையல் போட்டு. ஒரு அனாதை விடுதிக்கு அழைத்துச்சென்று அங்கே தந்தையை சேர்த்து விட்டு வெளியில் வந்தவள். உடல் நிலை மோசமானால், வீட்டிற்கு வந்து விட வேண்டாம். நான் பணம் அனுப்புகிறேன். இங்கேயே பாரத்துக்கொள்ளுங்கள் என சொல்ல வந்தவள். அங்கு நடந்த உறையாடலை கேட்டு ஓரமாக நின்றார். அந்த விவரம். அந்த விடுதி காப்பாளரும் வயதானவரே. அவர் அந்த தந்தையிடம் கேட்டார். அய்யா 25 ஆண்டுகளுக்கு முன் நீங்களும் உங்கள் மனைவியும் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து சென்றீர் களே அக்குழந்தை எப்படி உள்ளது எனக்கேட்டார். இறைவா. ஐயா அப்படி சொல்லாதீரகள். என் மகள் காதில் விழுந்து விடப்போகிறது. அவள் தாங்க மாட்டாள். எனக்கூறினார். இதைக்கேட்டதும், அப்பா என்று அலரியபடி தன் தந்தையின் காலில் வந்து விழுந்தார். அந்தமகள். அவள் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தபடிபடியே உதட்டில் சிரிப்புடன் இறைவனடி சேரந்து விட்டார்.தன் மகளுக்காகவே வாழ்ந்த அந்த அன்பு தந்தை. ஜெய் ஜெய் சாய்ராம். Sai Prakash : 9884992226. விடியலை நோக்கி. சாய்ராம். இந்த உலகத்தில் மனித இனம் தோன்றியது. அவன் தேவைக்காக அந்த இறைவனால் இயற்கை உருவாக்கப்பட்டது. காடு மலை என சுற்றி திரிந்தான். இயற்கையை தெய்வங்களாக வணங்கினான். இயற்கை அந்த நிலையில் காற்றும், நீரும், இல்லை என்றால் உயிர் வாழ முடியாது என்பதை அப்போதே உணர்ந்தான். இந்த உலகில் காற்று அடிப்பது, ஐந்து நிமிடங்கள் நின்று விட்டால், என்னவாகும். இந்த உலகமே அழிந்துவிடும். இதுவரை காற்றை கண்ணால் கண்டவர்கள், யாரேனும் உள்ளார்களா? அந்த காற்றை போன்றவர்தான் இறைவன். இறைவனை உணர மட்டுமே முடியும். அவ்வாறு உணர்ந்வர்களால் மட்டுமே அவரைஅறிய முடியும். இறைவன் இல்லாமல், இந்த உலகமும் இயங்காது. நம்மாலும் இயங்க முடியாது. இறைவன் தன்னை அறிந்தவர்களை நெறிப்படுத்தி அவர்களை நல்வழியில் வாழ வைக்கிறார். தன்னை அறியாதவர்ளை அவர்கள போக்கில் வாழவிட்டு, இறுதியில் அவரவர்களுக்கான பாடம் புகட்டுகிறார். ஆனால் தன்னால் படைக்கப்பட்ட யாரையும் அவர் வெறுப்பதில்லை. தீமைகள் அதிகரிக்கும்போது. தன்னில்இருந்து, பல மகான்களை உறுவாக்கி. நல்ல போதனைகளை வழங்குகிறார். அவ்வாறு உறுவாக்கப்பட்ட மகான்களை, நம்மால் கணக்கிட இயலாது. மனிதன் தனக்குத்தானே சுயநலமாக தங்களுக்குள் ஜாதி, மத, பேதங்களை உறுவாக்கி சண்டையிட துவங்கினான். இந்தநிலையில் நமக்காக இறை வடிவில் தோன்றியவரே, நம் சீரடி சாய்பாபா ​ இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களில் ஜாதி மதங்கள் எதுவும் இல்லை. அனைவரும் ஒன்றே என அறிவுறுத்தினார். அவர் மனிதனை நோக்கி இறைவனை நீ எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வழிபடு, ஆனால் இறைவன் ஒருவனே. நீஎந்த ரூபத்தில் வழிபட்டாலும்அந்த ஒரு இறைவனிடம் உன் வழிபாடு சென்று சேரும் என்பதை உணர்த்தினார். பணம் உள்ளவன் பணம் இல்லாதவன் என்ற பேதமில்லை. எவன் ஒருவன் எதன் மீதும் பற்றில்லாமல் நிம்மதியாக படுத்தவுடன் உறக்கம் கொள்கிறானோ அவனே தன்னையும் இறைவனையும் அறிந்தவன். மற்றவர்கள் எல்லாம். தன்னைத்தானே அறியாமலும் இறைவனை உணராமலும் துன்பத்தில் உழல்பவர்களே. இவ்வுலகிற்கு கொண்டுவந்தவர், யாரும் இல்லை. கொண்டு செல்பவர் எவருமில்லை. பாபாவின் அருளால் எது நமக்கான விடியலோ அதை நோக்கி பயணிப்போம். ஜெய் ஜெய் சாய்ராம். Sai Prakash : Cell :9884992226.
சாய்ராம். பாபாவின் பக்தர்களாகிய நமக்கு, நம் அத்தியாவசிய தேவைகளாகிய, வேலையின்மை, தொழில் முடக்கம், திருமணம், குழந்தை பேறு, கல்வியில் மேன்மை, பணப்பற்றாக்குறை, நல்ல வாழ்க்கைஅமையாமை, உடல் நலமின்மை, மன நிம்மதியின்மை, குடும்பத்தை பிரிந்து வாழக்கூடிய சூழல். இவ்வாறான பல துன்பங்களில் இருந்து அவ்வப்போது பாபா நமக்கான நல்லனவற்றை நமது தேவையறிந்து, நம் கோரிக்கைகளை, நிறைவேற்றி தருகிறார். பாபா நமக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்து விட்டால் அதை யாரால் தடுக்க இயலும். இவை அனைத்தையும் பாபாவிடம் இருந்து நாம் பெறுவதற்கான தகுதி சதாசர்வ காலமும் பாபாவின் நாமத்தை நம் மனதில் இறுத்தி, அவர்மீது முழு நம்பிக்கையுடன் பொறுமையாக இருப்பது மட்டுமே. ஜெய் ஜெய் சாய்ராம். Sai Prakash : Cell :9884992226.
சாய் ராம். இறைவன் மீது நம்பிக்கையும், அதற்கான பலனும்.பாபா தன் மீது நம்பிக்கை, வைத்து பொருமையாக இருக்கும்படியும் கூறுகிறார். அவ்வாறு இருக்கும் போது எது நமக்கு நல்லதோ அதை அவர் நமக்கு செய்வார். அது எவ்வாறு என்பதை கீழே காண்போம். ஒரு நாட்டை ஆண்டு வந்த அரசரிடம் ஒரு மந்திரி இருந்தார். அந்த மந்திரி மிகவும் இறை நம்பிக்கை உள்ளவர். நடப்பதெல்லாம் இறைவன் செயலே என நம்புபவர் எப்போதும் என்ன நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் எல்லாம் இறைவன் விருப்பப்படியே நடக்கிறது. என்று கூறுவார். ஆனால் அரசருக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. இருந்தாலும், மந்திரியின் சொல்லுக்கு தடை ஏதும் சொல்வதில்லை. ஒருநாள் அரசர் ஆப்பிள் ஒன்றை கத்தியால் வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அந்தக்கத்தி அவரது சுண்டு விரலில் பட்டு விரல் துண்டாகி கீழே விழுந்து விட்டது. அரசரால் வலி பொறுக்க முடியவில்லை. சிலர் ஓடிச்சென்று மந்திரியை அழைத்து வந்தார்கள். அவசரமாக வந்து இதைப்பார்த்த மந்திரி வழக்கம் போல் எல்லாம் இறைவன் விருப்பப்படியே நடக்கிறது. என்று கூறினார். விரல் வெட்டப்பட்டு வலியால் துடித்துக்கொண்டிருந்த மன்னருக்கு கோபம் வந்து விட்டது. நான் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறேன். நீ எனக்கு ஆறுதல் கூறாமல். இறைவன் விருப்பப்படி நடக்கிறது என்கிறாயே. எனக்கூறி உடனடியாக மந்திரியை சிறையில் அடைக்க உத்திரவிட்டார். சில நாட்கள் கழித்து. அரசர் காட்டில் வேட்டையாட தன் குழுவினருடன் புறப்பட்டார். காட்டில் ஒரு மானை வேட்டையாட துரத்திச்செனற அரசர் தன்னுடன் வந்த குழுவினரைப் பிரிந்து பக்கத்து நாட்டு காட்டுக்குள் சென்று அங்குள்ள காட்டு வாசிகளிடம் சிக்கிக்கொண்டார். அப்போது அவர்கள் காளி பூஜை நடத்திக்கொண்டிருந்தனர். அரசரை காளிக்கு பலியிட முடிவு செய்துவிட்டனர். அரசர் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அது அவர்களுக்கு விளங்கவல்லை. பலியிடுவதற்கு, முன்பாக, காட்டுவாசிகளின் தலைவன் வந்து பார்க்க வேண்டும். தலைவன் வந்து பார்த்தான். அவன் பலியிட சரியென்றுசொல்லும் நேரத்தில் அரசரின் சுண்டுவிரல் அவன் கண்ணில் பட்டது. உடனே அவன், தம் மக்களிடம் ஊனமுற்றவரை. பலியிடக்கூடாது இவரை விட்டு விடுங்கள் என்று கூறிவிட்டான்.நாடு திரும்பிய அரசர் உடனடியாக மந்திரியை விடுவித்தார். மேலும் மந்திரியிடம். என் விரல் வெட்டப்பட்டதால் இன்று நான் இறைவன் அருளால் உயிர் பிழைத்தேன். உங்களை சிறையில் அடைத்தபோது, இறைவன்விருப்ப படியே நடக்கிறது என்று கூறினீர்களே அதற்கு என்ன காரணம் என கேட்டார். அதற்கு மந்திரி நான் சிறையில் அடைக்கப்படாமல் இருந்திருந்தால், நானும் உங்களுடன் வேட்டைக்கு வந்திருப்பேன். காட்டில் ஒருபோதும் உங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டேன். நாம் இருவருமே காட்டு வாசிகளிடம் சிக்கி யிருப்போம். உங்கள் விரல் வெட்டப்பட்டதால் தங்களை விட்டு விட்டார்கள். எனக்கு ஊனம் ஏதும் இல்லாததால். நான் பலி கொடுக்கப்பட்டிருப்பேன். அதிலிருந்து என்னைக்காக்கவே. இறைவன் என்னை சிறையில் அடைக்கச் செய்தார். எனக்கூறினார். இது போலவே பாபாவும் நமக்கு பல்வேறு நன்மைகளை உரிய நேரத்தில் செய்தாலும் அதில் சிலவற்றை மட்டுமே நாம் அறி வோம். பலவற்றை நாம் அறிவதில்லை. இதன் மூலம் நம்பிக்கை, பொருமை எவ்வளவு முக்கியம் அதனால் என்ன நண்மை என்பதை நாம் உணரலாம். ஜெய் ஜெய் சாய்ராம். Sai Prakash : Cell :9884992226.

Miracle : 63

சாய் ராம். கண் திறந்த பாபா. பாபா எப்போதுமே பக்தர்களுக்காக வே, அவர்களின் வாழ்விற்காகவே. தான் இறந்தும் வாழும் தெய்வம் அவர். ஒருநாள் என் கனவில் அவர் தோன்றினார். அதாவது ஒரு கோவில் அந்த கோவலின் மேடையில் 5'.6'' உயரத்தில் நல்ல வெள்ளை மார்பிள் கல்லில் இரண்டு கண்களையும் மூடியபடி தியானத்தில் அமர்ந்துள்ளார். அவருக்கு எதிரில் நான் மட்டுமே. அவர் எதிரில்பாபாவை வணங்கியபடி நின்று கொண்டிருக்கிறேன். நான் அவரைப்பார்த்து பாபா நீங்கள் தானே என் உயிர், என் உயிரையே உங்களிடம் தானே ஒப்படைத்திருக்கிறேன்.நீங்கள் இவ்வாறு கண்மூடி தியானத்தில் இருக்கிறீர்களே. கண்திறந்து என்னை ஒரு முறையாவது பார்க்கக்கூடாதா? என கண்களில் நீர் வடிய அவரை பார்த்தபடியே நிற்கின்றேன். திடீரென சிலையாக இருந்த பாபாவின் கண்களை மட்டும் நமது கண்களைப்போல அப்படியே திறந்தார். கண்களா அவை, அற்புதம், ஆனந்தம். ஆயிரமாயிரம் அர்த்தங்கள் கூறும் அதிசய கண்கள். எந்த ஜென்மத்திலும் பார்க்க முடியாத அற்புத மான கண்கள். என்ன பேறு பெற்றேன் நான் இந்த கண்களை காண்பதற்கு. நான் பெற்ற பேறு, பாபா வின்கண்களை தத் ரூபமாக பார்த்தது. பாபாவின் திருக்கரங்களில் என் நெற்றியில் உதிவைத்தது. இவ்வுலகில் இந்த ஜென்மத்தில் இதை விட என்ன பாக்கியம் வேண்டும் எனக்கு. இந்த ஜன்மம் எடுத்ததன் பலனை, நான் முழுமையாக அனுபவித்த உணர்வை உணர்கிறேன். இனி முழுமையாக பாபா கோவில் திப்பணியை முடித்து, கும்பாபிஷேகம் செய்து பாபா வின் பெயரில் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களை செய்வது மட்டுமே ​ பாபாவிடம் நான்வைக்கும் ஒரே கோரிக்கை. நிச்சயம் விரைவில் பாபா நிறை வேற்றுவார். ஜெய் ஜெய் சாய்ராம். Sai Prakash : Cell:9884992226.
சீரடி சாய் நாதா! கண்கண்டதெய்வமே, கலியுக்கடவுளே, பக்தரை அரவணைக்கும் பரந்தாமனே, யாருக்கும் நிகரில்லாமல் உயர்ந்து நிற்பவனே, தன்னிகரில்லா தர்மசீலனே. என்னுயிர் நாயகனே, தனக்கென ஏதுமற்றவனே, உதி கொண்டு உயிர் காக்கும் உத்தமனே, விதியைக்கூட வேறறுக்கும் வித்தகனே, கேட்ட வரமருளும் நாயகனே, எளியோர்க்கும் எளியவனே. அன்னத்தை தானமாகவழங்கும் அருட்காவியனே. உலகெங்கும் நீக்கமற நிறைந்தவனே, அன்புக்கு அடியவனே. அளவில்லா ஆனந்தம் அளிப்பவனே, தேனிசைக்கு செவிசாய்ப்வனே, பக்தர் மனதில் தென்றலாய் உழல்பவனே, சாய் சாய், என்றால் சகலமும் தருபவனே, பாபா என பாதம் பணிந்தால் பக்கத்தில் அழைப்பவனே, நாட்டியமாடிடும் நாயகனே, என்றென்றும் நின் திருவடியே சரணமய்யா. Sai Prakash : Cell:9884992226.

சாய் நாதா..
இவ்வுலகில் எமைபடைத்தவரே.
எம் உள்ளமெங்கும் நிறைந்தவரே,
உலகெங்கும் உறைந்தவரே,
உத்தமராய் வாழ்ந்தவரே,
உலகம் போற்றும் உத்தமரே.
பக்தர்களின் பணியாளரே,
பார்வைக்கு எளியவரே,
உமை நினைப்போரின் காவலரே,
துயர் தீர்க்கும் தூயவரே.
கண்ணின் மணியாய் திகழ்பவரே,
காற்றோடு கலந்து உழல்பவரே,
பலகோடி பக்தர் களைக்கொண்டவரே,
சீர்மிகு சீரடி யின் நாயகரே,
அன்னம் தரும் அற்புதனே,
உதி தந்து உயிர் காக்கும் காவலரே,
எண்ணியவுடன் எதிர்வந்து நிற்பவரே.
கிழிந்த துணி உடுத்தும் கோமகனே,
புகழுக்கு அப்பாற்பட்ட புண்ணியனே,
நெருப்பில் விழுந்த குழந்தையை கை கொண்டு காத்தவனே,
அற்புதம் நிழத்தி அன்பர்களை ஆட் கொள்பவனே.
என்றென்றும் நின் பாத கமலமே சரணமய்யா.
ஜெய் ஜெய் சாய்ராம்.
Sai Prakash : Cell :9884992226.

சாய் நாதா ! என்னை ஏன் படைத்து ஏற்றுக்கொண்டாய்உன்னருகே, முன் பிறந்த ஜென்மங்களில், புண்ணியங்கள் பல கோடி செய்தேனோ நான்தானே, என்ன தவம் செய்தேனோ, ஏற்றமிகு பாக்கியம் பெற, அய்யா உன் திருவடியை அடியேனும் தொட்ட தனால், அடைந்தேனே பாக்கியத்தை அனுதினமும் உன்மூலம், உறைவிடமாய் ஆக்கி விட்டாய் உன் மனதை எனக்காக, நண்மைகளை செய்திடவே நாடும் மனம் எனக்களித்தாய், உண்மையாய் நடந்தெனையே உயர்வடைய செய்து விட்டாய், தீமை செயும் மனத்தவரை ஒருநாளும் ஏற்றதில்லை நீதானே, உனை மனமுறுகி நினைப்போரை அனுதினமும் காத்தருளும் காவலனே, பார்வைக்கு எளியோனே, உலகை ஆழ்பவனே, உயர் காக்கும் உயர்ந்தோனே, மனித உருவில் ஜன்மங்கள் பல கண்டவனே, உனக்காக கோவில் கட்ட எனை தேர்ந்து அழைத்தவனே, அன்பனே நீ இங்கு அமரந்து தானே, அன்பர் அனைவர்க்கும், அருள் மழை பொழிந்திடுவாய், ஆறுதல் அளித்திடுவாய், அன்னமும் அளித்திடுவாய், அவனியில் அனைவரும் நலமுடன் வாழ்ந்திடவே நல்லருள் பொழிந்திடுவாய் நாயகனே என் சாய் நாதா. ஜெய் ஜெய் சாய்ராம். Sai Prakash : Cell :9884992226.
சாய்ராம். சாய் பக்தர்களின் ஒவ்வொரு செயலிலும், அவர் நம் கூடவே இருக்கிறார். நாம் செய்கின்ற செயல் அனைத்தும் அவர் அறிவார். அவர் அறியாமல் நாம் எதையும் செய்திட இயலாது. அது புண்ணிய செயல்களாக இருந்தாலும் அல்லது பாவ செயல்களாக இருந்தாலும் அவர் பார்வையில் இருந்து தப்பாது.யாருக்கும் தெரியாமல் நாம் செய்வதாக நினைக்கும் காரியங்கள் கூட அவர் பார்வையில் இருந்து தப்பாது. எனவே மற்றவர்க்கு நல்லவைகளை மட்டுமே செய்வோம், அதன் புண்ணியத்தை பாபாவின் பாத கமலங்களில் அர்ப்பணிப்போம். பிறவிப்பயனை அடைவோம். ஜெய் ஜெய் சாய்ராம். Sai Prakash : Cell:9884992226.

சாய் நாதா!
நின் பக்தன் தன்னை உணர்ந்து,
தன்னில் உன்னை அறிந்து,
உள்ளம் மகிழ்ந்து,
நின் திருவடி பற்றி,
அறவழி நடந்து,
அனைவரிடமும் அன்பை பொழிந்து,
அதன்மூலம் நினதருளைப் பெற்று
தன் துயரம் மறந்து, துக்கம் தீர்ந்து,
பெற்றோரின்பெருமை உணர்ந்து,
அவர்களை பேணிக்காத்து,
அனைவரையும் அரவணைத்து,
அன்புமழை பொழிந்து,
பிறர் துயர் துடைக்க,
நின் திருவடியில் வேண்டி நின்று,
தமக்கென ஏதும் கேளாமல்,
நின் திருவருளால்,
கொண்டுவராததைகொண்டு செல்ல இயலாதென உணர்ந்து,
மண், பெண், பொன் ஆசைகளை துறந்து,
நீயே கதியென நின் திருவடி பற்றி,
வாழுகின்ற வாழ்க்கை தவிர வேறென்ன வேண்டும்,
இப்புவியில் பிறந்ததன்பேறு பெற,
இப்பிறவியில் நின்மலர்ப்பாதம் பணிந்தடவே. என்ன பேறு பெற்றேன் என் பெருந்தகையே
​ என் சாயிநாதா!
ஜெய் ஜெய் சாய்ராம்.
Sai Prakash : Cell :9884992226.

.
  • Contact Us

    Shirdi Saibaba Charitable Trust,
    Kathirichery Village,
    Karunguzhi(Via),
    Madurantakam(TK),
    Kancheepuram - 603 303,
    Tamilnadu, India.
    Phone
    Sai Prakash : +91 9884992226
    Rajesh Prakash : +91 9884992229
    Email: rajeshprk84@gmail.com
  • Our Mission

    Get donations from graceful hearts. Meticulous planning for the collected donations / funds to reach the poor and destitute. Always striving hard to do service to the society in the path shown by “SAIBABA”.